ஜூன் 2025, நான்காவது வாரம் - தமிழ் - 11 ஆவது வகுப்பு
வகுப்பு : 11
பாடம் : தமிழ்
நாள் : ஜூன் நான்காவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 1 ( என்னுயிர் என்பேன் )
அலகு : 1 ) இனிக்கும் இலக்கணம்
2 ) i.மொழியை ஆள்வோம்
ii.மொழியோடு விளையாடு
iii.நிற்க அதற்கு தக
பாடத்தலைப்பு
1 ) இனிக்கும் இலக்கணம்
அ) மொழிமுதல்,இறுதி எழுத்துகள்
2 ) i.மொழியை ஆள்வோம்
அ)சான்றோர் சித்திரம்
ஆ)தமிழாக்கம் தருக
இ)பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க
ஈ)நிகழ்ச்சி நிரலை செய்திக் கட்டுரை - நாளிதழில் வெளியிட
கடிதம்
உ) பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடை
ஊ) பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்
ii.மொழியோடு விளையாடு
அ)எண்ணங்களை எழுத்தாக்குக
ஆ)சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் உருவாக்கு
இ)மேடைப்பேச்சில் சிறந்த தமிழ் அறிஞர்கள் பெயர்
ஈ) வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடராக்கு iii.நிற்க அதற்குத் தக
அ) நற்பண்புகளைக் குறிப்பிடுக
ஆ) படிப்போம் பயன்படுத்துவோம்
பாடவேளை : 4
பக்க எண் : 13 முதல் 20 வரை
கற்பித்தல் நோக்கங்கள்
1) மொழி முதல், இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிற மொழி கலப்பின்றி பேசவும் எழுதவும் வைத்தல்.
2) மொழிப்பயிற்சிகள் மூலம் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் உள்ள பயிற்சிகளை மேற்கொண்டு மொழியின் வளமையை அறிய வைத்தல்.
சிறப்பு நோக்கங்கள்
1) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை அறிய வைத்தல்.
2) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் வரும் முறையைப் புரிய வைத்தல்.
3) உயிரீறு,மெய்யீறு ,உயிர்முதல்,மெய்ம்முதல் பற்றி தகுந்த சான்றுடன் உணர வைத்தல்.
4) புணர்ச்சியில் எழுத்துக்களின் அடிப்படை புணர்ச்சி, சொற்களின் அடிப்படை புணர்ச்சி. குற்றியலுகரஈறு இவற்றின் கருத்துருக்களைப் புரிய வைத்தல்.
5) தரப்பட்டுள்ள அத்தனை மொழிப்பயிற்சிகளையும் புரிய வைத்துத் தமிழ் மொழியின் சொல்வளம் மற்றும் மொழி வளத்தை அறிய வைத்தல்.
கற்பித்தல் திறன்கள்
1) பாடப்பகுதியை அறிமுகப்படுத்தல் திறன்
2) விரிவுரைத் திறன்
3) எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன்
4) கேள்விகள் கேட்டல் திறன்
5) அறிக்கைகள் முலம் விளக்குதல் திறன்
6)காட்சிப்படுத்தல் திறன்
7) வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல் திறன்
8) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்
ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான மொழிமுதல்,இறுதி எழுத்துகள் மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவற்றில் எந்தப் பாடத்தின் கருத்துருக்கு எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தெந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.
கற்பித்தல் நுண்திறன்கள்
1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்
2.சரளமாக வினாக்கள் கேட்டல்
3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்
5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்
6. பாடம் முடித்தல்
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களை இனம் காண வைத்தல். மொழிப்பயிற்சியில் உள்ள தமிழாக்கம் ,பிற மொழிச்சொற்கள் குறித்த செய்திகளைப் பகிர்தல்
விரிச்சிந்தனைத்யை தூண்டும் வினாக்கள் மூலம் சொற்களைக் கூறி அவற்றின் நிலைமொழி என்ன? என்பது பற்றியும், ஒரு சில வேர்ச்சொற்களைக் கூறி அவற்றின் வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியவற்றை கேட்டல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும் திருப்பு கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.
ஆயத்தப்படுத்தல்
1) சொற்கள் ஒரு சிலவற்றைச் சொல்லி அதில் வரும் முதல் மற்றும் இறுதி எழுத்துக்களின் இனத்தைப் பல்வேறு எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.
2) எண்ணங்களை எழுத்தாக்குக பகுதியைக் காட்சிப்படுத்திக் காட்டுதல்
3) மொழிப்பயிற்சி மூலம் சொல்வளத்தையும் சொல்லாட்சியையும் அறிந்து கொள்ள பல்வேறு தகவல்களைக் கூறி விளக்குதல்.
அறிமுகம்
பாடப்பகுதிகளை மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடப்பகுதிகளை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஆர்வமூட்டல்
1. மொழிமுதல், இறுதி எழுத்துக்களின் இனங்களைக் கூறுதல்.
