Loading ....

NL-12th tamil- notes of lesson-july 2025 -1st week- 12ஆவது வகுப்பு-தமிழ்-பாடக்குறிப்பேடு-ஜூலை 2025-1ஆவது வாரம்-

 ஜூலை  2025,  முதல் வாரம்  - பாடக்குறிப்பு 

வகுப்பு         : 12

பாடம்         : தமிழ்

நாள் : ஜூலை முதல்  வாரம்

பருவம் : முதல்பருவம் 

இயல் : 2  ( பெய்யென பெய்யும் மழை ) 

அலகு : i ) உரைநடை

பாடத்தலைப்பு :

i ) உரைநடை

மதராசப்பட்டினம்

பாடவேளை     : 4

பக்க எண் : 21  முதல்  25 வரை 

கற்பித்தல் நோக்கங்கள்

1) வாழும் ஊர்களின் இயற்கை அமைப்பு, வரலாறு குறித்த தகவல்களைத் தொகுத்து எழுதும் திறன் பெறுதல்.

2) வாழும் ஊரின் புவி அமைப்பை அறிய வைத்தல்

3. சென்னை என்னும் நகரம் எவ்வாறு உருவானது என்றும் சென்னை நகரின் பண்பாட்டு வளர்ச்சியும் பற்றி அறிய வைத்தல்.

சிறப்பு நோக்கங்கள்

1. சென்னையின் தென்மை, அதன் வரலாறு ஆகியவற்றை அறிய வைத்தல்.

2. அயலவர் குடியேறிய வரலாறை அறிய வைத்தல்.

3. நகரம் எவ்வாறு உருவானது என்பதை வரலாற்று அடிப்படையில் புரிய வைத்தல்.

4. சென்னையில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள்,ஓடைகள் ஆகியவற்றை அறிய வைத்தல்.

5. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலைப் பாணியில் அமைந்த கட்டடங்களைப் பற்றி அறிய வைத்தல்.

6.சென்னையின் போக்குவரத்து, மற்றும் சென்னை அறிவின் நகரம் ,பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ள நகரின் கட்டமைப்பை அறிய வைத்தல்.

7. சென்னை இன்று அடைந்துள்ள மாற்றங்கள் பற்றிய அறிய வைத்தல்.

8.சென்னையில் உள்ள நூலகம் பற்றிய அறிய வைத்தல்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

கற்பித்தல் திறன்கள்

1. பாடப் பகுதிகளை அறிமுகப்படுத்தல்

2.விரிவுரை

3. எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்

4.கேள்விகள் கேட்டல்

5. அறிக்கைகள் மூலம் விளக்குதல்

6. காட்சிப்படுத்துதல்

7.வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல்

8. சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்

ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான மதராசப்பட்டினம் பாடப்பகுதியின் கருத்துருக்களுக்கு  எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களைப்  பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.

கற்பித்தல் நுண்திறன்கள்

1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்

2. சரளமாக வினாக்களைக் கேட்டல்

3.விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்களைக் கேட்டல்

4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்

5. பாடம் முடித்தல்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதிமின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் சென்னை நகரத்தின் விரிவாக்கம், சென்னையின் நீர்நிலைகளின் பெயர்கள், கூவம் ஆறு பற்றிய செய்திகள், சென்னை எவ்வாறு பெருநகரமானது என்பது குறித்துப் புரிய வைத்தல்.

விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் சென்னை நகரில் ஒரே வடிவில் அமைந்த கட்டடங்கள் எவை என்றும், அவற்றின் வடிவம் குறித்தும், சென்னையில் உள்ள நூலகங்கள் குறித்தும் புரிய வைத்தல்.

சரளமாக வினாக்களைக் கேட்பதன் மூலம் சென்னையை ஏன் எல்லோரும் நாடிச் செல்கின்றனர். சென்னையின் தொழில் வளர்ச்சி, சென்னை அடைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பற்றி புரிய வைத்தல்

மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்தத் நுண்திறன்களைப் பயன்படுத்தியும், திரும்ப கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.

