Loading ....

OW-12th Tamil-One word-Book Back-PTA Questions-Government Exam-March-September-July-2025-12th தமிழ்-ஒரு மதிப்பெண்- வினா விடைகள் --இயல் 1-

 12 T/ OW- BB & GQP -25


இயல்  - 1  

புத்தக வினாக்கள் 


இலக்கணத் தேர்ச்சி கொள் (புத்தகம் பக்கம். 16)

1. பிழையான தொடரைக் கண்டறிக. (பெ.ஆ.க-2.6 ,ஆகஸ்ட்20 22, மார்ச் 2024)

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்

ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது|

2.பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க (செப்2020, ஆகஸ்ட் 2022)

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

 ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது

ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்


நம்மை அளப்போம்  (புத்தகம் பக்கம்.17)

பலவுள் தெரிக.


1. ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல் (பெ.ஆ.க-1 , 3.  மார்ச் 24)

அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும்

இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்தவமும் தமிழும்

விடை : ஈ) கிறித்தவமும் தமிழும்

2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது 

( ஜூன் 2023 ) 

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது.

அ) 1 மட்டும் சரி ஆ) 1,2 இரண்டும் சரி

இ) 3 மட்டும் சரி ஈ) 1, 3 இரண்டும் சரி

விடை  : ஈ) 1, 3 இரண்டும் சரி

3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

     தன்னேர் இலாத தமிழ்!" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க. (பெ.ஆ.க-1. ஆகஸ்ட 2022, மார்ச் 2024)

அ) அடிமோனை, அடி எதுகை ஆ) சீர் மோனை, சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை, அடிமோனை

விடை : இ) அடி எதுகை, சீர் மோனை

4. 'செம்பரிதி"... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்

விடை : ஆ) நிலவுப்பூ

5. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு

இ) அஞ்சிறைத் தும்பி ஈ) திசை எட்டும்

விடை :   இ) அஞ்சிறைத் தும்பி


 அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல்  வினா - விடைகள்


1.உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்னும் விதிக்கான சான்று

(அ.மா.வி. 2019)

 அ) ஆங்கவற்றுள் ஆ) எத்திசை இ) வெங்கதிர் ஈ) பூம்பாவாய்

விடை : அ) ஆங்கவற்றுள்

2. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ( மே 2022 ) 

அ) தொல்காப்பியம்     ஆ) வீரசோழியம்

இ) தண்டியலங்காரம் ஈ) முத்துவீரியம்

விடை : இ) தண்டியலங்காரம்

3. தண்டியலங்காரம்___________  என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.

( மார்ச் 2023 ) 

அ) சூரிய நிழல் ஆ) வீரசோழியம் இ) காவியதர்சம் ஈ) முத்துவீரியம்

விடை : இ) காவியதர்சம்

4. ‘வெங்கதிர்’ இலக்கணக்குறிப்பு தருக.( செப் 2021 , மார்ச் 2023) 

அ) பெயரெச்சம் ஆ) தொழிற்பெயர் இ) உரிச்சொல் ஈ) பண்புத்தொகை

விடை : ஈ) பண்புத்தொகை

5.மயிலை சீனியார் அவர்களின் அரிய ஆவணப் பணிகளில் ஒன்று இந்நூல் 

( செப் 2020 )  

அ) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ஆ) மறைந்து போன தமிழ் நூல்கள்

இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ஈ) அஞ்சிறைத் தும்பி

விடை : ஆ) மறைந்து போன தமிழ் நூல்கள்

6. 'வியந்து' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை

( பெ.ஆ.க - 3)

அ) வியந்து  + உ ஆ) விய + த் +தத்+உ       இ) விய +த்(ந்)+த்+உ ஈ) வியந்த + அ

விடை :    இ) விய +த்(ந்)+த்+உ

7. கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கிய நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.( பெ.ஆ.க - 4)

அ) ஒரு கிராமத்து கதை ஆ) ஒரு கிராமமே அழுதது

இ) ஒரு கிராமத்து நதி ஈ) ஒரு புளியமரத்தின் கதை

விடை :   இ) ஒரு கிராமத்து நதி

8. தமிழ்க்குயில் எவ்வாறு வர வேண்டும்? ( பெ.ஆ.க - 6)

அ) பாடி ஆ) சீறி இ) கூவி ஈ) ஆடி

விடை : இ) கூவி

9. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'இளந்தமிழே' பாடல் இடம் பெற்ற நூல்

( மார்ச் 2020)

அ) மஸ்னவி ஆ) நிலவுப் பூ இ) காவ்யதர்சம் ஈ) துறைமுகம்

விடை : ஆ) நிலவுப் பூ

10. "தமிழ்க்குயிலே! கூவி வா, வா!" எனக் கூறியவர்: ( மே 2022)

அ) சிற்பி பாலசுப்ரமணியம் ஆ) பாரதியார்

இ) சுரதா ஈ) பாரதிதாசன்

விடை : அ) சிற்பி பாலசுப்ரமணியம்

11. பாரதியார் நெல்லையப்பருக்கு, நம் பாடப்பகுதியில் உள்ள கடிதத்தை எங்கிருந்து எழுதினார். (பெ.ஆ.க.-3)

அ) எட்டயபுரம் ஆ) திருநெல்வேலி இ) புதுச்சேரி ஈ)சென்னை

விடை : இ) புதுச்சேரி

12. ‘தம்பி நெல்லையப்பருக்கு’ - கட்டுரையின் ஆசிரியர் (ஆகஸ்ட் 2022)

அ) பாரதியார் ஆ) உத்தம சோழன்

இ)பூமணி ஈ) ஐராவதம் மகாதேவன்

விடை : அ) பாரதியார்

13. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது என்று கடிதம் எழுதியவர்.  (பெ.ஆ.க .-1)

அ) நெல்லையப்பர் ஆ ) பாரதியார். இ) வாணிதாசன் ஈ) பாரதிதாசன்

விடை : ஆ) பாரதியார்


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095




Post a Comment

Previous Post Next Post