2. மெய்ம்முதல் ,உயிர்முதல் , மெய்யீறு,உயிரீறு வேறுபாடுகளைக் கலந்துரையாடல் மூலம் எடுத்துக் கூறுதல்.
3. சான்றோர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பற்றி கூறுதல்.
4. கலைச்சொல் பற்றி மாணவரிடம் கேட்டல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
துணைக்கருவிகள்
i) பாடம் தொடர்பான காணொலி
ii) இலக்கணம் பாடம் தொடர்பான PPT
iii) மொழப்பயிற்சியை விளக்க Interactive Board ஐ பயன்படுத்துதல்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்களைப்பயன் படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துப் பாடப்பகுதிகளைளயும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியின் துணைத் தலைப்புகளில் இருக்கும் பத்திகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.
மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.
பாடப் பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.
மாணவர் செயல்பாடுகள்
1. பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல், வகுப்பறையில் வாசித்தல்
2. ஆசிரியர் தரும் கலந்தரையாடல் மற்றும் குலச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல்
3. பாடம் தொடர்பான செய்திகளைத் தயாரித்தல்
4) ஒரு சில படங்களைப் பார்த்து உள்ளத்தில் உருவாகும் செய்திகளை எழுதுதல்
பாடப்பொருள்
இனிக்கும் இலக்கணம்
மொழிமுதல், இறுதிஎழுத்துகள்
* ஒரு சில சொற்களைக் கரும்பலகையில் எழுதி அவற்றில் தமிழ்ச் சொற்களை அடையாளம் காண வைத்தல்.
மொழிமுதல் எழுத்துகள் -22
உயிரெழுத்து - 12 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
மெய்யெழுத்து - 10 க ங ச ஞ த ந ப ம ய வ (உயிர்மெய் வடிவில்)
* சுட்டெழுத்துகள் - அ,இ,உ
*வினா எழுத்துகள் - எ, யா
*இவை ங் என்னும் எழுத்துடன் சேர்ந்து வரும்
‘உங்ஙனம்'- தற்போது வழக்கில் இல்லை
மொழி இறுதி எழுத்துகள் -24
உயிரெழுத்து -12 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
மெய்யெழுத்து -11 ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
குற்றியலுகரம் -1
ஞ்,ந்,வ் -பழைய இலக்கிய வழக்கில் வந்துள்ளது
க் ச் ட் த் ப் ற் வல்லின மெய்யும் ‘ங்’ என்னும் மெல்லின மெய்யில் ஒன்றும்
சொல்லில் இறுதியில் வருவதில்லை
புணர்ச்சி
நிலைமொழி, வருமொழி
* நிலைமொழியின் இறுதியும் வரும் மொழியின் முதலும் புணர்ச்சிக்கு உரியன.
உயிரீறு, மெய்யீறு
நிலை மொழி -இறுதி உயிர் மெய் - இறுதிவடிவம் உயிர்
உயிரீறு (மணி+மாலை; ணி-ண்+இ)
நிலைமொழி இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் மெய்யீறு
பொன்+வண்டு; பொன்
உயிர்முதல் மெய்ம்முதல்
வருமொழி முதலெழுத்து உயிர் எனில் உயிர்முதல் (வாழை+இலை; இ - உயிர்)
வருமொழி முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் மெய்ம்முதல் தமிழ் + நிலம்; நிலம் ; நி -நீ + இ )
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி
உயிர் + உயிர் மலை + அருவி ஐ+அ
மெய்+ உயிர் தமிழ் + அன்னை ழ் +அ
உயா் + மெய் தென்னை+ மரம் ஐ+ம்
மெய்+ மெய் தேன்+மழை ன்+ம்
சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி
பெயர்+ பெயர் கனி + சாறு
பெயர்+ வினை தமிழ் + படி
வினை+ வினை நடந்து+ செல்
வினை + பெயர் படித்த+நூல்
* குற்றிய லுகர ஈறு( நுந்தை தவிர) ; குற்றியலுகரம் ஆறு வகை
மொழிப்பயிற்சி
- புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சான்றோர் சித்திரம் பகுதியை வாசித்து அப்பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளைப் புரிந்த விடைகளை எழுத வைத்தல்
- தமிழாக்கம் பகுதியில் தரப்பட்ட ஐந்த ஆங்கில பழமொழிக்கு ஏற்ற
தமிழ்ப் பழமொழியை எழுத்தல்
சான்று :
Knowledge rules the world
அறிவே உலகை ஆள்கிறது
- பிறமொழிச் சொற்களை நன்றாக வாசித்து அதற்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை எழுத்தல்
சான்று:
வாடகை - குடிக்கூலி போலீஸ் - காவல்
- செய்திக் கட்டுரையை எழுதி, செய்தியை நாளிதழில் வெளியிட கடிதம் எழுதும் பயிற்சியைக் கொடுத்தல்
- பத்தியினை நன்றாக வாசித்துத் தரப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
சான்று:
திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பீடும் பெயர் யாது?
