ஜூன் 2025, நான்காவது வாரம் - தமிழ் - 12 ஆவது வகுப்பு
வகுப்பு : 12
பாடம் : தமிழ்
நாள் : ஜூன் நான்காவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 1 (உயிரினும் ஓம்பப் படுமபடும் )
அலகு : 1 ) இனிக்கும் இலக்கணம்
2 ) i.மொழியை ஆள்வோம்
ii.மொழியோடு விளையாடு
iii.நிற்க அதற்கு தக
பாடத்தலைப்பு
1 ) இனிக்கும் இலக்கணம்
அ) தமிழாய் எழுதுவோம்
2 ) i.மொழியை ஆள்வோம்
அ)சான்றோர் சித்திரம்
ஆ) இருபக்க அளவில் கட்டுரை வரைக
இ)தமிழாக்கம் தருக
ஈ)இலக்கிய நயம் பாராட்டுக
உ)பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக
ஊ) உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
ii.மொழியோடு விளையாடு
அ)எண்ணங்களை எழுத்தாக்குக
ஆ) குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களை
கண்டுபிடிக்க
இ)கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க
ஈ) சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் உருவாக்கு
iii.நிற்க அதற்குத் தக
அ) குறிப்பேடுகள் உருவாக்குதல்
ஆ) படிப்போம் பயன்படுத்துவோம்
பாடவேளை : 4
பக்க எண் : 13 முதல் 20 வரை
கற்பித்தல் நோக்கங்கள்
1) மொழியைப் பிழையின்றி கையாளும் முறை அறிந்து பயன்படுத்துதல்.
2) மொழிப்பயிற்சிகள் மூலம் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் உள்ள பயிற்சிகளை மேற்கொண்டு மொழியின் வளமையை அறிய வைத்தல்.
சிறப்பு நோக்கங்கள்
1) தமிழ்ச்சொற்களை எழுதும்போது ஏற்படும் பிழைகளை அறிதல்.
2) மயங்கொலிகளான ந ,ண , ன / ற , ர / ல ,ள , ழ இவைகளைச் சரியாகப் பயன்படுத்த அறிதல்.
3) எழுத்துக்களின் அடிப்படைச் செய்திகள், எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை அறிதல்.
4) மயங்கொலி , சொற்களில் வரும் இடங்களை அறிதல்.
5) லகர ளகர விதிகளில் சிலவற்றை அறிய வைத்தல்.
6) எவ்வாறு பிழைகளைத் தவிர்க்கலாம் என்பதை புரிய வைத்தல்.
7) தரப்பட்டுள்ள அத்தனை மொழிப்பயிற்சிகளையும் புரிய வைத்து, தமிழ் மொழியின் சொல்வளம் மற்றும் மொழியின் செறிவை அறிய வைத்தல்.
கற்பித்தல் திறன்கள்
1) பாடப்பகுதியை அறிமுகப்படுத்தல் திறன்
2) விரிவுரைத் திறன்
3) எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன்
4) கேள்விகள் கேட்டல் திறன்
5) அறிக்கைகள் முலம் விளக்குதல் திறன்
6)காட்சிப்படுத்தல் திறன்
7) வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல் திறன்
8) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்
ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப் பகுதியான தமிழாய் எழுதுவோம் மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவற்றில் எந்தெந்தப் பாடப் பகுதயின் கருத்துருக்கு எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தெந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.
கற்பித்தல் நுண்திறன்கள்
1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்
2.சரளமாக வினாக்கள் கேட்டல்
3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்
5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்
6. பாடம் முடித்தல்
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் தமிழில் பிழையாக எழுதும் போது ஏற்படும் பொருள் மாற்றத்தை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்
விரிச்சிந்தனைத்யைத் தூண்டும் வினாக்கள் மூலம் மயங்கொலிகளை உச்சரிக்கும் முறையை அறிய வைத்தல். கதைக்கான குறிப்பினைக் கொடுத்துக் கதையை நிறைவு செய்ய வைத்தல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும் திருப்ப கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.