ஆயத்தப்படுத்தல்

1. சென்ணையின் வரலாற்றுக் கால செய்திகளையும் அங்கே கிடைத்த தொன்மைப் பொருள்களையும் பல்வேறு சான்றுகள் மூலம் விளக்குதல்.

2. சென்னையின் பல்வேறு கட்டடங்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தல்.

3. சென்னை என்றதும் நினைவிற்கு வரும் இடங்களையும் அது குறித்த தகவல்களையும் எடுத்துக் கூறுதல்.

அறிமுகம்

பாடப்பகுதியை மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள்

மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் பாடப்பகுதியின் எந்தெந்தப் பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தெந்தப் பகுதிகளுக்கு கற்பித்தல்  திறன்களின் அடிப்படையில் பாடத்தின் கருத்துகளை அறிமுகம்  செய்து வைத்தல் வேண்டும். இச்செயல்பாடு மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை அதிகமாகும்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

ஆர்வமுட்டல்

1. சென்னைக்கு யாரல்லாம் சென்றுள்ளீர்கள் -என்று மாணவர்களிடம் கேட்டல்.

2. சென்னையில் பாய்ந்தேடும் அடையாறு, திருவல்லிக்கேணி (கூவம்) போன்ற செய்திகளைக் கேட்டல்

3. சென்னை உயர்நீதி மன்றம், சென்னை சென்ட்ரல் புகைவண்டி  நிலையம் இவற்றின் கட்டடக்கலை  பாணிக் குறித்த செய்திகளைக் கேட்டல்.

4. சென்னையில் உள்ள தொழிற்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் குறித்துக் கலந்துரையாடல் நடத்துதல்.

5. சென்னை என்னும் நகரம் எவ்வாறு விரிவடைந்தது என்பதைப் பற்றி கேட்டல்.

துணைக்கருவிகள்

1. பாடம் தொடர்பான காணொலிகள்

2. மதராசப்பட்டினம் உருவான காணொலி

3. சென்னை தினம் குறித்த காணொலி

4. சாரசனிக் கட்டடம் குறித்த காணொலி

5. சென்னை நீர்நிலைக் கறித்த காணொலி

6. மதராசப்பட்டினம் படத்திற்கான PPT

7. Interactive Board- இல் பாடம் தொடர்பான pdf

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள்

ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து  உட்பொருளையும் புரிந்து கொண்டு, மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துக் கருத்துருக்களையும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.

கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளை மாணவர்கள்  வாசித்தல் வேண்டும்.

மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையகத் தீரும் அளவிற்குக்  கற்பித்தல் வேண்டும்.

பாடப்பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும் . பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

மாணவர் செயல்பாடுகள்

1.பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்துப் பழகுதல்.

2.வகுப்பறையில் ஆசிரியர் கூறும் பாடப் பகுதியை வாய்விட்டு வாசித்தல்.

3.பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துப் பாடத்தின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்.

4. சென்னை அறிவின் நகரம் என்று அழைக்க பட காரணங்களைத்  தெரிந்து கொள்ளுதல். 

5. ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் கேட்டுத் தெளிவடைதல்.

6.ஆசிரியர் தரும் பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழு செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல்

7. பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனம் சிதறாமல் பார்த்துப் பாடப்பகுதியைப் புரிந்து கொள்ளுதல்.

பாடப்பொருள்

மதராசப்பட்டினம்

* ஆற்றங்கரை நகரங்கள் கடற்கரை நகரங்கள் இவற்றின் வரலாற்றுப் பதிவுகள்- மிகச்சிறந்த கடற்கரை நகரம் மதராசப்பட்டினம் - திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் இன்று வளர்ந்துள்ளது.

* சென்னையின் தொன்மை -வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்த அடையாளம் உள்ளது - குடியம், அத்திரம்பாக்கம் அகழ்வாய்வுகளில் மனித நாகரிகத்திற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன -  கொற்றலை ஆற்றுப்படுகை மனித நாகரிகத்தின் முதன்மை களம்.

* பல்லாவரம் - கல் கோடாரி; கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொன்மை பொருள்கள் - மயிலாப்பூர் 2-ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா -துறைமுகமாகச் சுட்டப்படல்.

