Loading ....

12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2 - (2021)வகுப்பு12- இயல் 2 - தமிழ் - பிறகொருநாள் கோடை-நால்வகைப் பொருத்தங்கள்


12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2|(2021)

திருத்தப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு.



தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST - 1

வகுப்பு : 12        தமிழ்         இயல் : 2

பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்


நேரம் : 25 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 20


I.பலவுள் தெரிக                                                                                                             6 x 1 = 6

1.நரம்புகளுக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது

அ)சூரிய ஒளிக்கதிர்                                             ஆ) மழை மேகங்கள் 

இ) மழைத்துளிகள்                                ஈ) நீர்நிலைகள் 

2.பொருத்தி விடை தேர்க 

அ) அவன் அவள் அவர்                         - 1.உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை 

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்     - 2.உளப்பாட்டுத் தன்மைப் பன்மை 

இ) நாம் முயற்சி செய்வோம்              - 3.தன்மைப் பன்மைப் பெயர்கள் 

ஈ) நாங்கள் நாம்                                      - 4.பதிலிடு பெயர்கள்

அ) 4 1 2 3                            ஆ) 2 3 4 1                      இ) 3 4 1 2                         ஈ) 4 3 1 2  

3. பொருத்தி தேர்க 

அ ) இன்று                                   - 1. கவிதை நூல் 

ஆ) நீர்வழி                               - 2. வீணை

இ) சிவகங்கை                      - 3. அய்யப்பமாதவன் 

ஈ)  நரம்புகள்                         - 4. கவிதை குறும்படம் 

அ) 3 4 1 2                           ஆ) 2 4 1 3                     இ) 3 1 4 2                          ஈ) 2 1 3 4

 

4. யார்? எது?  ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ______________

அ) அஃறினை, உயர்திணை                        ஆ) உயர்திணை, அஃறிணை  

இ) விரவுதிணை, அஃறிணை                        ஈ) விரவுதிணை, உயர்திணை 

5. சரியானதைத் தேர்க 

அ) பதிலிடு வினைச்சொல்                  - 1. அவர்கள் 

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்      - 2. உளப்படுத்த தன்மைப் பன்மை 

இ) பத்து மரம் வீழ்ந்தது                         - 3. ஒருமைப் பன்மை வேறுபாடு எழுவாயில்

                                                                              வெளிப்படவில்லை 

ஈ) யார்?  எது?                                            - 4. விரவுத்திணை, அஃறினை 

6. தமிழில் திணைப்பாகுபாடு _____________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது 

அ) பொருட்குறிப்பு                                             ஆ) சொற்குறிப்பு   

இ) தொடர்க்குறிப்பு                                            ஈ) எழுத்துக்குறிப்பு


II.குறுவினா                                                                                                                     3 x 2 = 6

7. ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது’ - விளக்கம் தருக. 

8. உயர்திணை பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக 

9. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை? 


III.சிறுவினா                                                                                                                                     

10. ‘நீர் நிலைகளில் இருந்து உதடுகள் குவித்து 

       உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’- இக்கவிதையின் அடி, 

      ‘தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் 

       பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை பற்றி எழுதுக

11`.  கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிக் குறிப்பு எழுதுக


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095




Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


                           திருத்தப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு.

 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST - 2

பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்


வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 1

நேரம் : 25  நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 20


விடைகள்


I.பலவுள் தெரிக                                                                                                                           6 x 1 = 6

1.இ) மழைத்துளிகள்      

2. அ) 4 1 2 3    

3. இ) 3 1 4 2      

4. ஆ) உயர்திணை, அஃறிணை  

5. ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்      - 2. புலப்படுத்த தன்மைப் பன்மை 

6. அ) பொருட்குறிப்பு  


II.குறுவினா                                                                                                                                    3 x 2 = 6

7.  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது:

  •  மழை பெய்ந்து ஓய்ந்த பின்பு மழைக்கான சுவடுகள் அறிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய் காட்சி அளிக்கின்றது.

  • இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத்துளிகள் மீது விழுகின்ற சூரிய கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை நிறமாக காட்சி அளிக்கின்றது.

           

8. உயர்திணை பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்கள்:

  1. மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்

  2.  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தனர்.


9. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன: 

         மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன , திணை,பால்,எண், இடம் ஆகியனவாகும்.


III.சிறுவினா                                                                                                                                    2 x 4 = 8


10. நாட்டுப்புறப்பாடல்: 

        புல்லிலும், பூவிலும் அதிகாலை நேரத்தில் விழும் பனித்துளிகளை ஞாயிற்றின் கதிர்கள் தனக்குள் வாங்கிக் கொள்கிறது என்று நாட்டுப்புறப் பாடல் கூறுகின்றது.

 பிறகு ஒருநாள் கோடை:

         குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் சூரியனின் வெப்ப கதிர்களால் நீர் ஆவியாகி மாறுவதை அய்யப்ப மாதவனின் கவிதை வரிகள்  கூறுகின்றன.

நயம் :

         சூரியனின் செயல்பாட்டை நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்துக் கொண்ட கவிஞர் சூரியனின் ஒளிக்கதிர்கள் இதழ்கள் போல செயல்பட்டு நீர்நிலை நீரை உறிஞ்சுகின்றன என்கிறார். மூங்கிலிலை நீரை எப்படிக் கதிரவன் எடுத்துக்கொள்கின்றனோ அதேபோன்று நீர்நிலைகள் நீரினையும் கதிரவன் எடுத்துக்கொள்கிறான். இவ்வாறு நாட்டுப்புறப் பாடல் அடிகளோடு அய்யப்ப மாதவனின் கவிதை அடிகள்  ஒன்றி அமைவதை நாம் உணர முடிகிறது.


11. அய்யப்ப மாதவன்

  •  சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச்  சார்ந்தவர்.

  •  இவரது தந்தை பெயர் வே.  மாதவன், அம்மா பெயர் மா.  மீனாட்சி

  •  இவர் 18 - 4 - 1966-  இல் பிறந்தார். சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார்.

  •  இதழியல் துறை, திரைத்துறையில்  பணியாற்றி வருகின்றார்.

  • ‘இன்று’ என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நான் என்பது வேறொருவன், நீர்வழி உள்ளிட்ட 11 கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.







எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095





Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official


இயல் - 1


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here


டிசம்பர் 2021,

திருப்புதல் தேர்வு -மாதிரி வினாத்தாள்-1 : click here



12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.




இயல் - 2

SLIP TEST -1 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள்

Pdf DOWNLOAD👇👇👇



Photo by Kimberly Farmer on Unsplash

Post a Comment

Previous Post Next Post