Loading ....

12th Standard -Tamil -Study Material - SECOND REVISION EXAM - MARCH 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY


12th Standard -Tamil -Study Material - SECOND REVISION EXAM - MARCH 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY




தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022  இடம்பெற இருக்கின்ற தேர்விற்கான Model Question Paper with Answer key இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022  இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.




 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022  நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.




 

  இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற இரண்டாம் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022  நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாக தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 



REDUCED SYLLABUS 

இரண்டாம் திருப்புதல் தேர்வு -மார்ச் 2022

மாதிரி வினாத்தாள் - 2

இயல் : 4, 5, 6

வகுப்பு - 12

பொதுத்தமிழ்

நேரம் : 3 மணி                                                                                                                                                      மதிப்பெண் : 90


அறிவுரைகள் :

i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும்.  அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். 

ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 

குறிப்பு   :

  i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்,  சொந்த நடையிலும்   அமைதல் வேண்டும். 

 ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                                      14 x 1 = 14

1.படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க 



அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

      திண்ணியர் ஆகப் பெறின்

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

      அச்சாணி அன்னார் உடைத்து 

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 

      மற்றைய எல்லாம் பிற 

2.நெடுங்கணக்கு என்பது 

அ) நீண்ட கணக்கு                 

ஆ) கணிதம்                      

இ) பெருக்கல் கணக்கு                      

ஈ ) அரிசுவடி

3. பொருத்துக

அ) மாச்சீர்                     -  1. கருவிளம், கூவிளம்  

ஆ) காய்ச்சீர்               -  2. நாள்,  மலர் 

இ) விளச்சீர்                 -  3. தேமாங்காய்,  புளிமாங்காய் 

ஈ) ஓரசைச்சீர்             -  4. தேமா,  புளிமா

அ) 1 2 4 3                                          

ஆ) 4 3 1 2                            

இ) 2 3 1 4                                       

ஈ) 3 4 2 1

4.‘உள்ளொன்று  வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ இத்தொடர் உணர்த்தும் பண்பு

அ) நேர்மறைப் பண்பு       

ஆ) எதிர்மறைப் பண்பு             

இ) முரண் பண்பு              

ஈ) இவை அனைத்தும்

5.பொருத்துக

அ) பாம்போடு உடன்  உரைந்தற்று                  -   1. தீக்காய்வார் 

ஆ) செத்தார்                                                                      -   2. சீர் அழிக்கும் சூது 

இ) வறுமை தருவது                                                    -   3. கள் உண்பவர் 

ஈ) இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்       -   4. உடம்பாடு இலாதவர்

அ) 1 2 3 4                                        

ஆ) 2 3 4 1                            

இ) 4 1 2 3                                       

ஈ) 4 3 2 1 

6. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் (பக் : எண் : 161)

அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர் 

ஆ) மனத்திட்பம் உடையவர் 

இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் 

ஈ) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பவர். 

7. . “ஏழ் ஆண்டு இயற்றி  ஓர் ஈராறு ஆண்டில் சூழல்கழல்  மன்னற்குக்  காட்டல்” - தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.

