12 /இயல் - நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் 12- 2/1 SLSM/25
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு
பலவுள் தெரிக
1. ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல் (பெ.ஆ.க-1 , 3. மார்ச் 24)
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்தவமும் தமிழும்
விடை : ஈ) கிறித்தவமும் தமிழும்
2. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு இ) அஞ்சிறைத் தும்பி ஈ) திசை எட்டும்
விடை : ஈ) திசை எட்டும்
குறுவினா
1. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக (ஜூலை 2024)
*கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்.
*தமிழரது கலைத்திறனைக் கூறும் நூல்.
*தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற நூல்
2. 'விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்' யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
பாரதிதாசன், மயிலை சீனி. வேங்கடசாமியைப் பற்றி கூறியதாகும்.
தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்வதொன்றை மட்டுமே தனது உயிர்ப்பணியாக மயிலை சீனி. வேங்கடசாமி கொண்டதால் இவ்வாறு கூறுகிறார்.
சிறுவினா
1. மயிலை சீனி வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
( பெ.ஆ.க - 4 ,5)
*கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன். மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைப் படைத்தார்.
*சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.
*களப்பிரர்கள் காலத்தை விரிவாக ஆய்வு செய்து 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் நூலை வெளியிட்டார்.
நெடுவினா
1. மயிலை சீனி வேங்கடசாமி ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர்" என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக (மார்ச் 20 23)
தொடக்க கால ஆய்வு
*ச.த. சற்குணர் உரையைக் கேட்டுக் ‘கிறித்தவம் தமிழும்’ என்ற நூலை எழுதினார்.
*அதன் பின் ‘பௌத்தமும் தமிழும்’ ,’சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை எழுதினார்.
வரலாற்று ஆய்வுகள்
*கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன்.
மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைப் படைத்தார்.
*சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.
*களப்பிரர்கள் காலத்தை விரிவாக ஆய்வு செய்து 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் நூலை வெளியிட்டார்.
கலையியல் ஆய்வுகள்
*‘தமிழர் வளர்த்த அழகு கலைகள்’ என்னும் நூல் கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல்.
*இறைவன் ஆடிய ‘ஏழு வகை தாண்டவம்’, ‘நுண் கலைகள்’, ‘இசைவாணர் கதைகள்’ ஆகிய நூல்களை எழுதினார்.
*தனது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டார்.
இலக்கிய ஆய்வு
*‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலில் தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். *‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தது.
*கட்டுரைகளைச் ‘செந்தமிழ் செல்வி’ என்ற இதழில் எழுதினார் .அவை ‘அஞ்சுறை தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
இவரின் ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தைப் படைத்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ள இதுவே அடிப்படையாக இருந்தது. இவரது பன்மொழிப் புலமை இவரது ஆராய்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியது.