12 /இயல் 1 -அலகுத் தேர்வு 12 - 3/1 UT/25
ஜூன் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பலவுள் தெரிக 4 X 1 = 4
1. பிழையான தொடரைக் கண்டறிக
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறி கல்வெட்டுகளைகக் கண்டறிந்தனர்
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
2.ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்.
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும்.
இ) சமணமும் தமிழும். ஈ)கிறித்தவமும் தமிழும்
3.செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
4. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்
அ) அடிமோனை, அடி எதுகை. ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர்மோனை. ஈ) சீர் எதுகை, அடிமோனை
அனைத்திற்கும் விடை தருக 8 X 2 = 16
5.தமிழாக்கம் தருக
அ) A new language is a new life
ஆ) The limits of my language are the limits of world.
6.உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
அ) கிணற்றுத் தவளை போல
ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல
7.குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி.
அ) தமிழ் அறிஞர் முதல் இரு எழுத்துக்களால் மறைக்கலாம்
ஆ) முன்னெழுத்து அரசன் ; பின்னெழுத்து தமிழ் மாதம்
8. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
9.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
10.உறுப்பிலக்கணம் தருக
அ) விம்முகின்ற (அல்லது) ஆ)வந்து
11. புணர்ச்சி விதி தருக
அ)வானமெல்லாம் (அல்லது) ஆ)தனியாழி
12. கலைச்சொல் தருக.
அ) Fine Arts ஆ) Anthropology
குறுவினா 4 X 2 = 8
13.'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
14.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
15.”முன்னம் ஓர்நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்” - யார் ,யாரைப் பற்றிக் கூறியது ?
16.அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் சிறப்பான நூல்கள் யாவை?
சிறுவினா (எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3 X 4= 12
17..'ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ' இடம் சுட்டி பொருள் விளக்குக
18. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம்
வானமெல்லாம்' தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக
19.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக
20.மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
நெடுவினா ( ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும்) 1 X 6 = 6
21. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப் பற்று சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க
22. மயிலையார் ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர்" என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரையாக்கு.
அடி மறாமல் எழுதுக. 4
23. ‘ஓங்கலிடை ............ எனத் தொடங்கும் பாடல்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.