கூற்று  1 :  மாதவி 7 ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 

கூற்று  2 :  ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1 சரி 2  தவறு                      

ஆ) 1 தவறு 2  சரி                           

இ) 1 தவறு 2 தவறு        

ஈ) 1 சரி 2  சரி 

8. பொருந்தாதைத் தேர்க 

அ) மயிலாப்பூர்                                      -   சென்னை

ஆ) திருமுறைகள்                              -   பன்னிரண்டு

இ) திருஞானசம்பந்தர்                    -   தேவாரம்

ஈ) மாசி                                                           -   ஆரவாரவிழா

9. “ தொழுதனர்” - இச்சொல்லில் வரும் பகுபத உறுப்புகள் 

அ) பகுதி , சந்தி , சாரியை , விகுதி               

ஆ)  பகுதி , இடைநிலை , விகுதி 

இ) பகுதி , சந்தி ,இடைநிலை , விகுதி           

ஈ)  பகுதி ,இடைநிலை , சாரியை , விகுதி

10. சரியான எழுத்து வழக்கைத் தேர்ந்தெடுக்கவும் 

அ) இப்ப எனக்குப் புரிஞ்சிச்சி நீயும் புரிஞ்சிக்க

ஆ) இப்போ எனக்குப் புரிஞ்சிருச்சி நீயும் புரிஞ்சிக்கோ

இ) இப்போ எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

ஈ)   இப்பொழுது  எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

11. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் 

அ) இலக்கியம்                                   

ஆ) கணிதம்                                          

இ) புவியியல்                              

ஈ) வேளாண்மை

12. பொருத்தித் தேர்க 

அ) அரங்கின் நீளம்                                  -  1.  நான்கு கோல் 

ஆ) அரங்கின் அகலம்                            -  2.  ஒரு கோல் 

இ) அரங்கின் உயரம்                                 -  3.  ஏழு கோல் 

ஈ) உத்திரப்பலகை இடைவெளி      -  4.  எட்டுக்கோல்

அ) 3 2 1 4                                                        

ஆ) 2 1 4 3                                       

இ) 2 1 3 4                                                

ஈ) 4 3 2 1 

13. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

அ) வசம்பு                         

ஆ) மணத்தக்காளியிலைச்சாறு             

இ) கடுக்காய்                              

ஈ) மாவிலைக்கரி

14. பொருத்துக 

அ) ஆமந்திரிகை                              -   1. பட்டத்து யானை 

ஆ) அரசு உவா                                      -   2. மூ ங்கில்  

இ) கழஞ்சு                                                -   3. இடக்கை வாத்தியம் 

ஈ) கழை                                                      -   4. எடை அளவு

அ) 3 1 4 2                                                

ஆ) 4 2 1 3                                                

இ ) 1 2 3 4                                           

ஈ) 4 3 2 1

பகுதி - 2

 

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                                                       3 x 2 = 6

15.அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

16. வசனம், கவிதை வேறுபாடு தருக

17. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு  கந்தவேளே' – தொடருக்குப் பதவுரை எழுதுக.

18. யாழின் வகைகள் யாவை ? 

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                                                                   2 x 2 = 4

19. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

20. கையெழுத்து எவ்வாறு அமைய  வேண்டுமென்று பழைய வெண்பா கூறுகிறது ?

21. உ.வே.சாமிநாதர் ஆற்றிய பணிகள் யாவை ? 

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                                                                    7 x 2  = 14

22.  தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக

அ) ஐப்பசி அடைமழையில் ஊருனி  நிறைந்தது. 

ஆ) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

23. சொல்லைப்  பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

அ) பலகை                                          ஆ) தாமரை 

24. தமிழாக்கம் தருக

அ) Take off                                        ஆ) Allegation

25. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக

அ) கண்டான்                                  ஆ) அமர்ந்தான்

26. ஏதேனும் ஒன்றனுக்குப்  புணர்ச்சி விதி தருக

அ) பூம்பாவாய்                                                    ஆ) தலைக்கோல்

27. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக

அ) விண்மீன், ஒளிர், எரி, விழு

ஆ) திரை, காண், கைதட்டல், மக்கள்

28. கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத்  தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

அ) நேற்று முதல் ___________( அணை )  நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஆ) நம்முடைய ___________ ( தேவை )  அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

29. பேச்சு வழக்கை  எழுத்து வழக்காக  மாற்றுக

அ) வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தைய அப்பா எங்க இஸ்துகினு  போனாரு.

ஆ) நிலத்தக்  கெளறணும்டா  அப்பதான் வகுறு  நிறையும்.

30. வெண்பாவின் ஈற்றுச்சீர் எவ்வாறு முடிய வேண்டும்?

 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                               2 x 4 = 8

31. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்க.

32. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

33. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு

செய்கிறார்? 

34. “ எழுத்திருந்தால் அசைகள் வரும் ; இரண்டுசீரின் 

                  இடைவெளியில் தளைகள் வரும்”  - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக. 

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                             2 x 4 = 8

 35. நீங்கள் ஆசிரியர் ஆனால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர் ?

