Loading ....

U-11th Tamil-Unit Test-June 2025-Monthly Test-Question paper-11ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-ஜூன் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

 11 /இயல் 1 -அலகுத் தேர்வு                                                             11-1/1 UT/25

ஜூன் மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                                                           வகுப்பு : 11

நேரம் : 1.30 மணி                                                                 மதிப்பெண் : 50


பலவுள் தெரிக                                                                             8 X 1 = 8

1. தவறான இணையைத் தேர்வு செய்க.

அ) மொழி + ஆளுமை  - உயிர் + உயிர் ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்

இ) கடல் + அலை    - உயிர் + மெய் ஈ) மண் + வளம் -  மெய் + மெய்

2.மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.

அ) அன்னம், கிண்ணம்         ஆ) டமாரம், இங்ஙனம்     

 இ) ரூபாய், லட்சாதிபதி         ஈ) றெக்கை, அ  ங்ஙனம்

3.பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க

அ) மல்லார்மே                         - யுகத்தின் பாடல்

ஆ) இன்குலாப்                         - ஒவ்வொரு புல்லையும்

இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்

ஈ) இந்திரன்                 - பேச்சுமொழியும் கவிதை மொழியும்.

4.மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது எனக் கூறியவர்.

அ) வால்ட் விட்மன் ஆ) எர்னஸ்ட் காசிரர் இ) ஆற்றூர் ரவிவர்மா     ஈ) பாப்லோ நெரூடா

5. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்

அ) 22 ஆ) 48 இ) 18 ஈ) 24

6. 'பால் நிலாப்பாதை' என்ற நூலை எழுதியவர்:

அ) ஏ.ஆர்.ரகுமான். ஆ) இளையராஜா இ) இந்திரன் ஈ) இன்குலாப்

7. 'புல்லின் இதழ்கள்' என்ற உலகப்புகழ் பெற்ற நூல் யாருடைய படைப்பாகும்?

அ) பாப்லோ நெரூடா           ஆ) மல்லார்மே         இ) வால்ட்விட்மன் ஈ) எர்னஸ்ட் காசிரர்

8.மனித இனத்தின் ஆதி அடையாளம்:

அ) எழுத்து ஆ) பேச்சு இ) மொழி ஈ) பாட்டு

குறுவினா ( எவையேனும் ஐந்தனுக்கு மட்டும் )                             4 X 2 = 8

9. உயிரீறு, மெய்யீறு விளக்குக.

10.பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

11. “நீளும் கைகளில் தோழமை தொடரும் 

நீளாத கைகளில் நெஞ்சம் படரும்”- தொடை நயங்களை எடுத்தெழுதுக.

12.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

13. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.

14. கவிதை என்பது யாது? என்ற வினாவிற்கு இந்திரன் அளிக்கும் விடை யாது?

சிறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)                          3  X 4  = 12

15. கவிதை ஒரு படைப்புச் செயல்பாடு என்பதை விளக்குக.

16. இன்குலாப், உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்" எனக்கூறுவதன் நயத்தை விளக்குக

17.சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

18."நேரடி மொழி" என்பதை  நும் பாட வழி நின்று  எழுதுக.

நெடுவினா ( ஏதேனும் ஒன்று மட்டும் )                                         1 X 6 = 6

19. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

20. சிம்பொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.

அனைத்திற்கும் விடை தருக                                         6 X 2 = 12 

21.தமிழாக்கம் தருக.

அ) A picture is worth a thousand words. ஆ) Work while you work and play while you play.

22.பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.

அ) விசா ஆ) கோரிக்கை

23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அ ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.

ஆ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.

24. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.

பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.

25.வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி வினைமுற்று, வினையாலணையும் பெயர் எழுதுக.  

 அ) பாடு ஆ) பேசு

26. கலைச்சொல் தருக.

அ ) Aesthetics ஆ) Book Review

அடிமாறாமல் எழுதுக. 4

27.”ஏடு தொடக்கி…. எனத் தொடங்கும் பாடல் 



 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.





















 



Post a Comment

Previous Post Next Post