Loading ....

MrJazsohanisharma

11th tamil- notes of lesson-june 2025 - 3rd week- 11ஆவது வகுப்பு-தமிழ்-பாடக்குறிப்பேடு-ஜூன்2025-3ஆவது வாரம்-

 ஜூன் 2025,  மூன்றாவது வாரம் - தமிழ் - 11 ஆவது வகுப்பு     

வகுப்பு         : 11

பாடம்         : தமிழ்

நாள் : 16/06/2025  - 20 /06/2025

பருவம் : முதல்பருவம் 

இயல் : 1  ( என்னுயிர் என்பேன் ) 

அலகு : i ) கவிதைப்பேழை

ii ) விரிவானம் 

பாடத்தலைப்பு :

              i ) கவிதைப்பேழை

ஒவ்வொரு புல்லையும்  - இன்குலாப்

ii ) விரிவானம் 

இசைத்தமிழர் இருவர்

பாடவேளை : 4

பக்க எண் : 8 முதல் 12 வரை 

கற்பித்தல் நோக்கங்கள்

1) உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் மதிக்கப்பட வேண்டியவை என்பதை உணர வைத்தல். 

2) எல்லா சமயங்களும் போதிக்கும் அன்பின் மகத்துவத்தை அறிய வைத்தல்.

3) ‘மனிதம்’என்பதன் முக்கியத்தை உணர வைத்தல்.

4) இசைத்தமிழர்களான, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இவர்களின் தனித்திறனை உணர வைத்தல் 

5)இசைத்தமிழர் இருவரின் இசைப்பயணத்தை அறிய வைத்தல் 

சிறப்பு நோக்கங்கள்

1) எளிய மக்களுக்கான எழுத்தை வெளிப்படுத்தும் இன்குலாப் அவர்களின் இயற்கையை நேசிக்கும் குணத்தைப் புரியவைத்தல்.

2) எளிய மக்களின் உணர்வுகளைக் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் திறனைப் பெற வைத்தல்.

3) வாழும் காலத்து ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோரை இசை முன்னோடியாக ஏற்றுக் கொள்ள வைத்தல்

4) இசைத்தமிழர்களின் சினிமா மற்றும் பிற துறை இசை ஆர்வங்களை அறிய வைத்தல்.

கற்பித்தல் திறன்கள்

1) பாடப்பகுதியை அறிமுகப்படுத்தல் திறன்

2) விரிவுரைத் திறன்

3) எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன்

4) கேள்விகள் கேட்டல் திறன்

5) அறிக்கைகள் முலம் விளக்குதல் திறன்

6)காட்சிப்படுத்தல் திறன்

7) வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல் திறன்

8) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான ஒவ்வொரு புல்லையும், இசைத்தமிழர் இருவர் ஆகியவற்றில் எந்தப் பாடப்பகுதிக்கு எத்திறன்கள் பொருந்துகிறதோ அத்திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.

கற்பித்தல் நுண்திறன்கள்

1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்

2.சரளமாக வினாக்கள் கேட்டல்

3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்

4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்

5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்

6. பாடம் முடித்தல்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

பல்வகைத் துண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் மனிதம் தேடும் சமுகப் பார்வையையும், இசைவழியாகச் சாதித்த இரு இசையாளர்களைக்

குறித்தும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்கள் மூலம் சமுகக் கட்டுப்பாட்டின் இன்றைய சூழலைக் கேட்டறிந்து ‘ஓவ்வொரு புல்லாய்’ பாடப்பொருளுக்கு ஏற்ப அறிய வைத்தல்.

மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும் திருப்பு கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.

ஆயத்தப்படுத்தல்

1) உலகில் வாழும் அனைவருமே ‘மனிதன்’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்.

2) மனிதருள் இருக்கும் சாதி, மத, இன  வேறுபாடுகளைக் குறித்து விரிவுரைத்திறன் மூலம் விளக்குதல்.

3) மனிதம் என்ற ஒற்றைப் பண்பையும் , இசைத் தமிழர்களான இளையராஜா,

ஏ. ஆர்.ரகுமான் ஆகியோர் செய்தள்ள செயல்பாடுகளையும் பல்வேறு எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

அறிமுகம்

பாடப்பகுதியைப் புரிய வைக்க எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல்  நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடப்பகுதிகளை  அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

ஆர்வமூட்டல்

1. ‘மனிதம்’ ஏன் முக்கியமானது என்பது பற்றி எடுத்துக் கூறுதல்.

2. சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையின் வலிமையை எடுத்துக் கூறுதல்.

3.உலகில் இருக்கும் அனைத்துப் பொருள்கள் மீதும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதை பல நிகழ்வுகள் மூலம் கூறுதல்.

4) கவிஞர் இன்குலாப் என்ற சாகுல்அமீது பற்றிய செய்திகளைக் கூறுதல்.

5) இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் இசையமைத்த ஒரு சில திரைப்படங்களின் திரையிசைப் பாடல்களைக் கூறுதல். 

துணைக்கருவிகள்

i) பாடம் தொடர்பான காணொலி

ii) பாடம் தொடர்பான PPT

iii) இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் திரையிசைப் பாடல்களில் தேசிய விருது பெற்ற பாடல்கள் காணொலி

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள்

ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்களைப்பயன் படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துப் பாடப்பகுதிகளைளயும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.

கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியின் துணைத் தலைப்புகளில் இருக்கும் பத்திகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.

மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.

பாடப் பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.

மாணவர் செயல்பாடுகள்

1) பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல், வகுப்பறையில் வாசித்தல்

2)ஆசிரியர் தரும் கலந்தரையாடல் மற்றும் குலச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல்

3) பாடம் தொடர்பான செய்திகளைத் தயாரித்தல்

4) ‘மானிடம்’ குறித்த கட்டுகரைகளைத் தேடிப் பார்த்து வாசித்தல்

பாடப்பொருள்

i) கவிதைப் பேழை 

ஒவ்வொரு புல்லாய் 

இன்குலாப் -  சாகுல் அமீது -கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு - ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்.

ஒவ்வொரு புல்லையும்  பெயர் சொல்லி அழைக்கவும்- பறவைகளோடு எல்லை கடக்கவும் -  கல்லையும் மண்ணையும் தெரிந்த பெயர் சொல்லி அழைக்கவும் -  ஓரறிவு புல்லையும் -  ஐந்தறிவு பறவையும் -  உயிரற்ற கல், மண் இவற்றோடு தோழமை, சமத்துவம்.

மத வேறுபாடு மறந்து -  சமத்தவம் பேணுதல், இனச் சமத்துவம் நிலவ வேண்டும் -  மானுடம் வேண்டும் - பிரிவினைச்  சுவரில்லாத சமத்துவமான மனித நேயம் வேண்டும்.


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

ii) விரிவானம்

இசைத்தமிழர் இருவர்

சிம்பொனித் தமிழர்

- தேனி மாவட்டம் - பண்ணைப்புரம்- இயற்பெயர் இராசையா- இசைமேதை - அறிமுகம் அன்னக்கிளி திரைப்படம்

-'எப்படிப் பெயரிடுவேன் ' இசைத் தொகுப்பு, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை’ இசைத்தொகுப்பு புதிய முயற்சி.

- இந்தியா 24 மணி நேரம் ஆவணக் குறும்படப் பின்னணி இசை

- திருவாசகப் பாடலுக்கு 'ஆரட்டோரியா' என்னும் இசை வடிவம்

- இரமண மாலை, இளைய ராஜாவின் கீதாஞ்சலி  இசைத் தொகுப்பு, கன்னட மொழியில் ‘மூகாம்பிகை' இசைத் தொகுப்பு

- ஆதிசங்கரரின் ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ பாடலுக்கு இசை

- பஞ்சமுகி- செவ்வியல் இராகம்

- மகாத்மா காந்தியின் 'நம்ரதா கே சாகர்' பாடலுக்கு இசை

- இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளிலும் இசை

- ஆசியாவிலேயே முதன்முதல் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவம் உருவாக்கல்-  இசை உருவாக்கம். 13 நாள்

- பத்ம பூஷன் விருது, தேசிய விருது (பல முறை) சிறந்த பின்னணி இசைக்கான

தேசிய விருது, கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது(மத்திய பிரதேசம்) நிஷா கந்தி சங்கீத விருது (கேரளா)

ஆஸ்கர் தமிழர்

ஏ.ஆர். ரகுமான் தந்தை - ஆர் கே. சேசர்-  மலையாளத் திரைப்பட இசைக் கலைஞர்-  தன் தந்தையின் இசைப் பயணத்தில் பயணித்தவர் - தந்தை இறந்ததால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்.