36. அ)  ‘வேத்தான் ‘ என்று அழைக்கப்பட்டவர் யார் ? இதன் பொருள் என்ன ?

        ஆ)’சட்டாம் பிள்ளை’ என்பவர் யார் ? அவரின் பணி என்ன ? 

37. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

38. பண்டைய காலக் கல்வியின்  தொடக்க நிலைக் குறித்து எழுதுக

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                                                                    3 x 4 = 12

39.  “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

         திண்ணியர் ஆகப் பெறின்”  -   இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக 

அல்லது 

தொழில் உவமையணி விளக்குக. 

40. கீழ்க்காணும் பழமொழியை வாழ்வில் நிகழ்வில் அமைத்து எழுதுக. 

யானைக்கும் அடி சறுக்கும்

41. கீழ்க்காணும் பாடலைப்  படித்து அதன் மையக் கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.

                                   பிறப்பினால் எவர்க்கும்  - உலகில் 

                                                பெருமை வாராதப்பா! 

                                  சிறப்பு வேண்டுமெனில் -  நல்ல 

                                               செய்கை வேண்டுமப்பா! 

                                  நன்மை செய்பவரே  -  உலகம் 

                                               நாடும் மேற்குலத்தார்! 

                                 தின்மை  செய்பவரே -  அண்டித்  

                                              தீண்ட ஒண்ணாதார்  

                                                                                         - கவிமணி தேசிய விநாயகம்

42. தமிழாக்கம் தருக

Popular as the ‘Cultural capital’ of India, Tamilnadu is extremely well- known for its marvellous temples and other architectural  gems. The state rose to prominence  primarily  because of its well known and outstanding Thanjavur paintings that flourished  at the time of Chola  dynasty in ancient Thanjavur. In this traditional art  form, the paintings showcase the embellished   form of the sacred  deities  of the region.  The  deities  in the paintings  are festooned  with glass pieces, pearls,  semi precious stones  and gold and other different colours. In the modern times, paintings look  up  to human figures, animals,  floral motifs and birds as muses.

 

43. கருத்துப்  படத்தைப்  புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக. 


பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக.                                                                                                                                                          3 x 6 = 18

44.  அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழிநின்று

விளக்குக.

அல்லது

ஆ)  கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

45. அ) சுவடிகள் எவ்வாறெல்லாம் தயாரிக்கப்பட்டன என்பது பற்றியும் எழுத்தாணிகள் பற்றியும் விளக்குக. 

அல்லது

    ) பண்டைய காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே  நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.

46.  அ) நகரமயமாதலினால் தலைக்குளம் அடைந்த மாற்றங்களை விவரி

அல்லது

         ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்கு. 

பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                                   4 + 2 = 6

47 அ) “விண்வேறு….. எனத் தொடங்கும் 'இதில் வெற்றி பெற' என்ற  பாடலை எழுதுக.

      ஆ) “தொடர்பு “  -  என முடியும் திருக்குறள்

















குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095



REDUCED SYLLABUS 

இரண்டாம் திருப்புதல் தேர்வு -மார்ச் 2022

மாதிரி வினாத்தாள் - 2

இயல் : 4, 5, 6

வகுப்பு - 12

பொதுத்தமிழ்

நேரம் : 3 மணி                                                                                                                                                      மதிப்பெண் : 90


விடைகள்

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                                      14 x 1 = 14

1.ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

      அச்சாணி அன்னார் உடைத்து

2. ஈ ) அரிசுவடி

3.   ஆ) 4 3 1 2       

4. இ) முரண் பண்பு      

5. ஈ) 4 3 2 1 

6. அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர் 

7.   ஈ) 1 சரி 2  சரி 

8. ஈ) மாசி     -   ஆரவாரவிழா

9.  ஈ)  பகுதி ,இடைநிலை , சாரியை , விகுதி

10. ஈ)   இப்பொழுது  எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

11. ஆ) கணிதம்

12.  ஈ) 4 3 2 1                 

13.  இ) கடுக்காய்                 

14. அ) 3 1 4 2

பகுதி - 2 

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                                                          3 x 2 = 6

15. உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை.

