Loading ....

NL-11th tamil- notes of lesson-july 2025 -1st week- 11ஆவது வகுப்பு-தமிழ்-பாடக்குறிப்பேடு-ஜூலை 2025-1ஆவது வாரம்-

                     ஜூலை  2025,  முதல் வாரம்  - பாடக்குறிப்பு 

வகுப்பு         : 11

பாடம்         : தமிழ்

நாள் : ஜூலை முதல்  வாரம்

பருவம் : முதல்பருவம் 

இயல் : 2  ( மாமழைப் பேற்றுதும் ) 

அலகு : i ) உரைநடை

பாடத்தலைப்பு :

  i ) உரைநடை

இயற்கை வேளாண்மை

பாடவேளை : 4

பக்க எண் : 21 முதல் 25 வரை 

கற்பித்தல் நோக்கங்கள்

1)  இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றின் இன்றிமையாமையே உணர்ந்து தம் சமுகப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் மனதினை உருவாக்குதல்.

2)  இயற்கை வேளாண்மை அறிஞர்களான மசானபு  ஃபுகோகா, நம்மாழ்வார் ஆகியோரின் பணிகளைத் தெரிய வைத்தல்.

3)   இயற்கை வேளாண்மையின் சிறப்புகளையும்  முக்கியத்துவத்தையும்  அறிய வைத்தல்

சிறப்பு நோக்கங்கள்

1) தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் பற்றி அறிய வைத்தல்.

2)  மதிப்புக் கூட்டுப் பொருளைப் பற்றியும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புப் கூட்டுப் பொருள்களைப் பற்றியும் அறிய வைத்தல்.

3)  ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலையும்  ஐந்து வேளாண்மை மந்திரங்களையும் தெரிய வைத்தல்.

4)  தொழுஉரம் தயாரிக்கும் முறையையும் அதன் பயன்களையும் அறிய வைத்தல்.

5)  வேதிக்கலப்பில்லாத பூச்சி மருந்து தயாரிப்பது பற்றி அறிய வைத்தல்.

6)  ஊடுபயிர், நுண்ணுயிர் பெருக்கம், இயற்கை உரம் ஆகிய செய்திகளைக் கூறி  அவற்றின் பயன்களை அறிய வைத்தல்.

கற்பித்தல் திறன்கள்

1) பாடப்பகுதியை அறிமுகப்படுத்தல் திறன்

2) விரிவுரைத் திறன்

3) எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன்

4) கேள்விகள் கேட்டல் திறன்

5) அறிக்கைகள் முலம் விளக்குதல் திறன்

6)காட்சிப்படுத்தல் திறன்

7) வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல் திறன்

8) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான இயற்கை வேளாண்மை 

பாடப் பகுதியின் கருத்துருக்கு எந்தெந்தத் திறன்கள்  பொருந்துகிறதோ அந்தந்தத் 

திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

கற்பித்தல் நுண்திறன்கள்

1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்

2.சரளமாக வினாக்கள் கேட்டல்

3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்

4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்

5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்

6. பாடம் முடித்தல்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

பல்வகை தூண்டும் வினாக்களை கேட்பதன் மூலம்  தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பயன்பாடுகளைப் புரிய வைத்தல்.

விரிச் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் மூலம் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைக் கேட்டறிந்து  அப்பொருள்களில் இருந்து எத்தகைய மதிப்புக்  கூட்டுப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை புரிய வைத்தல்.

 சரளமாக வினாக்களைக் கேட்பதன் மூலம் இயற்கை வேளாண்மை, தொழு உரம்,  பூச்சிக்கொல்லி மருந்து போன்ற செய்திகளை அறிய வைத்தல்.

மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும் திருப்பு கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.

ஆயத்தப்படுத்தல்

1) தமிழ்நாட்டின் மாநில மரமான  பனை மரத்தைப் பற்றிய செய்திகளைக்  கூறி பனை மரத்தை அறிமுகப்படுத்துதல். காலம் காலமாக ஏழைகளின் கற்பக விருட்சமாக இருக்கும் பனை மரத்தின் சிறப்புகளைப் பல்வேறு சான்றுகளுடன் விளக்குதல்.

2) வயல்வெளி பற்றியும் வைக்கோல் மூலம் புரட்சி  செய்து விவசாயத்தில் நல்ல மகசூலைப் பெற முடியும் என்ற மசானபு  ஃபுகோகாவின் புத்தகத்தின் படத்தைக் காட்சிப்படுத்துதல்

3)  இயற்கை வேளாண்மை ஏன் அவசியம்  என்ற செய்திகளைப் பல்வேறு தகவல்கள் கூறுதல்  திறன் மூலம் கூறுதல்.

அறிமுகம்

பாடப்பகுதியைப் புரிய வைக்க எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல்  நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடப்பகுதிகளை  அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இச்செயல்பாட்டால்  மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

ஆர்வமூட்டல்

1. 'பனை மரம்' யாரெல்லாம் பார்த்துள்ளீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டல்.

2. கருப்பட்டி, நுங்கு, பதநீர், பனை ஓலை, ஓலைச் சுவடி இப்பொருள்களைப் பற்றிக் கேட்டு அவற்றின் பயன்பற்றிக் கலந்துரையாடல் நடத்துதல்.

3. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வர் பற்றி கேட்டல், நம்மாழ்வாரின் பணிகள் பற்றி எடுத்துக் கூறுதல்.

4. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, செயற்கை பூச்சிக்கொல்லி மருந்து குறித்த கருத்துகளைக் கேட்டல்.

5. வீட்டில் யாராவது இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளீர்களா? அதன் நன்மைப் பற்றி கலந்துரையாடல்.

துணைக்கருவிகள்

1. நம்மாழ்வார் பேச்சுக்காணொலி

2.’ஒற்றை வைக்கோல் புரட்சி' நூல் பற்றியும் நூலாசிரியர் பற்றியும் உள்ள செய்தித் தொகுப்புக் காணொலி

3. பாடத்தை காணொலி வடிவில் காட்டுதல்

4. இயற்கை வேளாண்மை பாடத்திற்கான PPT

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள்

ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு,

மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப் பகுதியின் அனைத்துக் கருந்துருக்களையும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும். கற்பிக்க இருக்கும் பாடம் பகுதிகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.

மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் வேண்டும்

பாடப்பகுதியில் இருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் பிறர்வு நடத்துதல்

மாணவர் செயல்பாடுகள்

1. பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்துப் பழகுதல்.

2.வகுப்பறையில் ஆசிரியர் கூறும் பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல்.

3. பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்தும் பாடத்தின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்.

4. பனைமரம், தொழுஉரம், இயற்கை வேளாண்மை போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

5. ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் கேட்டுத் தெளிவடைதல்.

6.ஆசிரியர் தரும் பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழுச் செயல்பாடுகளில் முமுமையாகப் பங்கேற்றல்

7. பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனமாக பார்த்துப் பாடப்பகுதியைப் புரிந்து கொள்ளுதல்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

பாடப்பொருள்

இயற்கை வேளாண்மை

மனித உயிர்கள் வாழ அடிப்படை தேவை வேளாண்மை -  ‘உழவு உலகிற்கு அச்சாணி’ -’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’

*  சொக்கலிங்கம் -மங்கை மல்லிகா ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல்


* நம்மாழ்வாரின் வழியைப் பின்பற்றி இயற்கை முறையில் வேளாண்மை செய்ய விருப்பம் மங்கைக்கு -மங்கையின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலைச் சொக்கலிங்கம் கூறுகிறார்.

* பண்ணைக்குச் சென்று சொக்கலிங்கம் இயற்கை வேளாண்மை குறித்து எடுத்துக் கூறுகிறார்.

* மோர் குடித்தல் -சுவை பற்றிய கலந்துரையாடல் 

* பனைமரம் குறித்துக் கேட்டல்- தமிழ் நாட்டின் மாநில மரம்- மூன்றடிக்கு மூன்றடி இடைவெளி -11 இண்டுகளில் பலன் தரும் - ஏழைகளின் கற்பக விருட்சம்- காற்றுத் தடுப்பான் - நிலத்தடி நீர்மட்டம் குறையாது

* நுங்கு, பதநீர் மட்டுமல்லாமல் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள் - மருதம் பண்ணையில் 50 பனை மரம்

* ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றும், பொருளாக மாற்றுவது மதிப்புக் கூட்டு என்பர்.

* நிலத்தைச் சரிசெய்ய வேண்டும் - அறுவடை முடிந்த பின் வைகோலைச்  சமமாகப் பரப்பி மடியச் செய்து - நீரைத் தேக்கி உமுதல்.

* நிலத்தில் வைகோலைப் பரப்புவது - உரச் செடிகளை வளர்ப்பது - நிலத்தில் கிடைக்கும் கும்பைக் கூளம், செடி செத்தை - நிலத்திற்குக் கொடுத்தல்

* வைக்கோல் பற்றிய சிறந்த ஆய்வு செய்தவர் மசானபு  ஃபுகோகா - 1978 இல் "ஒற்றை வைக்கோல் புரட்சி"

*  உழப்படாத நிலம், வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிரப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல்சாகுபடி, ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல் ஐந்து வேளாண் மந்திரங்கள்

* தொழு உரம், மாட்டுச் சாணம் ,கோமியம் கலந்து வைக்கோலை மட்கச் செய்து - நஞ்சை நிலத்துக்கு - புஞ்சை நிலத்திற்குக் காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றை கலந்து செய்வது. சாம்பல் என்பது ஆடு, மாடு முதலிய கால்நடைகளின் சாணத்தை எடுப்பதனால் கிடைக்கும் சாம்பல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* பண்ணையில் சிறுகுளம் தேவை- நிலத்திற்கு நீர்வளம் கட்டாயம் தேவை. - சின்ன சின்ன வாய்க்கால் வெட்டுதல்

