Loading ....

12 Tamil-UNIT 4,5,6-2025-Model Question Paper-Study Material-12தமிழ்- இயல் 4,5,6,-2025-மாதிரி வினாத் தாள்-

  12T  U 4,5,6 -MQP 1 - 2025                                                         







மாதிரி வினாத் தாள் - 1                     இயல் (4,5,6 ) பொதுத்தேர்வு - 2025

வகுப்பு  -   12

               பொதுத்தமிழ்

கால அளவு : 3.00 மணிநேரம்                                                   மதிப்பெண் : 90

அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் 

கொள்ளவும். அச்சுப் பதிவில் குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்

2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு           : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் 

அமைதல் வேண்டும்.

பகுதி - 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                           14 x 1 = 14

1. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர்

அ) நகுலன் ஆ) பிரமிள் இ) அய்யப்ப மாதவன் ஈ) சிற்பி

2. குழிமாற்று’ என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை ______________ 

அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல்  ஈ) வேளாண்மை 

3. “ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்... தொடர்களில் வெளிப்படும் செய்திகள் 

கூற்று 1 : மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.

கூற்று 2 : ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1 சரி 2 தவறு ஆ) 1 தவறு 2 சரி இ) 1 தவறு 2 தவறு ஈ) 1 சரி 2 சரி

4.  ''வாளால் அறுத்துச் சுடினும் ..'' இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது

அ) போர் ஆ) மருத்துவம் இ) விளையாட்டு ஈ) வேளாண்மை

5. 'நல்வழி' என்ற நூலை எழுதியவர்

அ) ஒளவையார் ஆ) கபிலர் இ) பொய்கையார் ஈ) கூடலூர்கிழார்

6.  'கிறித்துவக் கம்பர்'என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) கால்டுவெல் ஆ) ஜி.யு.போப் இ) வேதநாயகர் ஈ) எச்.ஏ.கிருட்டினனார்

7. நெடுங்கணக்கு என்பது

அ) நீண்ட கணக்கு ஆ) கணிதம் இ) பெருக்கல் கணக்கு ஈ) அரிச்சுவடி

8.திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர்

அ) லூமியர் சகோதரர்கள் ஆ) ஜார்ஜ் மிலி

இ) தாமஸ் ஆல்வா எடிசன் ஈ) சாமிக்கண்ணு வின்சென்ட்

9. ‘இலக்கியத்தில் மேலாண்மை' என்ற நூலை எழுதியவர்

 அ) வெ. இறையன்பு ஆ) வா.மு.சேதுராமன் இ) வெ.சாமிநாத சர்மா ஈ) விந்தன்

10. 8. கல்வியை நிலைக்களனாகக் கொண்ட  மெய்ப்பாடு

அ) பெருமிதம் ஆ) உவகை இ) நகை ஈ) மருட்கை

11.சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.

அ) காதை - 1) கந்தபுராணம்

ஆ) சருக்கம் - 2) சீவகசிந்தாமணி

இ) இலம்பகம் - 3) சூளாமணி

ஈ) படலம் - 4) சிலப்பதிகாரம்

அ) 4   3   2   1 ஆ) 3   4   1   2 இ) 3   4   2   1 ஈ) 4   3   1   2

12.10. 'கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்' இத்தொன்மக் குறிப்பு இடம் பெற்ற நூல்________________

அ) சிலப்பதிகாரம் ஆ) பாரதம் இ) இராமாயணம் ஈ) கந்தபுராணம்

13.சூரியனைப் பிரசவிக்கும் பாறை - சிறுகதை இடம்பெற்ற சிறுகதை தொகுப்பு 

அ) வேர்களின் பேச்சு     ஆ) சாய்வு நாற்காலி         இ) துறைமுகம்                 ஈ) கூனன் தோப்பு 

14.'திசை எட்டும்' என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர்

அ) தமிழ்நதி ஆ) சாந்தா தத் இ) நகுலன் ஈ) உத்தமசோழன்

பகுதி  2

பிரிவு -1

எவையேனும் மூன்றனுக்கு விடை எழுதுக.                                     3 x 2 = 6

15. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடுக.

16.  கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.

17. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

18.சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை? 

பிரிவு -2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                 2 x 2 = 4

19. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

20. குலஷோவ் விளைவு குறிப்பு வரைக.

21. காவிரிப்பூம்பட்டின பண்டகசாலை பற்றி பட்டினப்பாலை குறிப்பிடும் செய்திகளைக் கூறுக.

பிரிவு-3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக                             7 x 2 = 14

22. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

அ) வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் 

         இருந்தன.

ஆ) ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.

23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

ஆ) வூட்டாண்ட வெளயண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு 

24. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

அ) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

ஆ) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

25. மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) வழிவழியாக ஆ) ஆணி அடித்தாற் போல

26.  கலைச்சொல் தருக 

அ) Vice Chancellor ஆ) Customs officer

செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

அ) தாமரை ஆ) தலைமை

 27. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக 

அ) தொழுதனர்           ஆ) களைந்து

28.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக. 

அ) தலைக்கோல் ஆ) ஒருமையுடன்

29. தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை இட்டு எழுதுக. 

இளங்கோ அவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக்கேட்டார்

30.தொன்மம் - விளக்கம் தருக. 

பகுதி 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                             2 x 4 = 8

31. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.

32.இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார் ? 

33. “ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்” இடம்சுட்டிப் பொருள் விளக்குக. 

34. “உண்டால் அம்ம......” எனத் தொடங்கும் புறநானுற்றுப் பாடல் பொதுவியல் திணைக்கு உரியது என்பதை நிறுவுக. 

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                         2 x 4 = 8

35.  நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

36. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

37.  திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

38. படத்தின் வெற்றியில் திரைக்கதையின் பங்கினை விவரிக்க.

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                         3 x 4 = 12

39. “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 

       இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு  வார்” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

அல்லது

ஆ ) உவமையணயைச் சான்றுடன் விளக்குக.

40. தமிழாக்கம் தருக.

Priya  was not only a great social revolutionary; he was something more than that. He is known as  a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere  of activity was very wide and when he took up any issue, he went deep  into it, understood all the  aspects of it and did  not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-  rooted and appeared to be permanent features of our society  until  Periyar came on the scene.

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்க்காணும் தொடர்களில்  அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக

1.  உங்களுக்கு _________________  ( யார் ) நன்மை என நினைக்கிறீர்கள்.

2. நம்முடைய  _________________  ( தேவை )  அளவு  குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

3. நேற்று முதல் ___________________   ( அணை )   நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 4. கபிலன் திறமையானவர் என்று _______________  (  குமரன் )   தெரியும்.

41. இலக்கிய நயம் பாராட்டுக.

( மையக் கருத்தை எழுதி எவையேனும் மூன்று நயங்களை எழுதுக. ) 

பிறப்பினால் எவர்க்கும்  -     உலகில் 

பெருமை வாராதப்பா! 

சிறப்பு வேண்டுமெனில் -   நல்ல 

செய்கை வேண்டுமப்பா! 

நன்மை செய்பவரே    -  உலகம் 

நாடும் மேற்குலத்தார்! 

தின்மை செய்பவரே -அண்டித் 

தீண்ட ஒண்ணாதார்!

-கவிமணி தேசிக விநாயகம்


42. பழமொழியை  வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

அ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

அல்லது

ஆ)  ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’-

43. மாற்றுச் சான்றிதழ் ( TRANSFER CERTIFICATE )  வேண்டி விண்ணப்பம் எழுதுக. 

பகுதி  4


அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                         3 x 6 = 18 

44.  அ) அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.

அல்லது

         ஆ) எச்.ஏ.கிருட்டினனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

45.  அ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் 

சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.

அல்லது

        ஆ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், 

கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

46. அ)  'சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை 

குன்றாமல் சுருக்கி வரைக.

அல்லது

       ஆ)  ‘கோடை மழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.

பகுதி - 5

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக                         4 + 2 =  6

அ) “ ஒருமையுடன் ........” எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை எழுதுக. 

ஆ) “பவர்”  என முடியும்  திருக்குறள் பாடலை  எழுதுக.


 குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.



Post a Comment

Previous Post Next Post