Loading ....

OW-12th Tamil-unit 2-One word-Book Back-PTA Questions-Government Exam-March-September-July-2025-12th தமிழ்-ஒரு மதிப்பெண்- வினா விடைகள் --இயல் 2-

 12 T/ OW- இயல் 2 BB & G/ QP -25


இயல்  - 2  

புத்தக வினாக்கள் 

இலக்கணத் தேர்ச்சி கொள் (பக்கம்.37

1. தமிழில் திணைப்பாகுபாடு _______________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

 (பெ.ஆ.க 4, செப் 2021 , மே 2022)

அ) பொருட்குறிப்பு

ஆ) சொற்குறிப்பு

இ) தொடர்க்குறிப்பு`

ஈ) எழுத்துக்குறிப்பு

விடை :  அ) பொருட்குறிப்பு|


2. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

      அஃறிணை என்மனார் அவரல பிறவே" -இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் (மார்ச்-2025)

அ) நன்னூல்

ஆ )அகத்தியம்

இ) தொல்காப்பியம்

ஈ) இலக்கண விளக்கம்

விடை :  இ) தொல்காப்பியம்


3. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே

( ஆகஸ்ட் 2022 , ஜூலை 2024 ) 

அ) அஃறிணை, உயர்திணை

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத்திணை, அஃறிணை

ஈ) விரவுத்திணை, உயர்திணை

விடை :  ஆ) உயர்திணை, அஃறிணை 


4. பொருத்தி விடை தேர்க

அ) அவன், அவள், அவர் - 1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் -2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

இ) நாம் முயற்சி செய்வோம் - 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்

ஈ) நாங்கள். நாம் - 4. பதிலிப் பெயர்கள்

அ) 4 1 2 3

ஆ) 2 3 4 1

இ) 3 4 1 2 

ஈ ) 4 3 1 2

விடை :  அ) 4 1 2 3


நம்மை அளப்போம் ( பக்கம் : 38 )

பலவுள் தெரிக

1. பொருத்துக  (மார்ச் 2024 )

அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன

ஆ) விலங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன

இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின

ஈ ) பசுக்கள் - 4. மேய்ச்சலை மறந்தன

அ) 1 3  4  2

ஆ) 3 4 2 1

இ)3 2 1 4

ஈ) 2 1 3 4

விடை : ஆ) 3 4 2 1


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது.

(செப்2020 , செப்-2021, ஆகஸ்ட் 2022)

அ ) சூரிய ஒளிக்கதிர்

ஆ) மழைமேகங்கள்

இ) மழைத்துளிகள்

ஈ)நீர் நிலைகள்

விடை : ஆ) மழைமேகங்கள்


3. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் காரணம்  (மார்ச் 2024)

அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்

ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு

இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை

ஈ) அ,ஆ , இ அனைத்தும்

விடை : ஈ) அ,ஆ, இ அனைத்தும்


4. 'பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பைத் தேர்க. (மார்ச் 2020, ஜூன் 2023)

அ) வினைத் தொகை

ஆ) உரிச்சொல்தொடர்

இ)இடைச்சொல்தொடர்

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

விடை : ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்


5. கூற்று           : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

     காரணம்    : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.(செப் 2020)

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று சரி, காரணம் சரி

விடை : ஈ) கூற்று சரி, காரணம் சரி


 அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல்  வினா - விடைகள்


1. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது (பெ.ஆ.க.4)

அ) முகலாயக் கட்டடக்கலை

ஆ) பிரித்தானியக் கட்டடக் கலை

இ) இந்தியப் பாரம்பரியக் கட்டடக் கலை

ஈ) இவை மூன்றும் கலந்தது

விடை : ஈ) இவை மூன்றும் கலந்தது


2. மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் (பெ.ஆ.க.2)

அ) வடசென்னைப் பகுதிகள்

ஆ) தென்சென்னைப் பகுதிகள்

இ) மத்திய சென்னைப் பகுதிகள்

ஈ) இவை மூன்றும்

விடை : அ) வடசென்னைப் பகுதிகள் 

3. இந்தியாவின் முதல் பொது நூலகம் (மார்ச் 2023)

அ) கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்

இ) கன்னிமாரா நூலகம்

ஈ) சென்னை இலக்கியச் சங்கம்

விடை : இ) கன்னிமாரா நூலகம்


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


4. நெடுநல்வாடை __________________ அடிகளைக் கொண்டது. (பெ.ஆ.க.2)

அ) 150

ஆ)188

இ ) 186

ஈ )144

விடை : ஆ)188


5. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று (பெ.ஆ.க.2)

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) நெடுநல்வாடை

ஈ) நற்றிணை

விடை : இ) நெடுநல்வாடை

6. புதுப்பெயல் பொழிந்தென அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு ( ஜூலை 2024 ) 

அ) வினைத்தொகை

ஆ) உரிச்சொல் தொடர்

இ) பண்புத் தொகை

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : இ) பண்புத் தொகை 


7. 'வெள்ளம்' என்று பொருள் தரும் சொல் (பெ.ஆ.க. 1, பெ.ஆ.க 2 )

அ) பனிப்ப

ஆ) ஏறுடை

இ) நீடுஇதழ்

ஈ) ஆர்கலி

விடை : ஈ) ஆர்கலி


8. 'முதல்கல்' என்னும் சிறுகதையின் ஆசிரியர் 

(பெ.ஆ.க. 1, மார்ச் 2020 )

அ) பூமணி

ஆ) உத்தமசோழன்

இ) பிரபஞ்சன்

ஈ) நா.காமராசன்

விடை : ஆ) உத்தமசோழன்


9. 'முதல் கல்' சிறுகதை உணர்த்தும் கருத்து ( செப் 2020 ) 

அ) ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்

ஆ) தனி மரம் தோப்பாகாது

இ) தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்

ஈ) மாற்றம் ஒன்றே மாறாதது

விடை : ஆ) தனி மரம் தோப்பாகாது



எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


இயல் 1 
ஒரு மதிப்பெண் வினா விடைகள் - Click Here




Post a Comment

Previous Post Next Post