ஆயத்தப்படுத்தல்
1) ஒரு சில சொற்களைக் கூறி அதில் வரும் மயங்கொலி வேறுபாடுகளைப் பல்வேறு எடுத்துக்காட்டுடன் விளக்குதல்.
2) எண்ணங்களை எழுத்தாக்குக பகுதியைக் காட்சிப்படுத்திக் காட்டுதல்
3) மொழிப்பயிற்சி மூலம் சொல்வளத்தையும் சொல்லாட்சியையும் அறிந்து கொள்ள பல்வேறு தகவல்களைக் கூறி விளக்குதல்.
அறிமுகம்
பாடப்பகுதிகளை மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடப்பகுதிகளை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஆர்வமூட்டல்
1.மயங்கொலிச் சொற்களை கூறுதல்
2. லகரம் ளகரம் விதிகளில் சிலவற்றை மாணவர்களிடம் கேட்டல்
3. சான்றோர் வ. சுப. மாணிக்கம் பற்றி கூறுதல்.
4. ஒரு சில சொற்களைக் கூறி அவற்றின் கலைச் சொற்களைக் கேட்டல், ஏன் அவை கலைச்சொற்கள் என்பதைக் கூறுதல்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
துணைக்கருவிகள்
i) பாடம் தொடர்பான காணொலி
ii) இலக்கணம் பாடம் தொடர்பான PPT
iii) மொழப்பயிற்சியை விளக்க Interactive Board ஐ பயன்படுத்துதல்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்களைப்பயன் படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துப் பாடப்பகுதிகளைளயும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியின் துணைத் தலைப்புகளில் இருக்கும் பத்திகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.
மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.
பாடப் பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.
மாணவர் செயல்பாடுகள்
1. பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல், வகுப்பறையில் வாசித்தல்.
2. ஆசிரியர் தரும் கலந்தரையாடல் மற்றும் குழுச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல்.
3. பாடம் தொடர்பான செய்திகளைத் தயாரித்தல்.
4) ஒரு சில படங்களைப் பார்த்து உள்ளத்தில் உருவாகும் செய்திகளை எழுதுதல்.
பாடப்பொருள்
இனிக்கும் இலக்கணம்
தமிழாய் எழுதுவோம்
* ஒரு சில சொற்களைக் கரும்பலகையில் எழுதி அச்சொற்களில் உள்ள மயங்கொலி எழுத்துக்களை அடையாளம் காண வைத்தல்.
* தமிழில் பேசுவது போல எழுதுவதாலும் ஒலி வேறுபாடு அறியாமல் எழுதுவதாலும் ஏற்படும் பிழைகளை விளக்கிக் கூறுதல்.
* எழுதும் போது ஏற்படும் எழுத்துப் பிழை ,சொற்பொருள் பிழை, சொற்றொடர் பிழை பொதுவான பிழைகளை அறிய வைத்தல்.
* ஒரு எழுத்து மாறுவதால் ஏற்படும் பொருள் மாற்றத்தை அறிய வைத்தல். முடிந்தால் தரலாம்/ முடித்தால் தரலாம்.
* அடிப்படைச் செய்தியான உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள்
* எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க ஒழிப்பு முறை ,வரி வடிவ வேறுபாடு - சொற்களில் வரும் இடங்கள்- மயங்கொலிச் சொற்களை வாய் விட்டு வாசித்தல்.
* மெய்யெழுத்து தொடக்கமாக வராது - வல்லின மெய்யுடன் சொல் முடியாது - வல்லி மெய்கள் ஈரொற்றாய் வராது - க் ,ச், த், ப் எழுத்துக்களின் பின் அவ்வெழுத்துக்களே வரும் - ட்,ற் க்குப் பின் அவ்வெழுத்து வரிசையும் க ,ச, ப இவை மூன்றுமே வரும்.
* ட, ற சொல்லின் முதலில் வராது - ஆய்த எழுத்துச் சொல்லில் இடையில் மட்டுமே வரும் - மெல்லின எழுத்துக்களில் ண, ன சொல்லின் தொடக்கத்தில் வராது.
