Loading ....

12 ஆம் வகுப்பு,தமிழ்,இயல் - 1,இளந்தமிழே,ஒரு மதிப்பெண் வினாக்கள்

                                                                 12 ஆம் வகுப்பு


தமிழ்


இயல் - 1


இளந்தமிழே


சிற்பி பாலசுப்பிரமணியம்





பலவுள் தெரிக

ஒரு மதிப்பெண் வினாக்கள்


எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095



1.பொதிகை என்பது எந்த மலையை குறிக்கும்

    அ) குற்றால மலை  ஆ) விந்திய மலை  இ) இமயமலை   ஈ) சாமி மலை

                   விடை : அ) குற்றால மலை


2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்த மைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

    அ) அக்கினி        ஆ) ஒளிப்பறவை    இ) அக்கினி சாட்சி     ஈ) சூரிய நிழல்

                  விடை : இ) அக்கினி சாட்சி


3. கவிஞர் சிற்பி எழுதிய எந்த படைப்பிலக்கிய நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

    அ) ஒரு கிராமத்தின் கதை        ஆ) ஒரு கிராமமே அழுதது

    இ) ஒரு கிராமத்து நதி                  ஈ) ஒரு புளியமரத்தின் கதை

                விடை : இ) ஒரு கிராமத்து நதி


4. சிற்பி எத்தனை முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்.

    அ) ஒரு முறை         ஆ) இரு முறை     இ) நான்கு முறை      ஈ) மூன்று முறை

                    விடை : ஆ) இரு முறை


5. சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம் இந்தி,கன்னடம், மராத்தி, மற்றும்-------- மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    அ) மலையாளம்     ஆ) ஹிந்தி      இ) தெலுங்கு       ஈ) வங்காளம்

                விடை : அ) மலையாளம்


6. இவற்றில் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்.

    அ) சூரியகாந்தி        ஆ) சூரிய பார்வை       இ) ஒளிப்பூ   ஈ) சூரிய நிழல்

                விடை : ஈ) சூரிய நிழல்


7. கருத்து 1: பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து தமிழ் தாய் கருத்து2:விம்முகின்ற தோள்கள் செந்நிறத்து பூக்காடானது.

    அ) கருத்து ஒன்று சரி               ஆ) கருத்து இரண்டு சரி

    இ) இரண்டு கருத்தும் தவறு    ஈ) கருத்து 1 சரி 2 தவறு

                 விடை : ஈ) கருத்து 1 சரி 2 தவறு


8. இளந்தமிழே என்னும் நம் பாடப்பகுதி இடம் பெற்றுள்ள நூல்.

    அ) ஒளிப்பறவை      ஆ) நிலவுப்பூ        இ) சூரிய நிழல்           ஈ) சூரியகாந்தி

                 விடை : ஆ) நிலவுப்பூ


9. கவிஞர் சிற்பி எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

     அ) காமராசர் பல்கலைக்கழகம்          ஆ) அழகப்பா பல்கலைக்கழகம்

     இ) தமிழ்ப் பல்கலைக்கழகம்                  ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்

                 விடை : ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்


10. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இளந்தமிழே பாடல் இடம் பெற்ற நூல்.

       அ) மஸ்னவி      ஆ) நிலவுப்பூ         இ) காவிய தர்ஷன்       ஈ) துறைமுகம்

                 விடை : ஆ) நிலவுப்பூ


11. " மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்

         1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து     2) பொதிகையில் தோன்றியது

         3) வள்ளல்களைத் தந்தது.

   அ) 1 மட்டும் சரி   ஆ)1,2 இரண்டும் சரி  இ) 3 மட்டும் சரி     ஈ) 1,3 இரண்டும் சரி,

                                 விடை : ஈ) 1,3 இரண்டும் சரி


எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095


12. 'சாய்ப்பான்' என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை

       அ) சாய்ப்பு + ஆன்                    ஆ) சாய் + ப் + ஆன் 

       இ) சாய் + ப் + ப் + அன்             ஈ) சாய் + ப் + ப் +ஆன்

                             விடை :  ஈ) சாய் + ப் + ப் +ஆன்)


13. 'வியந்து' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை

      அ) வியந்து + உ                          ஆ) விய + த் + த் + உ       

      இ) விய + த்(ந்) + த் + உ              ஈ) வியந்த + அ

                           விடை : இ) விய + த்(ந்) + த் + உ   


14. ‘வியர்வை வெள்ளம்' - இலக்கணக்குறிப்பு

       அ) உவமையாகுபெயர்           ஆ) கருவியாகு பெயர். 

       இ) உருவகம்                                ஈ) உவமைத்தொகை

                               விடை : இ) உருவகம் 


15. 'செந்தமிழ்' - எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்.

       அ) ஈறுபோதல், இனமிகல்                  ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

       இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்  ஈ) ஈறுபோதல்

                           விடை : ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்


16. கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்தாய்.

      கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.

   அ) கருத்து 1 சரி                             ஆ) கருத்து 2 சரி

   இ) இரண்டு கருத்தும் தவறு       ஈ) கருத்து 1 சரி, 2 தவறு]

                           விடை : ஈ) கருத்து 1 சரி, 2 தவறு]


13. "மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்

முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்' - இப்பாடல் வரியில் பயின்று வந்துள்ள தொடை நயம்

    அ) அடி மோனை         ஆ) சீர் மோனை

    இ) சீர் எதுகை                  ஈ) அடி எதுகை 

                           விடை : அ) அடி மோனை

     14. பொருத்துக.

      அ) அலையும் சுவடும்.    - 1. படைப்பிலக்கிய விருது நூல்

     ஆ) ஒரு கிராமத்து நதி    - 2. மொழிபெயர்ப்பு விருது நூல்

      இ) அக்கினி சாட்சி          - 3. கவிதை நூல்

      ஈ) ஒளிப்பறவை               - 4. உரைநடை நூல்

      அ) 4 1 2 3       ஆ) 4 2 1 3         இ) 4 3 1 2       ஈ) 4 3 2 1

                                விடை : அ) 4 1 2 3


எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095                                           


அறிந்து கொள்வோமா

சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர்  - பொ. பாலசுப்பிரமணியம்

சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர்          - ஆத்துப் பொள்ளாச்சி

சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் -  கி.பொன்னுசாமி, கண்டியம்மாள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிற்பி பாலசுப்பிரமணியம் பணியாற்றிய காலம்   - 1989, 1997

சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ள ஒருசில விருதுகள் - தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதினம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான

லில்லி தேவ சிகாமணி விருது.

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல் - அக்கினி சாட்சி

(நாவல்)



மொழிப்பெயர்ப்பு நூலுக்காககச் சாகித்திய அகாதமி விருது பெற்ற வருடம் - 2001.

படைப்பிலக்கியம் ஒரு கிராமத்து நதி நூலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற வருடம் -2003.

தமிழக அரசின் பரிசு பெற்ற கவிஞர் சிற்பியின் நூல் - பூஜ்யங்களின் சங்கிலி.



விளக்கமான வகுப்பிற்கான pdf மற்றும் விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇




Photo by Tim Shepherd on Unsplash

Post a Comment

Previous Post Next Post