- 1992 -இல் ‘ரோஜா' திரைப்படம் மூலம் அறிமுகம்-  முதல் படத்திலே'தேசிய விருது' பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளார்.

- ‘வந்தே மாதரம்' 'ஜன கண மன' இசைத் தொகுதிகள் நவீன இசைவடிவில் நாட்டுப் பற்றை மிளிரச் செய்தன.

- மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்தியப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் - இந்தித் திரைப்படங்கள்.

- மேலைநாட்டுத் திரைப்படங்கள், நாடகங்கள் , திரையிசையில் 'சூஃபி’ இசை அறிமுகம்

- ‘ஸ்லம்டாக் மில்லியனார் 'திரைப்படத்தின் இசைக்காக 'கோல்டன் குளோப்’ விருது பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் இந்தியர்.- அதே படம் கிராமிய விருதையும் பெற்றது.

- 2009- ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

-       இந்திய அரசு               பத்ம பூஷண் விருது,

தமிழ்நாடு அரசு                   -     கலைமாமணி விருது

கேரளம்                           -     தங்கப் பதக்கம்

உத்திரப்பிரதேசம்               -     ஆவாத் சம்மான் விருது

மத்தியப் பிரதேசம்             -     லதா மங்கேஷ்கர் விருது

மொரீஷியஸ்           -     தேசிய இசை விருது

மலேசியா                   -     தேசிய இசை விருது

ஸ்டான்ஃபோர்ட்

பல்கலைக்கழகம்          -     சர்வதேச இசை விருது

வலுவூட்டும் செயல்பாடுகள்

ஒவ்வொரு புல்லையும் பெயர்ச் சொல்லி அழைப்பேன் கவிதையில் வலியுறுத்துகின்ற தோழமை, சமத்துவம், இனச்சமத்தவம், மானுடம், மனித நேயம் ஆகிய கருத்துகளைக் கற்பித்தல் வேண்டும்.

இசைத்தமிழர் இருவரின் இசைப்பயணங்களையும் இருவரும் கையாண்ட இசைப்பாணிகளையும் இருவரின் இசைக் குறித்த தனித் திறமைகளையும் எடுத்துக் கூறிய பாடத்தின் கருத்திற்கு வலுவூட்டுதல் வேண்டும்.

குறைதீர் கற்பித்தல்

பாடப் பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப் பகுதியின் நோக்கம் புரியவும், மனிதநேயம், சமத்துவம், இசைப்பயணம் ஆகிய பாடப்பகுதியின் முக்கிய பகுதிகள் தெளிவாகத் துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலமாகவும் புரிய வைத்தல் வேண்டும்.

கற்றல் விளைவுகள்

1.’ஒவ்வொரு புல்லையும்’ கவிதை மூலம் மானுடம், மனித நேயம் இவற்றை அறிவதன் மூலம் சமுகத்தில் அவற்றைக் கடைப்பிடிக்கும் திறனைப் பெறுதல்.

2. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அன்பு செய்யும் அறிவினைப் பெறுதல்.

3. இசையால் வென்ற இரு தமிழர்களை அறிந்தன் மூலம் தங்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தித் தங்களை அடையாளப் படுத்தும் திறனைப் பெறுதல்.

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS

1) இவ்வொரு புல்லையும்' கவிதை நூலின் ஆசிரியர் பெயர் என்ன?

2) இரண்டு ஆஸ்கர் விருதினைப் பெற்ற தமிழர் யார்?

நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS

1) இன்குலாப் பற்றிக் குறிப்பு வரைக.

2) இளையராஜா அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?

உயர்தரச்சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS

1) சமுகத்தில் மானுடத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் வளர்ச்சிக் குறித்து உன் சிந்தனையை எழுதுக.

2) இன்றைய சமுகத்திற்குக் கவிஞர் இன்குலாப்பின் சிந்தனை தேவை என்பதை நிறுவுக.

3) சிம்பொனி தமிழர், ஆஸ்கர் தமிழர் இருவரும் ஆற்றிய இசைப் பணிகளை ஒப்பிட்டு விவரி.

தொடர் பணி

i) ‘மனித நேயம்’ குறித்த கவிதைகளைத் திரட்டி வருப்பில் வாசித்தல்

ii) தமிழில் வெளியாகியுள்ள பிறந்தநாள் பாடலை நண்பர்களுடன் பாடுதல்.


Post a Comment

Previous Post Next Post