Loading ....

U-12th Tamil-Unit Test-June 2025-Monthly Test-Question paper-12ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-ஜூன் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

 


12 /இயல் 1 -அலகுத் தேர்வு                                                         12- 2/1 UT/25

ஜூன் மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                                                     வகுப்பு : 12

நேரம் : 1.30 மணி                                                             மதிப்பெண் : 50



பலவுள் தெரிக                                                                 10 X 1 = 10 

1. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்

அ) தொல்காப்பியம் ஆ) தண்டியலங்காரம் இ) வீரசோழியம் ஈ) முத்து வீரியமம்

2. பொருத்துக.

அ) உயர்ந்தோர்     - 1. வினைத்தொகை

ஆ) இலாத             - 2. வினையாலனையும் பெயர்

இ) விளங்கி     - 3. இடைக்குறை

ஈ) சிவந்து             - 4. வினையெச்சம்

அ) 3 4 1 2     ஆ)2 4 1 3     இ) 4 3 2 1             ஈ) 2 3 4 1

3. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

அ) மத்த விலாசம்                     ஆ) தமிழ்நாட்டு வரலாறு

இ) அஞ்சிறைத் தும்பி             ஈ) திசை எட்டும்

4. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'மலையாளக் கவிதைகள்' என்பது நூலாகும்.

அ) கவிதை     ஆ) மொழிபெயர்ப்பு     இ) உரைநடை     ஈ) புதினம்

5. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன்கொடியில் பொறித்த சின்னம்

அ) வில்     ஆ) புலி                                     இ) யானை             ஈ) மீன்

6. மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கட சாமி மறைந்து போனதாக்க் குறிப்பிடும் நூல்களின் எண்ணிக்கை

அ) 336     ஆ) 333                             இ) 343 ஈ) இவற்றில் எதுவும் இல்லை

7.செம்பரிதி...''எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு 

அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ             இ) சர்ப்பயாகம்             ஈ) சூரியநிழல்

8. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

9. பொருந்தாத சொல்லை அறிக.

அ) உறுப்பினர்     ஆ) குழுவினர்     இ) இயக்குனர்             ஈ) ஊரினர்

10. கீழ்க்காண்பவற்றுள் தவறானதைத் தேர்க.

அ) கடல் + கரை = கடற்கரை

ஆ) கல் +  சிலை = கற்சிலை

இ) மக்கள் + பேறு = மக்கள் பேறு

ஈ) நாள் + மீன் = நாண்மீன்

குறுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 2 = 4 

11. தண்டியலங்காரம் குறிப்பெழுதுக

12. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

13. "முன்னம் ஓர்நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்" யார், யாரைப் பற்றி கூறியது?

குறுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 2 = 4 

14. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்"நூல் பற்றிக் குறிப்பு வரைக.

15. மயிலையார் பெற்ற விருதுகளையும் சிறப்புகளையும் எழுதுக.

16. தமிழர் பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர் மயிலை சீனி.வேங்கடசாமி நிறுவுக.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2 X 2 = 4 

17. புணர்ச்சி விதி தருக  

செந்தமிழே               

18. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

அச்சாணி இல்லாத தேர் போல

19. கலைச்சொல் தருக 

அ) Research ஆ) Field Study

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3 X 4  = 12 

20. பொருள் வேற்றுமை அணியை எடுத்துக் காட்டு கூறி விளக்குக.

21. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

22. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

23. இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி 

அச்சங்கத் துள்ளே 

அளப்பரிய பொருள்கூட்டி 

சொற்சங்க மாகச் 

சுவைமிகுந்த கவிகூட்டி 

அற்புதங்க ளெல்லாம்

அமைத்த பெருமாட்டி! 

- கண்ணதாசன்


நெடுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 6  = 12

24. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

25. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.

26. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

அடிபிறழாமல் எழுதுக. 4

27. 'ஓங்கலிடை' எனத் தொடங்கும் 'தன்னேர் இலாத தமிழ் பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.

இயல் - 1
June monthly Test - மாதரி வினாத்தாள் - 1 Click Here 

Post a Comment

Previous Post Next Post