* சொல்லின் இடையில் வல்லின மெய்க்கு முன் வல்லின மெய்யோ அவற்றின் இன மெல்லின மெய் மட்டுமே வரும். பிற மெய்கள் வராது.
* ய்,ர்,ல்வ்,ழ், ள் இவ்வெழுத்துக்குப் பின் வியங்கோள் வினைமுற்று இயல்பாக வரும்.
* ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. *ஞ், ந், வ் எழுத்துக்களில் முடியக்கூடிய சொற்கள் அரிதாகவே உள்ளன.
* ய், ர், ழ் ஒற்றுகள் மட்டும் ஈரொற்றாய் வரும். - தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது .
* தனிக்குறிலை அடுத்து ரகர ஒற்று வரின் தமிழ் இயல்புக்கு ஏற்ப மாற்றி எழுதுதல். (நிர்வாகம்- நிருவாகம்)
* ரகரத்தை எடுத்து ரகர வரிசை எழுத்துக்களும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துக்களும் வராது.
*வருமொழி முதலில் உயிர் வந்தால் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.
* வருமொழி முதலில் உயிர்வரின் அது, இது, எது முறையே அஃது,இஃது, எஃது என்பதாக மாறும்.
லகர ளகர விதிகளில் சிலவற்றைத் தக்க எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறுதல்
- வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. கல் + சிலை கற்சிலை, கடல் + கரை = கடற்கரை.
- லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு.
பல் + முகம் = பன்முகம்.
- ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு.
மக்கள் + பேறு = மக்கட்பேறு.
- ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு.
நாள் + மீன் = நாண்மீன்.
- வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை = சொற்றுணை ;கல் + தூண் = கற்றூண்.
- வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும்.
பல் + நூல் = பன்னூல்.
- அல்வழியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை = அஃறிணை; பல் + துளி = பஃறுளி.
இயக்குநர் என்பதே சரி. இயக்குனர் என்று எழுதுவது தவறு. இயக்கு, ஓட்டு, அனுப்பு. பெறு முதலான வினைகள் . பெயர் இடைநிலையான 'ந்' என்பதைப் பெற்று (ந்+அர்=நர்), ஓட்டுநர், அனுப்புநர், பெறுநர் என்று பெயர்ச்சொற்கள் ஆகின்றன. உறுப்பினர், குழுவினர், ஊரினர் முதலானவை (உறுப்பு, குழு, ஊர்) பெயர்ச்சொற்கள். அதனால், அவை 'இன்' என்னும் சாரியையைப் பெற்று முடிந்துள்ளன.
- சொல் உருவாகும்முறையை அறிந்தும், பொருள் வேறுபாட்டினை உணர்ந்தும் எழுதுகிறபோது பிழைகளைத் தவிர்க்க முடியும்.
- அறம் - அரம்; குறை- குரை; வளம்-வலம்; களம் -கலம்; கிளி-கிலி; என்றாள்-என்றால்; போனாள்-போனால்; ஆணை-ஆனை; மழை-மலை முதலிய சொற்களின் பொருள் வேறுபாட்டினைக் கற்றுணர்தல் மாணவர்களின் இன்றியமையாத பணியாகும்.
பிழை தவிர்க்கச் சில குறிப்புகள்
- எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள, ழ / ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
- தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
- எழுத்துகளை எழுதப் பழகும் போது வாய்விட்டோ,மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
- வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிவகுக்கும்.
- கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய எழுத்துகளின் குறில் / நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.
மொழிப் பயிற்சி
* புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சான்றோர் சித்திரப் பகுதியை வாசிக்க வைத்து அப்பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளைப் புரிந்து விடைகளை எழுத வைத்தல் *தமிழ் மொழி சிறப்புப் பற்றி இரு பக்க கட்டுரை எழுத குறிப்புக் கொடுத்து எழுத வைத்தல்.
* தமிழாக்கம் தருக;
சான்று : A new language is a new life.
விடை: புதிய மொழி புதிய வாழ்வு.
* இலக்கிய நயம் பாராட்டல் பாடலின் மையக்கருத்து மற்றும் தொடை நயம், அணி நயம் சுவை நயம்
பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குதல்.
