11 /இயல் 1 - யுகத்தின் பாடல் 11- 1/1 SLSM/25
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வினா விடைகள்
பலவுள் தெரிக
1.பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
அ) மல்லார்மே - யுகத்தின் பாடல்
ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்
இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ ii) அ , ஈ iii)ஆ , ஈ iv ) அ , இதன்னேரிலாத த
விடை : iii)ஆ , ஈ
2.”கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாததொல் கனிமங்கள்" அடி மோனையைத் தெரிவு செய்க
அ) கபாடபுரங்களை - காவு கொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
விடை : இ) கபாடபுரங்களை - காலத்தால்
குறுவினா
1. என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றி மண் அழகே!
வழி வழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்.
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
தொழுதவர்,உழுதவர்,விதைத்தவர்.வியர்த்தவர்,தந்தவள்
2. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை
சிறுவினா
1. சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
(மார்ச் 2023,மார்ச் 2025)
நாட்டையும், மொழியையும் வாழ்த்தி, தாய்மொழிக்குத் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களைப் போற்றிப் பாட வேண்டும்.
தமிழ்மொழியின் தொன்மம், காலத்தால் அழியாத வகையில் வலிமையாக வேண்டும்.
Click Here to download the document.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
12 வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வினா விடைகள் Click Here