*கோவில்கள் - திருவெற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லை வாயில், பழமையானவை பல்லவர் குடைவரை - முதலாம் மகேந்திரவர்மன் 

* சிலசிற்றூர்கள் - சேத்துப்பட்டு, நுங்கம் பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம் பேடு, தாம்பரம்-  12-13 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சிற்றுர்கள்.

*அயலவர் குடியேற்றம் - ‘பிரான்சிஸ் டே’ மயிலாப்பூருக்கு வடக்கே உள்ள மணல் வெளியைத் தேர்ந்தெடுத்தல் - திருவல்லிக்கேணி ஆறு  ஓடிய இடம்.

* விஜய நகர ஆட்சியின் உள்ளூர் ஆளுநர் சென்னப்பரின் இரு மகன்களிம் இருந்து 22.08.1639 இல் பிரான்சிஸ்  டே வாங்குதல் -  செயின்ட் ஜார்ஜ் கோட்டை - பின் கிராமம் உருவாதல்.

* நகரம் உருவாக்கம் - துணிவணிகம்-  பல பகுதியில் உள்ள நெசவாளர்கள் -வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, குடியேறுதல் - எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்ப் பேட்டை, திருவெற்றியூர் கிராமங்கள் இணைதல்.

* வட சென்னை -  மதராசப்பட்டினம்; தென்சென்னை -  சென்னைப்பட்டினம்

இரண்டும் இணைந்து 'மதராஸ்' - பின்பு இதுவே ‘மெட்ராஸ்’- இன்று சென்னை அறிவின் நகரம் - கல்வி நிறுவனங்கள் -ஐரோப்பிய முறை கல்விநிறுவனங்கள் 18-ஆம் நூற்றாண்டு - 19 -ஆம் நூற்றாண்டு பள்ளி பெருக்கம் - 1812 சென்னைக் கோட்டைக் கல்லூரி - 15, 1837, கிறித்தவக் கல்லலூரி -  1840, பிரசிடென்சி பள்ளி ,பின்னாளில் மாநிலக் கல்லூரி- 1857, சென்னைப் பல்கலைக்கழகம் - 1914, இராணி மேரி கல்லூ 15- பச்சையப்பன் கல்லூரி.

* சாரசனிக் கட்டடக்கலை - மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ் -ஆவணக் காப்பகம்- 1768-இல் கட்டிமுடிக்கப்பட்ட சேப்பாக்கம் அரண்மனை-  எழும்பூர் அருங்காட்சியம் -  கோட்டை அருங்காட்சியம் - பொதுநூலகம் கன்னிமார

* போக்கு வரத்து - மாட்டு வண்டி பாதை - சாலையானது - அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை -  1856,முதல் தொடர் வண்டி நிலையம்- வீதிகளில் டிராம் வண்டிகள்

* சென்னை வரும் நகரம் மட்டுமன்று - சென்னையே  மையம் இட்டு உருவான தொழிற்சாலைகள் நிறுவனங்கள் நேரடி மறைமுக  வேலைவாய்ப்புகள் நகரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றின-  கணினி  மென்பொருள் வன்பொருள் வாகன உற்பத்தி முன்னிலை வகிக்கின்றது-  மென்பொருள்களை உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது- புகழ் பெறுவதற்கு நகரம் தொன்மை சிறப்படையதாக இருக்க வேண்டும். தொழில் வளம் மிகுதியாகப்  பெற்றிருக்க வேண்டும்-  சிறந்த குடிமக்களைக்  கொண்டிருக்க வேண்டும்-  துறைமுக வசதி உள்ளதாகவும் இருத்தல் வேண்டும் -  ஏற்றுமதி இறக்குமதி வணிகம் தொடர்ந்து நடைபெற வேண்டும்-  இவற்றுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிளர வேண்டும். 

* சென்னை இலக்கிய சங்கமம் -  1812 கோட்டைக் கல்லூரியில் இணைவாக உருவான நூலகம்.

* கன்னிமாரா நூலகம்-   1860 இல்  அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட நூலகம் -  இந்தியாவின் முதல் பொது நூலகம்.

* கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்  - காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு  1869 உருவாக்கப்பட்ட நூலகம் - அரிய  ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப்  பெருந்தொகுப்புகளைக் கொண்டது.

