Loading ....

MrJazsohanisharma

த-12th tamil-notes of lesson-june 2025 -3rd week-12ஆம் வகுப்பு-தமிழ்-ஜூன்2025-3ஆவது வாரம்-பாடக் குறிப்பேடு-tamilamuthu 2020- தமிழமுது 2020

 ஜூன் 2025,  மூன்றாவது வாரம் - தமிழ் - 12 ஆவது வகுப்பு     

வகுப்பு         : 12

பாடம்         : தமிழ்

நாள் : 16/06/2025  - 20 /06/2025

பருவம் : முதல்பருவம் 

இயல் : 1  ( உயிரினும் ஓம்பப் படும் ) 

அலகு : i ) கவிதைப்பேழை

ii ) விரிவானம் 

பாடத்தலைப்பு :

             i ) கவிதைப்பேழை

இளந்தமிழே - சிற்பி பாலசுப்பிரமணியம்

ii ) விரிவானம் 

தம்பி நெல்லையப்பருக்கு  - பாரதியார் 

பாடவேளை : 4

பக்க எண் : 8 முதல் 12 வரை 

கற்பித்தல் நோக்கங்கள்

1)  வெவ்வேறு காலக் கட்டங்களில் மொழியின் சிறப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிய வைத்தல். 

2) பாரதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமுக நிலையை உணர வைத்தல். 

3) பாரதியின் கடிதம் வாயிலாக மொழியின்  செறிவை அறிய வைத்தல்.

சிறப்பு நோக்கங்கள்

1)தமிழ்மொழியின்  இளமைக்கான காரணத்தை அறிய வைத்தல்.

2) தமிழ்மொழியின் மூலம்  எவற்றையெல்லாம் பாட முடியும் என்பதை அறிய வைத்தல்.

3) தமிழின் பழமை நலம் குறித்து அறிய வைத்தல்.

4)  பழமை நலம் பெற தமிழ்மொழி அடைய வேண்டிய மாற்றங்கள் பற்றி அறிய வைத்தல்.

5) கடிதங்களில் கையாளப்படும் மொழியாட்சியின் வேறுபாடுகளை அறிதல்.

6) பாரதியின் மொழி மற்றும் சமுக ஈடுபாட்டை அறிய வைத்தல்.

கற்பித்தல் திறன்கள்

1) பாடப்பகுதியை அறிமுகப்படுத்தல் திறன்

2) விரிவுரைத் திறன்

3) எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன்

4) கேள்விகள் கேட்டல் திறன்

5) அறிக்கைகள் முலம் விளக்குதல் திறன்

6)காட்சிப்படுத்தல் திறன்

7) வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல் திறன்

8) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான  இளந்தமிழே ,தம்பி நெல்லையப்பருக்கு ஆகியவற்றில் எந்தப் பாடப்பகுதியின் கருத்துருக்கு  எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தெந்தத்  திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

கற்பித்தல் நுண்திறன்கள்

1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்

2.சரளமாக வினாக்கள் கேட்டல்

3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்

4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்

5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்

6. பாடம் முடித்தல்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

பல்வகைத் துண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் தமிழ்மொழியின் தொன்மை, காலங்காலமாகத் தமிழ்மொழியின் வளர்ச்சி,  இன்றும் இளமையோடு இருக்கும் தன்மை பற்றியும், பாரதியின் காலத்தில் இருந்த ஆண்  - பெண் வேறுபாடு மற்றும் தமிழ்மொழியின்  அன்றைய நிலை குறித்தும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்கள் மூலம் தமிழ்மொழி இன்னும்  அடைய வேண்டிய மாற்றங்கள் மற்றும் சமுகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் புரிய வைத்தல். 

மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும் திரும்ப  கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.

ஆயத்தப்படுத்தல்

1) தமிழ்மொழியின் பழமை சிறப்புகளை அறிமுகப் படுத்துதல். காலந்தோறும் தமிழ் மொழி அடைந்துள்ள மாற்றங்களைப் பல்வேறு எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

2) பாரதி எழுதிய கடிதத்தின் பிரதியைக் காட்சிப்படுத்திக் காட்டுதல்.

3) தமிழ்மொழி இன்னும் வளர மேற்கொள்ள வேண்டிய செய்திகளைப் பல்வேறு தகவல்களைக்   கூறுவதன் மூலம் விளக்குதல்.

அறிமுகம்

பாடப்பகுதிகளைப் புரிந்து கொள்ள  எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல்  நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடப்பகுதிகளை  அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

ஆர்வமூட்டல்

1.தமிழன்னைக் காலங்காலமாக அடைந்து வரும் மாற்றங்கள் பற்றி எடுத்துக் கூறுதல்.

2. தமிழ்மொழி எவற்றையெல்லாம் முற்காலம்  முதல் இக்காலம் வரை பாடியுள்ளது என்பதை  எடுத்துக் கூறுதல்..