விடை: தமிழ்மாலை
- பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றும் பயிற்சியைக் கொடுத்தல்
சான்று:
முயற்சி செஞ்சா அதுகேத்த பலன் வராமப் போவாது
விடை:
முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் கிடைக்காமல் / வராமல் போகாது
- தந்திரும் படத்தைப் பார்த்து எண்ணத்தில் வரும் சிந்தனையை எழுத்தாக்குதல்
- இரண்டு சொற்றொடர் அமைத்தல்
சான்று
நேற்ற ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?
விடை
அ) நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
ஆ) பக்கத்தில் ஏன் இருக்கவில்லை
- மேடைப் பேச்சில் சிறந்து விளங்கிய தமிழ் அறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக
சான்று
சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர்
விடை
அண்ணா
- பெயர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக
சான்று
வா - வேர் சொல்
விடை
அருணா வீட்டுக்கு வந்தாள் (வினைமுற்று)
அங்கு வந்த பேருந்தில் அனைவரும் ஏறினார். (பெயரெச்சம்)
கருணாகரன் மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)
என்னைப் பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர் (வினையாலணையும் பெயர்)
- படிப்போம் பயன்படுத்துவோம் ( கலைச்சொல்)
சான்று
Book Review - புத்தக மதிப்புரை
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
வலுவூட்டும் செயல்பாடுகள்
1. மொழி முதல், இறுதி எழுத்துகள் பாடத்தில் கூறப்பட்டுள்ள சொற்களை மீண்டும் மீண்டும் கூறி பாடப் பகுதியைப் புரிய வைத்தல். உயிரீறு, மெய்யீறு; உயிmfமுதல், மெய்ம்முதல் பகுதியில் எவ்வித குழப்பமும் வராமல் பல்வேறு சான்றுகளுடன் விளக்குதல்.
2. மொழிப்பயிற்சியில் தரப்பட்டுள்ள அனைத்துப் பயிற்சிகளையும் சரியான சான்றுடன் விளக்கி அப்பகுதிகளைப் புரிய வைத்தல்.
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப் பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் தமிழ் மொழியின் மொழிவளம், தமிழ் மொழியில் சொற்களில் வரும் முதல்எழுத்து, இறுதிஎழுத்து, செற்புணர்ச்சி, கொச்சைச் சொற்களை நீக்கித் தமிழில் எழுதுதல், புதிய புதிய கலைச் சொற்களை அறிதல் ஆகிய பாடக்கருத்துகளை மீண்டும் மீண்டும் துணைக் கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.
கற்றல் விளைவுகள்
1. மொழிக்கு முதலில் மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றி அறிவதன் மூலம் தமிழ் மொழியைப் பிழை இல்லாமல் எழுதும் திறன் பெறுதல்.
2. நிலைமொழியில் மற்றும் வருமொழியில் வரும் ஈற்றெழுத்துகளைப் பற்றி அறிவதன் மூலம் சொற்களை உருவாக்கும் திறன் பெறுதல்.
3. எழுத்துப் புணர்ச்சி, சொற்புணர்ச்சிப் பற்றி அறிந்ததன் மூலம் சொற்களில் ஏற்படும் புணர்ச்சி பற்றிய அறிவைப் பெறுதல்.
4. பல்வேறு மொழிப்பயிற்சி மூலம் மொழிவளத்தை அதிகரித்தல்.
5. பிறமொழி மற்றம் கொச்சைச் சொற்களை இனம் கண்டு தூயத் தமிழ்ச்சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
மதிப்பீடு
எளிய சித்தனை வினாக்கள் LOT QUESTIONS
1. மொழி முதல் எழுத்துகள் எத்தனை?
2. போலிஸ் என்பதன் தமிழ்ச் சொல் என்ன?
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1. உயிரீறு மெய்யீறு - விளக்குக
2. உயிர்முதல், மெய்ம்முதல்- விளக்குக
3. நாளிதழ் மேலாளருக்குச் செய்தி வெளியிட கடிதம் எழுதுக.
4. ‘காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சு ஒருதெளிவு கெடைக்கும்’- 'கொச்சைச் சொற்களை நீக்கிஎழுதுக.
உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1.மொழி இறுதியில் வரதா மெல்லின மெய்யெழுத்து எது ?
2. உயிர்முதல் - சான்று ஒன்றினை உருவாக்கு.
3. ‘விசா', 'பாஸ்போர்ட் - தமிழ்ச்சொல் தருக.
4. ‘ஒடு'-வினையாலணையும் பெயர் தருக.
5. Art Critic- தமிழாக்கம் தருக
தொடர்பணி
1.உனக்குத் தெரிந்த சொற்களில் முதல், இறுதி எழுத்துகளைப் பட்டியலிடுக
2. புத்தக மொழிப்பயிற்சியில் இடம்பெறாத பிறமொழிச் சொற்களில் இருபது சொற்களளை எழுதி அதற்குச் சரியான தமிழ்ச்சொற்களைக் கண்டறி.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095