12 /இயல் - தம்பி நெல்லையப்பருக்கு 12- 4/1 SLSM/25
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு
நெடுவினா
1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க (மே 2022,செப் 2021,மார்ச் 2023 )
மொழிப்பற்று:
* எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.
* புதிய செய்தி புதிய யோசனை, புதிய உண்மை, புதிய இன்பம் முதலியன தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.
* வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் பெருக வேண்டும்.
* தமிழ்ப் பள்ளிகளில் நவீன கலைகளெல்லாம் பயிற்றுவிக்கப் பெற்று வளர வேண்டும்.
* பிற மொழிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக்கண்டு, நாமும் தமிழ்மொழியில் பற்பல புதுமைகள் செய்து தமிழ்மொழியை வளர்க்க வேண்டும்.
சமுகப்பற்று
* ஆண், பெண் ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும்.
* ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை.
* பெண்ணைத் தாழ்மை செய்தோன் தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டதற்குச் சமமானவன்
* பெண்ணை அடைத்தவன்; கண்ணை அடைத்தவன்.
* தொழில்கள், வியாபாரம் வளர வேண்டும்.
* தொழிலுக்குத் தேவையான எந்திரங்கள் பெருக வேண்டும்.
* இசை, சிற்பம், யந்திரநூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூல்களெல்லாம் தமிழ்நாட்டில் பெருக வேண்டும்.
* முயற்சிகள் ஓங்கி, நாடு செழிக்க வேண்டும்.
இவ்வாறு பாரதியார் தம் மொழிப்பற்றையும் சமூகப் பற்றையும் சீரிய சிந்தனைகளால் வெளிப்படுத்த நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
இயல் - 1
தன்னேர் இலாத தமிழ் - Click Here