Loading ....

S-12th Tamil-தமிழ்- இயல் 1 - தம்பி நெல்லையப்பருக்கு -2025-மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு- Slow learners study material-

 12 /இயல்  - தம்பி நெல்லையப்பருக்கு              12- 4/1 SLSM/25

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு


நெடுவினா 

1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க  (மே 2022,செப் 2021,மார்ச் 2023 )


மொழிப்பற்று:

* எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.

* புதிய செய்தி புதிய யோசனை, புதிய உண்மை, புதிய இன்பம் முதலியன தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.

* வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் பெருக வேண்டும்.

* தமிழ்ப் பள்ளிகளில் நவீன கலைகளெல்லாம் பயிற்றுவிக்கப் பெற்று வளர வேண்டும்.

* பிற மொழிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக்கண்டு, நாமும் தமிழ்மொழியில் பற்பல புதுமைகள் செய்து தமிழ்மொழியை வளர்க்க வேண்டும்.

சமுகப்பற்று

*  ஆண், பெண் ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும்.

* ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை.

* பெண்ணைத் தாழ்மை செய்தோன் தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டதற்குச் சமமானவன்

* பெண்ணை அடைத்தவன்; கண்ணை அடைத்தவன்.

* தொழில்கள், வியாபாரம் வளர வேண்டும்.

* தொழிலுக்குத் தேவையான எந்திரங்கள் பெருக வேண்டும்.

* இசை, சிற்பம், யந்திரநூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூல்களெல்லாம் தமிழ்நாட்டில் பெருக வேண்டும்.

* முயற்சிகள் ஓங்கி, நாடு செழிக்க வேண்டும்.

இவ்வாறு பாரதியார் தம் மொழிப்பற்றையும் சமூகப் பற்றையும் சீரிய சிந்தனைகளால் வெளிப்படுத்த நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.



எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.

இயல் - 1
தன்னேர் இலாத தமிழ் -   Click Here 
நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர்Click Here
இளந்தமிழே - Click Here 

Post a Comment

Previous Post Next Post