சான்று: தாயின் முதல் விருப்பம் என்ன?
* உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்தல்.
சான்று:
எலியும் பூனையும் போல
விடை: நானும் என் தம்பியும் எப்போதும் எலியும் பூனையும் போல சண்டையிட்டுக் கொண்டிருப்போம்.
* தரப்பட்டுள்ள படத்தைப் பார்த்து உள்ளத்தில் எழும் சிந்தனையை எழுதுதல். *குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடித்தல்.
சான்று:
சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்
விடை : புதுமைப்பித்தன்
* அந்தாதி தொடரில் கவிதை எழுதுதல்.
* கதையின் தொடக்கத்தை கூறி கதையை முடிக்க வைத்தல்.
கலைச்சொல்
சான்று: Fine Arts - கவின் கலைஞர்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
வலுவூட்டும் செயல்பாடுகள்
1. தமிழாய் எழுதுவோம் பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ள பாடப் பகுதிகளை மீண்டும் மீண்டும் கூறி பாடப்பகுதியைப் புரிய வைத்தல். ஒரு சில சொற்களைக் கூறி அவற்றில் உள்ள பிழைகளை அறிய வைத்தல். பாடப்பகுதியில் எவ்வித குழப்பமும் வராமல் பல்வேறு சான்றுடன் விளக்குதல்
2. மொழிப்பயிற்சியில் தரப்பட்டுள்ள அனைத்துப் பயிற்சிகளையும் சரியான சான்றுடன் விளக்கி அப்பகுதிகளைப் புரிய வைத்தல்.
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப் பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் தமிழ் மொழியின் மொழிவளம், தமிழ் மொழியில் சொற்கள் எவ்வாறு வரும் . எந்த எழுத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் வமைத் தொடர்களை வாக்கியத்தில் அமைத்தல், புதிய புதிய கலைச் சொற்களை அறிதல், தமிழாக்கம் தருதல் ஆகிய பாடக்கருத்துகளை மீண்டும் மீண்டும் துணைக் கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.
கற்றல் விளைவுகள்
1. மயங்கொலிகள் சொற்களில் ஏற்படுத்தும் பொருள் மாற்றங்களை அறிவதன் மூலம் சொற்களைப் பிழையின்றி எழுதும் திறன் பெறுதல்.
2. சொற்களில் எழுத்துகள் வரும் முறைகளை அறிவதன் மூலம் எழுதும்போது சொற்களைச் சரியாக எழுதும் திறன் பெறுதல்.
3. எழுதும் போது ஏற்படும் பிழைகளைப் பற்றி அறிந்ததன் மூலம் எழுதும் போது ஏற்படும் பிழைகளை நீக்கி எழுதும் திறன் பெறுதல்.
4. பல்வேறு மொழிப் பயிற்சி மூலம் மொழிவளத்தை அறிந்ததன் மூலம் மொழி வளத்தைப் பெருக்குதல்.
5. பிறமொழி மற்றும் உவமைத் தொடர்களை வாக்கியங்களில் பயன்படுத்தும் முறையை அறிந்து பயன்படுத்துதல் திறன் பெறுதல்.
எளிய சித்தனை வினாக்கள் LOT QUESTIONS
1. எழுதும்போது ஏற்படும் பிழைகள் யாவை?
2. எழுதும்போது தவிர்க்க வேண்டியவை யாவை?
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1. மக்கள் + பேறு = மக்கட்பேறு என்று மாறுவதற்கான விதிகளை எழுதுக.
2. தமிழாக்கம் தருக
a) The times of my language are the limits of my world.
3. கலைச்சொல் தருக
அ) Research ஆ) Field study
உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1. “குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி”
அந்தாதித் தொடரில் கவித்துவமாக்குக
2. கிலி - கிளி பொருள் வேறுபாடு தருக
3. உயிர்மெய் எழுத்துக்களில் வரும் வரிவடிவம் மாறுபாட்டின் பெயர்களை எழுதுக
தொடர்பணி
1.மயங்கொலிச் சொற்களைப் பொருளுடன் திரட்டி ஒப்படைவு தயாரிக்க
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095