16.  வசனம்: 

சொற்களைச் சேர்க்கும் போது எதுகை, போன்றவை அமையாமல் அடியளவை அறிந்திடாமல் அமைக்கின்ற இலக்கிய வடிவம் தான் வசனம் ஆகும்.

கவிதை : 

சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி எதுகை மோனை போன்ற தொடை நயங்களைச் சேர்த்து, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி போன்ற அடியளவை அறிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதையாகும்.

17. அறச்செயல்கள் செய்கின்றவர்கள் நிறைந்திருக்கும் சென்னைப் பகுதியில் கந்தகோட்டத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

18. யாழின் வகைகள் : 

  • 21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ்

  • 7  நரம்புகளைக் கொண்டது மகரயாழ்

  • 16  நரம்புகளைக் கொண்டது சகோடயாழ் 

  • 21 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்

19. மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள்  : 

  • நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள், 

  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள், 

  • ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும்.

20. எழுதப்படும் எழுத்துகளில் இடப்படும் கொம்பு , சுழி போன்றவை கொஞ்சமும் கோணுதல் கூடாது. வரிசையாக எழுதும் எழுத்துகள் ஒருபோதும் சாயக்கூடாது. துணைக்கால் சாயாமல் அம்புபோல அசையாமல் எழுதப்பட வேண்டுமென பழைய வெண்பா கூறுகிறது.

21. உ. வே. சாமிநாதர்  இணையற்றய ஆசிரியப்பணியுடன் புலமை மிகுந்தவராக இருந்தார். சிறந்த எழுத்தாளராகவும்; பதிப்பாசிரியராகவும்; பழந்தமிழ் இலக்கியங்களை அச்சில் பதிப்பிக்கும் பணியைச் செய்தவராகவும் இருந்தார். மேலும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                                                                          7 x 2  = 14

22.  தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக

அ) ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.

ஆ) நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

23. சொல்லைப்  பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

அ) பலகை     - பலகை ; பல + கை                                     

  1. பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.

  2. பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின. 

ஆ) தாமரை      

தாமரை - பூ

தாமரை - தா + மரை ( தாவுகின்ற மான் )  

  1. தாமரை மலர் நமது நாட்டின் தேசிய மலர்.

  2. புலி வேட்டையாடும் போது வேகமாகத் தா( வும் ) மரையின் ( தாவுகின்ற மானின் ) ஓட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  

24. தமிழாக்கம் தருக

அ) Take off                -   வானூர்தி கிளம்புதல்                                     

 ஆ) Allegation          -   சாட்டுரை

25. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக

அ) கண்டான்      -   காண் ( கண் )  + ட் + ஆன் 

                    காண்     -   பகுதி, ‘காண்’ , ‘கண்’ எனக் குறுகியது விகாரம் 

                                 ட்    -   இறந்தகால இடைநிலை 

                        ஆன்   -   ஆண்பால் வினைமுற்று விகுதி

 ஆ) அமர்ந்தான் -  அமர் + த் ( ந் ) + த் + ஆன் 

                           அமர்   -  பகுதி  

                                    த்    -  சந்தி , ‘த் ‘,’ந்’ ஆனது விகாரம் 

                                    த்    -  இறந்தகால இடைநிலை 

                           ஆன்    -  ஆண்பால் வினைமுற்று விகுதி

26. ஏதேனும் ஒன்றனுக்குப்  புணர்ச்சி விதி தருக

அ) பூம்பாவாய்       -   பூ + பாவாய் 

விதி  1  : ‘பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்’      < பூம்பாவாய் 

ஆ) தலைக்கோல் -  தலை + கோல் 

விதி  1  : ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’     < தலைக்கோல் 

27. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக

அ) விண்மீன், ஒளிர், எரி, விழு    -   விண்மீன் இரவில் ஒளிர்ந்தது ஒளிர்வுடன் எரிகல் விழுந்தது.

 ஆ) திரை, காண், கைதட்டல், மக்கள்   - நடிகர் திலகத்தைத்  திரையில் கண்டனர் கண்டு கைதட்டினர் மக்கள்.

28. கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத்  தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

அ) நேற்று முதல் அணையின்  நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஆ) நம்முடைய தேவையின் அளவு குறைந்ததால் மகிழ்ச்சி பெருகும்.

29. பேச்சு வழக்கை  எழுத்து வழக்காக  மாற்றுக

அ) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா இழுத்துக் கொண்டு போனார் .

ஆ) நிலத்தைக் கிளர வேண்டும். அப்போதுதான் வயிறு நிரம்பும். 

30. வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள் , மலர், காசு ,பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடிய வேண்டும் . 

        நாள், மலர் - ஓரசைச் சீர்கள் 

        காசு , பிறப்பு - குற்றியலுகர ஓசையோடு முடியும் ஓரசைச் சீர்கள்.

 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                                    2 x 4 = 8

31. சூதின் தீமை:

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்புகளையும் கெடுத்துவிடும். 

கள்ளுண்ணலின் தீமை:

உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சினை உண்பவருக்கு ஒப்பானவரே ஆவர். 

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முடியாது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றது. 

32. நாட்டிய அரங்கின் அமைப்பு:

  • திறம்பட கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளில் இருந்து மாறுபடாத நல்ல நிலத்தை ஆடல் அரங்கிற்காகத்  தேர்ந்தெடுத்தனர். 

  • பொதிகை மலை போன்ற மலைகளில் நீண்டு வளர்ந்த மூங்கில்களில்  ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவுள்ள கண்களைக் கொண்ட மூங்கிலைக்  கொண்டு வந்தனர். 

  • தம் கை பெருவிரலில் இருபத்தி நான்கு அளவினைக்  கொண்டதாக மூங்கிலை வெட்டினார். அரங்கத்தின் நீளம்  எட்டு கோல்  அகலம் ஏழுகோல்  உயரம் ஒரு கோல் உத்திர பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடைவெளி 4 கோல் அளவு. 

  • அரங்கத்தின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இரு வாயில்கள்.

  •  தூண்களின் நிழலானது அவையிலும் நாடக அரங்கில் விழாதபடி நல்ல அழகான நிலை விளக்குகளை  அமைத்திருந்தனர். 

  • ஒரு முகத்திரை,  பொரு  முகத்திரை,  கரந்துவரல் திரை என மூன்று வகையான திரைகள் அமைத்தனர்.  

  • ஓவிய வேலைப்பாடு மிக்கதாக  மேல் விதானம் அமைந்திருந்தது. 

  • சிறந்து முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். 

  • இவ்வாறு எங்கிருந்து பார்த்தாலும் நாட்டிய நிகழ்ச்சி காணத்தக்க வகையில் கட்டப்பட  வேண்டும்,  என்பதும் ஆட்ட அரங்கு,  ஆட்டத்தைக்  கண்டு சுவைப்போர்  அமரும் அவையை  விட உயரமாக இருக்கவேண்டும் என்பதும் தெளிவுபடக்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

33. பங்குனி உத்திரத் திருவிழா : 

  • இளம் பெண்கள் அனைவரும் இணைந்து ஆரவாரத்தோடு கொண்டாடி மகிழும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. 

  • மயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூரில் கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குத் திசை தோறும் பூசையிடும் பங்குனி உத்திரத் திருவிழா ஆரவாரத்தோடு நடைபெற்றது என திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

34. இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம் :  

         இக்கவிதை வரியானது உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இதில் வெற்றி பெற’ என்னும் கவிதையில் உள்ளது. 

பொருள் : 

          எழுத்துகள் சேர்ந்தால் அசையாகும். இரண்டு சீர்களின் இடைவெளியில் அந்தப்பாவினுடைய தளைகள் வரும்.