* அண்ணா நூற்றாண்டு நூலகம் -  2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட  இந்நூலகம் ஆசியாவின் மூன்றாவது பெரிய நூலகமாகும்.

*  தமிழாய்வு நூலகங்கள் -  சிறப்பு நிலையில்  தமிழாய்வு நூல்களைக் கொண்ட உலக தமிழாராய்ச்சி நிறுவன  நூலகம் -  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்-   மறைமலை அடிகள் நூலகம் -  செம்மொழி  தமிழாய்வு நூலகம் -  உ.வே.சா நூலகம் - 

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

வலுவூட்டும் செயல் பாடுகள்

1. மதராசப்பட்டினம் பாடத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளான நகரஉருவாக்கம், சாரசனிக் கட்டடம், சென்னையில் ஓடும் ஆறுகள், அறிவின் நகரமாக விளங்கிய வரலாறு, சென்னையின் பண்பாட்டு அடையாளங்கள் குறித்த கருத்துகளைப் பொருத்தமான திறன்கள் மூலம் கற்பித்தல்.

2. மதராசப் பட்டினம் பாடத்தில் உள்ள அனைத்துக் கருத்துகளையும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல்.

குறைதீர் கற்பித்தல் 

பாடப் பகுதியின் உட்பொருளைப் புரிந்த கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப் பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் மதராசப்பட்டினத்தின் உருவாக்கம், மதராசப்பட்டினத்தில் ஓடும் ஆறுகள், நகரம் விரிவாக்கத்திற்கான காரணம், பல கிராமால்கள் உருவாகியது. 

இங்கே இருக்கும் பல்வேறு நூலகங்கள், முகலாயக் கட்டடக் கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி கலந்து உருவாக்கப் பட்ட சாரசனிக் கட்டடம் ஆகிய பாடக்கருத்துகளை மீண்டும் மீண்டும் பல்வேறு கற்பித்தல் திறன்களைப் பயன்படுத்தியும், துணைக்கருவிகள் மற்றும் மீள் பார்வை மூலம் புரியவைத்தல் வேண்டும்.

கற்றல் விளைவுகள்

1.ஒரு நகரின் உருவாகத்தை அறிந்ததன் மூலம் தான் வாழும் நகரின் உருவாக்கத்தை அறியும் ஆர்வம் பெறுதல்.


2. சென்னையில் ஓடிய ஆறுகள், நீர்நிலைகள் பற்றி அறிந்ததன் மூலம் தான் வாழும் நகரிலும் உள்ள நீர்நிலைகளை அறியும் ஆர்வம் பெறுதல் 

3. பல்வேறு கிராமங்களின் கூட்டிணையமே சென்னை நகரம் என அறிந்ததன் மூலம் தான் வாழும் பெருநகரில் உள்ள கிராமங்களை அறிதல் 

4.தன் ஊரை அல்லது நகரைச் சுற்றி இருக்கும் கல்வி நிறுவனங்கள், நூலகங்களை அறிதல்.

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS

1.திருவல்லிக்கேணியின் தற்போதைய பெயர் என்ன ?  

2. மதராஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது?

நடுத்தரச் சிந்தனை வினாக்கள்  MOT QUESTIONS

1. சென்னையில் இருக்கும் சில புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

2. மதராசப்பட்டினம் என்பது எந்த இடத்தைக் குறிக்கும்

3. சாரசனிக் கட்டடக்கலை' -விளக்கம் 

உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS

1. உங்கள் நகரின் உருவாக்கம் குறித்த தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுது.

2. ஒரு நகரம் வளர்ச்சி அடைய அங்குக் கல்விHF கட்டாயம் தேவை என்பதை பாடத்தின்

அடிப்படையில் உறுதிப்படுத்துக.

3.ஜார்ஜ் கோட்டைப் பற்றி உனக்குத் தெரிந்த செய்திகளை எழுதுக.

தொடர்பணி

1. ‘கனவு நகரம்'என்னும் தலைப்பில் ஒப்படைவாக எழுதி வருதல்.


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.

Post a Comment

Previous Post Next Post