Loading ....

11th Tamil -Study Material - Unit 5- Slip test - சீறாப்புராணம்

11th Tamil -Study Material - Unit 5- Slip test - சீறாப்புராணம்   

11th Tamil -Study Material - Unit 5- Slip test - சீறாப்புராணம்




பதினொன்றாம் வகுப்பு 

பொதுத்தமிழ் 

இயல் 5 சீறாப்புராணம் 

உமறுபுலவர்

 ஹிஜிரத்துக் காண்டம்- மதீனம் புக்க படலம் 

மாளிகை நகரம் , கொடை நகரம்,  பொன்னகரம்,  மனை நகரம்,  மாநகரம் , ஒண்ணகரம்,  செம்மை நகரம் 

சீறாப்புராணம் கவிதைப் பேழையில்  அடங்கியிருக்கின்றன, புத்தகத்தின் வினாக்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு( SLIP TEST) அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வை நீங்கள் எழுதுவதன் மூலம் உங்களுக்குச் சீறாப்ப்புராணம் பகுதியில் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. சீறாப்புராணம் புத்தக வினா விடைகளை நன்றாகப் படித்து இந்தத் தேர்வை( SLIP TEST) நீங்கள் எழுதினீர்கள் என்றால் பொதுத்தேர்வு எழுதுகின்ற போது உங்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட போவது இல்லை. எனவே, இயல் - 5 இருக்கின்ற சீறாப்புராணம் பகுதிக்கான இந்தத் தேர்வை( SLIP TEST) நீங்கள் எழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்களை வாழ்த்துகின்றேன். Kurusady M.A. Jelestin


11 ஆம் வகுப்பு 

                                                        இயல் -5 

சீறாப்புராணம் 

Silp Test

நேரம் : 40 நிமிடம்                                                                              மதிப்பெண் : 25 

வினாக்கள்

பலவுள் தெரிக.                                                                                                     5 X 1  = 5

1. “புடவி” என்பதன் பொருள் 

அ) கடல்                             ஆ) மலை                        இ) ஆறு                             ஈ) பூமி 

2. உறுபகை,இடன் ஆகிய சொற்களுக்கு உரிய  இலக்கணக்குறிப்பு

அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி                               ஆ) வினைத்தொகை , இடவாகுபெயர் 

இ) வினையெச்சம் , வினைத்தொகை                                ஈ) பெயரெச்சம் ,  பண்புத்தொகை 

3. சரியானதைத் தேர்க  

அ) வரை                       -  இறுதி                                       ஆ) வதுவை    -  திருமணம் 

இ) வாரணம்                -  வண்ணம்                                  ஈ) புடவி          -  கடல்

4. சரியானதைத்  தேர்க. 

அ) வரை               -    மலை                                ஆ) வதுவை         -    திருமணம் 

இ) வாரணம்       -     யானை                                ஈ) புடவி                -    கடல்

1) அ, ஆ,  இ - சரி , ஈ - தவறு                            2) ஆ , இ, ஈ , - சரி , அ - தவறு

3) அ , இ , ஈ , -  சரி , ஆ - தவறு                       4) அ , ஆ , ஈ , - சரி , இ - தவறு

5. பொருத்தித் தேர்க

அ) துன்ன                      -  1.  அளித்தல் 

ஆ) எய்தல்                      -  2.  நிறைந்த 

இ) மண்டிய                    -  3.  நெருங்கிய

ஈ) நல்கல்                        -  4.  பெறுதல்

அ) 3 4 2 1                              ஆ) 3 4 1 2                                 இ) 3 1 4 2                     ஈ) 3 2 4 1 

குறுவினா                                                                                                    3 X 2 = 6

6. “ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்ந்தநல் 

      தீன்எனுஞ் செல்வமே பகுத்த சேணகர்” 

                        - இப்பாடலடிகளில் ஒளிரக் காய்ந்தது எது? பழுத்தது எது?

7. மதீனா நகரம் ஒரு ஒண்ணகரம்  என்னும் கூற்றினை உறுதிப்படுதுக ?

8. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.



மொழிப்பயிற்சி                                                                                   3 X 2 = 6

9. நெருங்கின - உறுப்பிலக்கணம் தருக.

