12 T/ OW- BB & GQP -25
இயல் - 1
புத்தக வினாக்கள்
இலக்கணத் தேர்ச்சி கொள் (புத்தகம் பக்கம். 16)
1. பிழையான தொடரைக் கண்டறிக. (பெ.ஆ.க-2.6 ,ஆகஸ்ட்20 22, மார்ச் 2024)
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது|
2.பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க (செப்2020, ஆகஸ்ட் 2022)
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
நம்மை அளப்போம் (புத்தகம் பக்கம்.17)
பலவுள் தெரிக.
1. ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல் (பெ.ஆ.க-1 , 3. மார்ச் 24)
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்தவமும் தமிழும்
விடை : ஈ) கிறித்தவமும் தமிழும்
2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது
( ஜூன் 2023 )
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது.
அ) 1 மட்டும் சரி ஆ) 1,2 இரண்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) 1, 3 இரண்டும் சரி
விடை : ஈ) 1, 3 இரண்டும் சரி
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க. (பெ.ஆ.க-1. ஆகஸ்ட 2022, மார்ச் 2024)
அ) அடிமோனை, அடி எதுகை ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை, அடிமோனை
விடை : இ) அடி எதுகை, சீர் மோனை
4. 'செம்பரிதி"... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
விடை : ஆ) நிலவுப்பூ
5. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி ஈ) திசை எட்டும்
விடை : இ) அஞ்சிறைத் தும்பி
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1.உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்னும் விதிக்கான சான்று
(அ.மா.வி. 2019)
அ) ஆங்கவற்றுள் ஆ) எத்திசை இ) வெங்கதிர் ஈ) பூம்பாவாய்
விடை : அ) ஆங்கவற்றுள்
2. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ( மே 2022 )
அ) தொல்காப்பியம் ஆ) வீரசோழியம்
இ) தண்டியலங்காரம் ஈ) முத்துவீரியம்
விடை : இ) தண்டியலங்காரம்
3. தண்டியலங்காரம்___________ என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
( மார்ச் 2023 )
அ) சூரிய நிழல் ஆ) வீரசோழியம் இ) காவியதர்சம் ஈ) முத்துவீரியம்
விடை : இ) காவியதர்சம்
4. ‘வெங்கதிர்’ இலக்கணக்குறிப்பு தருக.( செப் 2021 , மார்ச் 2023)
அ) பெயரெச்சம் ஆ) தொழிற்பெயர் இ) உரிச்சொல் ஈ) பண்புத்தொகை
விடை : ஈ) பண்புத்தொகை
5.மயிலை சீனியார் அவர்களின் அரிய ஆவணப் பணிகளில் ஒன்று இந்நூல்
( செப் 2020 )
அ) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ஆ) மறைந்து போன தமிழ் நூல்கள்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ஈ) அஞ்சிறைத் தும்பி
விடை : ஆ) மறைந்து போன தமிழ் நூல்கள்
6. 'வியந்து' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை
( பெ.ஆ.க - 3)
அ) வியந்து + உ ஆ) விய + த் +தத்+உ இ) விய +த்(ந்)+த்+உ ஈ) வியந்த + அ
விடை : இ) விய +த்(ந்)+த்+உ
7. கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கிய நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.( பெ.ஆ.க - 4)
அ) ஒரு கிராமத்து கதை ஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்து நதி ஈ) ஒரு புளியமரத்தின் கதை
விடை : இ) ஒரு கிராமத்து நதி
8. தமிழ்க்குயில் எவ்வாறு வர வேண்டும்? ( பெ.ஆ.க - 6)
அ) பாடி ஆ) சீறி இ) கூவி ஈ) ஆடி
விடை : இ) கூவி
9. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'இளந்தமிழே' பாடல் இடம் பெற்ற நூல்
( மார்ச் 2020)
அ) மஸ்னவி ஆ) நிலவுப் பூ இ) காவ்யதர்சம் ஈ) துறைமுகம்
விடை : ஆ) நிலவுப் பூ
10. "தமிழ்க்குயிலே! கூவி வா, வா!" எனக் கூறியவர்: ( மே 2022)
அ) சிற்பி பாலசுப்ரமணியம் ஆ) பாரதியார்
இ) சுரதா ஈ) பாரதிதாசன்
விடை : அ) சிற்பி பாலசுப்ரமணியம்
11. பாரதியார் நெல்லையப்பருக்கு, நம் பாடப்பகுதியில் உள்ள கடிதத்தை எங்கிருந்து எழுதினார். (பெ.ஆ.க.-3)
அ) எட்டயபுரம் ஆ) திருநெல்வேலி இ) புதுச்சேரி ஈ)சென்னை
விடை : இ) புதுச்சேரி
12. ‘தம்பி நெல்லையப்பருக்கு’ - கட்டுரையின் ஆசிரியர் (ஆகஸ்ட் 2022)
அ) பாரதியார் ஆ) உத்தம சோழன்
இ)பூமணி ஈ) ஐராவதம் மகாதேவன்
விடை : அ) பாரதியார்
13. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது என்று கடிதம் எழுதியவர். (பெ.ஆ.க .-1)
அ) நெல்லையப்பர் ஆ ) பாரதியார். இ) வாணிதாசன் ஈ) பாரதிதாசன்
விடை : ஆ) பாரதியார்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095