3.தமிழ்மொழியின் தனித்தன்மையைக் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துதல்..

4. சமுகத்தில் நிலவும் ஆண் பெண் வேறுபாடு குறித்த  கருத்துக்களைப் பற்றி மாணவர்களிடம் கேட்டல்.

துணைக்கருவிகள்

i) பாடம் தொடர்பான காணொலி

ii) தமிழின் சிறப்புப் பற்றிய காணொலி

iii)  ‘இளந்தமிழே’ பாடத்திற்கான PPT

iv) பரலி சு. நெல்லையப்பர் படங்கள்

v) ‘தம்பி  நெல்லையப்பருக்கு’ பாடத்திற்கான PPT

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

பாடப் பொருள் 

இளந்தமிழே

சிற்பி பாலசிப்பிரமணியம்-  நிலவுப்பூ - கவிஞர்,பேராசியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்-பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் - அக்கினி சாட்சி, ஒரு கிராமத்து நதி இருமுறை சமித்திய அகாதெமி விருது - ஆங்கிலம், கன்னடம் மலையாளம், மராத்தி, இந்தியில் மொழிபெயர்ப்பு -  ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரியநிழல், மௌன மயங்கங்கள், பூஜ்யங்களின் சங்கிலி முதலிய நூல்கள் - இலக்கியச்சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும்,  உரைநடை நூல்கள்.  மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு.

செம்மை நிறக்கதிரவன் - மலையில் மறைதல் - வானம் செம்மை நிறப் பூக்காடு - கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்-

முத்துமுத்தாய் வியந்துபாட தமிழின் துணை  வேண்டும்.

* கவிதை பசிக்குத் தமிழே உணவு - பாண்டியரின் சங்கத்தில் இருந்தவள் - பாரி போன்ற வள்ளல்களைத் தந்தவள்-  பழமை மீண்டும் உருவாகத் தமிழ்த்தாயே குயிலினைப் போல் கூவி வரவேண்டும் -கூண்டை உடைத்து வெளிவரும் சிங்கம் போல் குளிர் பொதிகைத் தென்தமிழே சீறி வா! வா!

இலக்கணக்குறிப்பு

செம்பரிதி

செந்நிறம்                     - பண்புத்தொகைகள்

செந்தமிழ் 

சிவந்து                             - வினையெச்சம்

வியர்வைவெள்ளம்     - உருவகம்

முத்துமுத்தாய்               -அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன் 

சாய்             -    பகுதி. 

ப்                 -     சந்தி. 

ப்                 -    எதிர்கால இடைநிலை, 

ஆன்           -     படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.


விம்முகின்ற = விம்மு + கின்று + அ 

விம்மு     -     பகுதி,

கின்று     -     நிகழ்கால இடைநிலை 

             -     பெயரெச்ச விகுதி.


வியந்து  =   விய + த் ( ந் ) +  த் + உ  

விய         -    பகுதி 

த்             -     சந்தி (ந் ஆனது விகாரம்)  

த்             -     இறந்தகால இடைநிலை 

            -     வினையெச்ச விகுதி.


இருந்தாய்  = இரு + த் (ந் ) + த்  + ஆய்

இரு         -     பகுதி 

த்                  சந்தி  ( ந்  ஆனது விகாரம்) 

த்              -     இறந்தகால இடைநிலை 

ஆய்         -     முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

செம்பரிதி = செம்மை + பரிதி

விதி: ஈறுபோதல் - செம் + பரிதி செம்பரிதி.

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வானமெல்லாம்.

உன்னையல்லால் = உன்னை + அல்லால்

விதி: இஈஐ வழி யவ்வும் உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்.

செந்தமிழே =  செம்மை + தமிழே

விதி: ஈறுபோதல் - செம் + தமிழே

விதி: முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே.

தம்பி நெல்லையப்பருக்கு

- நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்கள் -ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்

- 15 வயதில் எழுதிய கவிதைக் கடிதம் முதல் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை நம்மிடம் பேசுவத போல் உள்ளது.

- 7 ஆண்டுகள் இளையவர் நெல்லையப்பர்- தம்பியாகக் கருதினார்

- பரலி சு.நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர், இதழாளர், பதிப்பாளர்

- பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு- பதிப்பித்தார்- இதழ்களில் துணையாசிரியர்

மொழிப்பற்று

-  தமிழை  வளர்த்தலே கடமை

- புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய இன்பம்

- தமிழ்ப் பள்ளிக்கூடம் வீதிதோறும் வேண்டும்

- நவீன கலைகள் கற்பிக்க வேண்டும்

- பற்பல புதுமைகள் செய்து தமிழ்மொழியை வளர்த்தல் வேண்டும்

சமுகப்பற்று

-  ஆண், பெண் ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும்.