*ஊடு பயிர் தேவை- ஊடு பயிரின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன் நிலத்தின் வளத்தைப் பெருக்கி, விளைச்சலை அதிகரிக்கும்

* பூச்சிக் கொல்லி மருந்தால் புற்றுநோய், வயிற்றுப்புண், மலட்டுத் தன்மை ஏற்படும்

பூச்சிக் கொல்லியில் வேதிக்கலப்பு இருக்க கூடாது. முன்னோர்கள் வேப்பங்கொட்டை நொச்சி இலை, புங்கன் ,பிரண்டை, கற்றாழை இவற்றை இடித்துக் கோமியத்தில் ஊற வைத்துத் தெளிப்பர்.

நுண்ணுயிர் பெருக்கம் மண்ணின் வளத்தைப் பெருக்கும் .- உரத்தையும் இயற்கையாக உருவாக்குதல் - நிலத்திற்கும் ஓய்வு கொடுத்தல் வேண்டும்.சரியான கால இடைவெளியில் மாறிமாறிப் பயிரிட வேண்டும் - வேளாண்மை அலுவலகம் மூலம் வழிமுறைகளையும், பயிற்சிகளையும் பெற வேண்டும்.

வலுவூட்டும் செயல்பாடுகள்

1. இயற்கை வேளாண்மை பாடத்தில் கூறப்பட்டு மதிப்புக் கூட்டுப் பொருள், பனைமரம், தொழு உரம், உயர்பண்ணை, ஊடு பயிர் தேவை - பூச்சிக் கொல்லி மருந்து , நுண்ணுயிர் பெருக்கம் இவை குறித்த கருத்துகளைப் பொருத்தமான திறன்கள் மற்றும் கற்பித்தல்

2. இயற்கை வேளாண்மை பாடத்தில் உள்ள அனைத்து கருத்துகளையும் பல்வேறு நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகள் முலம் விளக்குதல்

குறைதீர் கற்பித்தல்

பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் பாடப் பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் பனைமரம் தொழுஉரம், வேளாண்மை மந்திரம், ஒற்றை வைக்கோல் புரட்சி, இயற்கை பூச்சிக் கொல்லி, நுண்ணுயிர் பெருக்கம், ஊடுபயிர் ஆகிய பாடக்கருத்துகளை மீண்டும் மீண்டும் பல்வேறு திறன்களைப் பயன்படுத்தியும் ,துணைக் கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

கற்றல் விளைவுகள்

1.பனை மரத்தின் தனித்தன்மைகளை அறிந்ததன் மூலம் பனைமரங்களைப் பராமரித்தல், புதிதாக நட வேண்டும் என்ற  எண்ணம்  பெறுதல்.

2. ‘தொழு உரம்' பற்றி அறிந்ததன் மூலம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு இயற்கை உரமே சிறந்தது என்பதை அறிந்து பயன்படுத்தல்.

3. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளின் எதிர்விளைவுகளை அறிவதன் மூலம் இயற்கை பூச்சிக் கொல்லியின் அவசியம் அறிந்து தானும் பிறரும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பெறுதல்.

4. ஊடு பயிர்களின் நன்மைகளை அறிவதன் மூலம் ஊடுபயிர்களைப் பாதுகாக்கும் எண்ணம் உருவாகுதல்.

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS

1. ஏழைகளின் கற்பக விருட்சம் எனப்படும் மரம் எது ?

2. ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலை எழுதியவர் யார்?

நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS

1. ஐந்து  வேளாண் மந்திரங்களைக் கூறுக?

2. நன்செய் நிலத்திற்குரிய உரம் எது?

3. வேதிக் கலப்பு இல்லாத பூச்சிக் கொல்லி மருந்த தயாரிக்கும் முறையை எழுதுக.

உயர்ச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS

1. இயற்கை பூச்சிக் கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? விளக்குக.

2. மண்ணின் வளத்தைப் பெருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளைப் பாடவழியில் நிறுவுக.

3. நன்செய் , புன்செய்  இருநிலங்களிலும் மேற்கொள்ளபடும் வேளாண்மையின் வேறுபாடுகளைக் கூறுக.

4.பதநீரில் இருந்து பெறப்படும் மதிப்புக் கூட்டுப் பொருள்களைப் பட்டியலிடுக.

தொடர் பணி

1. மாடித்தோட்டம் அமைக்கும் முறையை இணையத் தளம் மூலம் அறிந்து வகுப்பில் கலந்துரையாடல் நடத்துதல். 

2. பள்ளியில் செயல்படும் தேசியப் பசுமைப்படை ,சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றின் வாயிலாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல்.


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.



Post a Comment

Previous Post Next Post