12 /இயல் 1 - தன்னேரிலாத தமிழ் 12- 1/1 SLSM/25
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு
பலவுள் தெரிக.
1. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க. (பெ.ஆ.க-1. ஆகஸ்ட2022, மார்ச்2024)
அ) அடிமோனை, அடி எதுகை ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை, அடிமோனை
விடை : இ) அடி எதுகை, சீர் மோனை
சிறுவினா
1. ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக (பெ.ஆ. 1.3 மார்ச்.20, 24. செப்-210
இடம்:
தண்டியலங்கார நூலில் இடம் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் தண்டி.
பொருள்:
கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தின் இருளை அகற்றுவது சூரியன்
விளக்கம்:
உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும் சூரியன் மக்களால் போற்றப்பட்டும் . இது எப்போதும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகின் புறஇருளை அகற்றும்.
1. பொருள் வேற்றுமையணியைச் சான்று தந்து விளக்குக. (ஆகஸ்ட் 22, மார்ச்.25)
அணி இலக்கணம்
செய்யுளில் கவிஞர் இரு வேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
சான்று
“ஓங்கலிடை வந்து..... என்ற தண்டியலங்காரப் பாடல்
விளக்கம்
அணிப்பொருத்தம்
கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன . கதிரவன் புறஇருளை அகற்றும் தமிழ்மொழி அகஇருளை அகற்றும் என்ற ஒப்புமையைக் கூறி தமிழுக்கு நிகராக வேறு மொழி இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் வேற்றுமையணி ஆகும்.
Click here to download the document.