- ஆண், பெண் ஓருயிரின் இரண்டு தலைகள்- அவற்றில் தாழ்வைப் பார்க்க கூடாது.

- பெண்ணைத் தாழ்த்தியவன் கண்ணைக் குத்தியவன்.

-  பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தவன்.

- தொழில், வியாபாரம் வளர வேண்டும்.

- தொழிலுக்கான எந்திரங்கள் பெருகுதல்.

- இசை, சிற்பம்,இயந்திரம், பூமி வானம், இயற்கை சார்ந்த தமிழ்நூல்கள் பெருக வேண்டும்.

- முயற்சி ஓங்கி, நாடு செழிக்க வேண்டும்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள்

ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்களைப் பயன்படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துப் பாடப்பகுதிகளைளயும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.

கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியின் துணைத் தலைப்புகளில் இருக்கும் பத்திகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.

மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.

பாடப் பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.

மாணவர் செயல்பாடுகள்

1) பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல், வகுப்பறையில் வாசித்தல்

2)ஆசிரியர் தரும் கலந்தரையாடல் மற்றும் குலச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல்

3) பாடம் தொடர்பான செய்திகளைத் தயாரித்தல்

4) ‘மானிடம்’ குறித்த கட்டுகரைகளைத் தேடிப் பார்த்து வாசித்தல்

பாடப் பொருள்

வலுவூட்டும் செயல்பாடுகள்

1.’இளந்தமிழே' கவிதையில் கூறப்பட்டுள்ள தமிழின் வளமையையும், இன்றைய சூழலில் தமிழ் மொழியின் நிலையையும், தமிழ் மொழியின் பழமையையும் குறித்த கருத்துகளைக் கற்பித்தல் வேண்டும்.

2. பாரதி கூறும் தமிழ்மொழியின் தேவை, ஆண், பெண் சமத்துவம் இவற்றைப் பல்வேறு நிகழ்வுகள், எடுத்துக்காட்டுகள் மூலம் கூறுதல்

குறைதீர் கற்பித்தல்

பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் 

மாணவர்களுக்குப் பாடப்பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் 

தமிழ்மொழியின் பழமைநலம், தமிழ்மொழியைக் கொண்டு வியந்து பாடும் தன்மை, பாரதி சொன்ன தமிழ்மொழியின் தற்கால நிலை, சமுகத்திற்குத் தேவையான ஆண் பெண் சமத்துவம் ஆகிய  பாடக் கருத்துருக்களை மீண்டும் மீண்டும் துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.

கற்றல் விளைவுகள் 

1.தமிழின் பழமையை அறிவுதன் மூலம் தமிழ்மொழி குறித்த செய்திகளைச் கேகரிக்கும் திறன் பெறுதல்.

2.தமிழ் எளிய மக்களைப் பாட உதவும் என்பதை அறிந்ததன்  மூலம் எளிய மொழிநடையில் கவிதை எழுதும் திறன் பெறுதல்.

3. தமிழ்மொழியை வளர்க்க தன்னால் இயன்ற செயல்பாடுகளில் தன்னை உருவாக்குதல்.

4. ஆண், பெண் சமத்துவத்தை அறிவதன் மூலம் பாலன வேறுபாடுகளைக் களையும் மனம் பெறுதல்.

5. புதிய புதிய படைப்புகளை உருவாக்குதல்

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS

1.’செந்தமிழ்’  - இலக்கணக் குறிப்புத் தருக.

2. தம்பி நெல்லையப்பருக்குக்  கடிதத்தை எழுதியவர் யார்?

நடுத்தரச்சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS

1.சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக

2.சிற்பியின் நூற்களில் சிலவற்றை எழுதுக.

3. பரலி சு.நெல்லையப்பர் பற்றி எழுதுக.

4. பாரதி கடைசியாக யாருக்குக் கடிதம் எழுதினார்?

உயர்தரச்சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS

1.சிற்பியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்களின் பெயர் என்ன?

2. சிற்பியின் உரைநடை நூல்கள் எவை?

3. பாரதி எட்டையப்பருக்குக் கடிதம் எழுதும் போது அவருடைய வயது என்ன?

4.தமிழ்மொழியின் எளிமை, இனிமை குறித்த உனது கருத்தை விவரி.

5. ஆண், பெண் சமத்தவம் தேவை என்பதற்கு நீ தரும் கருத்துகளைக் கூறு.

தொடர்பணி

1) மொழி வாழ்த்து பாடல் ஏன் தேவை என்பதைக் கலந்துரையாடல் நடத்திச் செய்திகளைத் தொகுத்தல்

2) உனக்குப் பிடித்த தமிழறிஞருக்குக் கற்பனையாகக் கடிதம் எழுது.


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

Post a Comment

Previous Post Next Post