1 12 /இயல் 1 -அலகுத் தேர்வு 12- 1/1 UT/25
ஜூன் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பலவுள் தெரிக 8 X 1 = 8
1. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2.சத. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள
தொடைநயங்களைத் தேர்க.
அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடி எதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை
4.மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி ஈ) திசை எட்டும்
5. "செம்பரிதி..."எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
6. தமிழில் உயிர்மெய்யெழுத்துகள் 216 அவ்வாறெனில் உயிர்மெய் நெடில் எழுத்துகள்.
அ) 136 ஆ) 120 இ) 126 ஈ) 116
7. 'வெங்கதிர்'-இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
8.தம்பி நெல்லையப்பருக்கு - கட்டுரையின் ஆசிரியர்
அ) பாரதியார் ஆ) உத்தம சோழன்
இ)பூமணி ஈ) ஐராவதம் மகாதேவன்
குறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3 X 2 = 6
9. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
10. விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாக் கொண்டோன்" யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
11. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
12. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்) 2 X 4 = 8
13. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
14. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
15. ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
நெடுவினா ( ஏதேனும் ஒன்று மட்டும் ) 1 X 6 = 6
16. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் போறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக
17. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
அனைத்திற்கும் விடை தருக 7 X 2 = 14
18. உறுப்பிலக்கணம் தருக
அ ) இருந்தாய் ( அல்லது ) ஆ) விளங்கி
19. புணர்ச்சி விதி தருக.
அ) ஆங்கவற்றுள் ( அல்லது ) ஆ) உன்னையல்லால்
20. இலக்கணக்குறிப்புத் தருக
அ) வியர்வைவெள்ளம்
ஆ) உயர்ந்தோர்
21. தமிழாக்கம் தருக.
அ) If you want people to understand you, speak their language.
ஆ) Knowledge of languages is the doorway to wisdom.
22.உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
அ) தாமரை இலை நீர்போல
ஆ)கிணற்றுத்தவளைபோல
23.தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
அ)தாய்மொழி; ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
ஆ)சிறுகதை ஆசிரியர்: முதல் பாதி நவீனம்.
24. கலைச்சொல் தருக.
அ) Epigraphy ஆ) Archaeology
அணியைச் சான்றுடன் விளக்குக. 1 X 4 = 4
25. பொருள் வேற்றுமை அணி
அடி மறாமல் எழுதுக. 1 X 4 = 4
26. ‘ஓங்கலிடை ............ எனத் தொடங்கும் பாடல்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
இயல் - 1
தன்னேர் இலாத தமிழ் - Click Here