10. இலக்கணக்குறிப்புத் தருக

      அ) உறுபகை              ஆ) தவமும் ஈகையும் 

11. புணர்ச்சி விதி தருக 

        மனையென    

சிறுவினா                                                                                                      2 X 4 = 8

12 .”கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” - யாது ?

13.  “மறுவிலா அரசெனை இருந்த மாநகர்” -  உவமையைப் பொருளுடன் விளக்குக. 




குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


 




 11 ஆம் வகுப்பு 

                                                        இயல் -5 

சீறாப்புராணம் 

Silp Test

                                                                                                                            

நேரம் : 40 நிமிடம்                                                                              மதிப்பெண் : 25 

விடைகள்

பலவுள் தெரிக.                                                                                                     5 X 1  = 5

1. ஈ) பூமி 

2. அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி 

3. ஆ) வதுவை     -  திருமணம்

4. 1) அ, ஆ,  இ - சரி , ஈ - தவறு

5. அ) 3 4 2 1

குறுவினா                                                                                                    3 X 2 = 6

6.      *   மதினா நகரில் திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் 

              தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன. 

  • தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.

7. ஒண்ணகரம்:


          அலைகடலானது முத்தையும் பல்வேறு அணிகளையும் சிதறுவது போல் மதீனா நகரில் மக்கள்  பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்.தேன்  அருந்தியவர்கள் மயங்குவது போலே பலவாறான பொருள் வளத்தால்  ஒளி பெற்று திகழ்கிறது மதீனா நகரம்.




8. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

  • மதினா நகரில் மேல்மாடங்கள் மலைபோல் உயர்ந்து இருந்தன. 

  • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி பெரும் கடல் ஒலிபோல் இருந்தது. 

  • மதினா நகரின் வீதிகள் பிரபஞ்சம் போல் பரந்து விரிந்து இருந்தன. 

  • அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன. 

  • தோரணங்களும் கட்டப்பட்டு பொன்னகர் போல் பொலிந்தது. 

  • அதனால் மதீனா நகரம் ‘ஒரு மாளிகை நகரம்’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது.


மொழிப்பயிற்சி                                                                                   3 X 2 = 6

9. நெருங்கின - உறுப்பிலக்கணம் தருக.

                      நெருங்கின    =   நெருங்கு + இன் + அ

                              நெருங்கு    -      பகுதி

                                      இன்     -      இறந்தகால இடைநிலை

                                          அ      -      பெயரெச்ச விகுதி

10. இலக்கணக்குறிப்புத் தருக

அ)  உறுபகை  - உரிச்சொல் தொடர்

ஆ) தவமும் ஈகையும் - எண்ணும்மை

11.புணர்ச்சி விதி தருக 

        மனையென  = மனை + என 

 i ) இ ஈ ஐ வழி யவ்வும்   > மனை ய் = என

ii) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே   > மனையென 

சிறுவினா                                                                                                      2 X 4 = 8

12 .”கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” 

               மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்ததால், கலைஞர்களும் மறையவர்களும்  தாம் எண்ணிய பொருள் வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்.

13.  “மறுவிலா அரசெனை இருந்த மாநகர்” -  உவமையைப் பொருளுடன் விளக்குக

 “குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவது போல” என்பது உவமையின் பொருள். உவமை :  குறைவில்லாத மானுட அறத்தைப் பெற்ற சிறந்த அரசு. 

உவமேயம்  : அழகுடன் இருந்த மதீனா நகரம்.

உவம உருபு: என 

பொருத்தம் : 

  • குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவது போல என்பது உவமையின் பொருள்.

  •  மதினா நகருக்கு இஃது உவமையாக கூறப்பட்டுள்ளது. 

  • மாநகரில் வறுமை நோய் முதலான குற்றங்கள் எதுவும் இல்லை.

  • அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோல் ஆட்சி புரிந்தது.

  •  அதனால் மதீனா நகரம், சிறந்த அரசைப் போல் பொலிவுடன் இருந்தது என உமறுப்புலவர் கூறுகிறார்.



குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


 

11 ஆம் வகுப்பு 

இயல் -5 

சீறாப்புராணம் 

SLIP TEST

QUESTION & ANSWER Pdf

download 👇👇👇👇👇

You have to wait 30 seconds to get the download Button.

Download Timer



11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360°



Image by ankur parmar from Pixabay
 




Post a Comment

Previous Post Next Post