விளக்கம் : 

           கவிதை ஒன்றை எழுத வேண்டுமென்றால் கவிதைக்குரிய இலக்கணங்கள் தெரியவேண்டும்.  எழுத்துகள்  ஒன்று சேர்ந்து அசை பிரிப்பதை  அறிந்திருக்க வேண்டும்.  அந்த அசைகள் சரியான இலக்கண முறைப்படி இருக்கின்றனவா ?  என்று அறிதல் வேண்டும்.  ஏனென்றால் அசைகளுக்கு இடையில்தான் அந்தந்தப்பாக்களுக்குரிய தளைகள் பிறக்கும்.  அசைகள் இலக்கண முறைப்படி இல்லையென்றால் பாக்களுக்குரிய தளைகள் தவறாகிவிடும்.

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                                   2 x 4 = 8

35. நான் ஆசிரியரானால்...                                 

  •  மாணாக்கர்களில் எல்லோரும் ஒரே கற்றல் அடைவு பெறும் மாணவர்கள் என்ற கருத்தியல் ரீதியான என் எண்ணத்தை முதலில் மாற்றுவேன்.

  •  மாணாக்கர்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு திறன் மனப்பாங்கு பண்புகள் இருக்கப்போவதில்லை எனவே மாணவர்களை ஒப்பிட்டுக் கூற மாட்டேன். 

  •  மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களின் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அறிந்து அவனை தேற்றிவிடுவேன்.

  •  மாணாக்கர்கள் நல்ல நிலையை அடைய சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். 

  •  மாணாக்கர்களிடம் தகாத வார்த்தைகள் மற்றும் தேவையற்ற வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். 

  • என் வகுப்பு மாணவர்களை மாணவர்களுக்குரிய கண்ணியத்துடன் நடத்துவேன். 

  • மாணாக்கர்களின் குடும்பச் சூழலை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் ஆசானாய் இருப்பேன். 

  • மாணாக்கர்களுக்கு முரண்பாடாகவோ,  எதிர்த்து நின்று செயல்படவோ அவர்களை அடித்து துன்புறுத்தவோ  அவர்கள் மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபடவோ  ஒருபோதும் விரும்ப மாட்டேன்.

36.   அ) வேத்தான் : 

                        பள்ளிக்கூடத்திற்குக்  காலை 5 மணிக்கு வருகின்ற மாணவரே வேத்தான்  என்று அழைக்கப்பட்டார்.  வேத்தான்  என்றால் மற்றவர்களைவிட வேறான தனிப்பெருமை உடையவன் என்று பொருள்.

ஆ)  சட்டாம்பிள்ளை : 

                        சட்டாம்பிள்ளை என்பவர் வகுப்புத்  தலைவன் ஆவார். 

உபாத்தியார் நெடுங்கணக்கைச்  சொல்லிக்கொடுக்க மாணாக்கன் அதை பின்பற்றி சொல்வான்.  இவ்வாறு சொல்லும் முறையை ‘முறை வைப்பது’ என்பர். சில நேரங்களில் உபாத்தியாருக்குப்  பதிலாகச்  சட்டாம்பிள்ளை முறை வைப்பதை மேற்கொள்வார். 

37.  மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் : 

  • ஆசிரியர் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப்  பிடித்துத்  தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதிக் காட்டுவார்.  

  • மணலில் எழுத்தின் வரிவடிவை  எழுதுவார்.  

  • மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகத்  தெரிந்த பின்புதான் வரிவடிவை  ஓலையில் வரைந்து காட்டுவார்.  

  • ஓலையை இடக் கையில் பிடித்து வலக் கையால் எழுத்தாணி கொண்டு எழுத கற்றுக் கொடுப்பார் .  

  • எழுத்தாணி பிடித்து எழுதும் போது ஓலையை நகர்த்துவார்.  

  • எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே  வரையும்.  

  • ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றொரு எழுத்து படாமலும் ஒருவரியின் மீது மற்றொருவரி  இணையாமல்  போதிய இடம்விட்டு எழுதுவார்கள்.  

  • கல்வெட்டுகளில் கல் தச்சர்கள் சிற்றுளி கொண்டு எழுத்துக்களைப்  பொறித்தனர்.  

  • களிமண் பலகையில் எழுத்தாணி கொண்டுஎழுதினர்.  

  • எழுத்துக்களின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. 

  • காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப்  பயன்படுத்திக்  காகிதங்களில் எழுதும் முறையைக்  கற்றுக் கொண்டனர்.  

  • காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.

38.  பண்டைய காலக் கல்வியின்  தொடக்க நிலை : 

பண்டைய காலத்துக்  கல்வியின் தொடக்கமானது வித்தியாரம்பம் (கல்வித் தொடக்கம் ) என்று அழைக்கப்பட்டது. முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் ( கல்விப் பயிற்சி )  செய்யும் போது தாய் தந்தையர்  பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக்  கொடுத்து வந்தார்கள்.  பிள்ளைகளைப்  பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேட நாளாகக்  கொண்டாடப்

பெறும். ஏட்டின் மீது மஞ்சள் பூசிப்  பூசித்துப்   பையனிடம் கொடுத்து வாசிக்க செய்வார்கள்.  உபாத்தியார் நெடுங்கணக்கைச்  சொல்லிக்கொடுக்க,  மாணாக்கன் அதனைப்  பின்பற்றிச்  சொல்வான்.

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                                                               3 x 4 = 12

39.  “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

         திண்ணியர் ஆகப் பெறின்”  -   இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக 

 இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி  சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும் 

அணி இலக்கணம் : 

            பாடலில் முன்னர் வந்த சொல்லே  மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே மீண்டும் மீண்டும் தருமாயின் அது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும். 

சான்று விளக்கம் : 

            எண்ணியவர் மன உறுதி உடையவராக இருந்தால்,  அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார். 

அணிப் பொருத்தம் :  

                 இக்குறட்பாவில் ‘எண்ணிய’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘நினைப்பது’ என்ற ஒரே பொருளைத் தருவதால் இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

அல்லது 

தொழில் உவமையணி விளக்குக. 

அணியிலக்கணம் :  

            செய்யுளில் உவமை ஒரு  வாக்கியமாகவும் உவமேயம் மற்றொரு வாக்கியமாகும் வந்து போல போன்ற எனும் உவம உருபு வெளிப்படையாக வந்து,  செய்யும் தொழிலோடு உவமை அமைவது தொழில் உவமை அணி ஆகும். 

உவமை :  அகலாது அணுகாது தீக்காய்வார்

உவமேயம் :  வேந்தரை சேர்ந்து ஒழுகி வாழ்பவர் 

உவம உருபு :  போல்க 

அணிப் பொருத்தம் :  

         குளிருக்காத்  தீக்காய்வார் தீயை விட்டு அகன்று செல்லாமலும் நெருங்கி விடாமலும் இருப்பதுபோல் அரசர்களைச்  சார்ந்து இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.. என்பதில் குளிருக்காகத் தீக்காய்வார் என்ற தொழிலை உவமையாகப்  பயன்படுத்தி உள்ளதால் இது தொழில் உவமை அணி எனப்படும். 

40. கீழ்க்காணும் பழமொழியை வாழ்வில் நிகழ்வில் அமைத்து எழுதுக. 

யானைக்கும் அடி சறுக்கும்

பழமொழி விளக்கம்:  

           மிகப் பெரிய பலசாலி எனக்  கருதப்படுபவர்கள்  கூட சில சந்தர்ப்பங்களில் நிலைதடுமாறி தன் சக்திக்கு உட்பட்டதில்  தோல்வியைச்  சந்திப்பர் .

வாழ்வியல் நிகழ்வு : 

            எங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் முகுந்தன் மிக சிறந்த ஓட்டப்பந்தய வீரன் ஆவான்.  எம் பள்ளி சார்பாக நடைபெற்ற ஓட்டப் பந்தயங்களில் திறமையாக ஓடியதால் மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றதால் மாநில அளவிலானநூறு  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப்  பெற்றார்.  

               சிறந்த பயிற்சியை மேற்கொண்ட முருகன்நூறு  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனை படைத்து முதலிடம் பெற்று பள்ளிக்குப்  பெருமை சேர்த்தான்.  ஊர் திருவிழாவில் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முகுந்தனைப் பார்த்து எல்லோரும் கண்டிப்பாக முதல் பரிசினை முகுந்தன் பெற்றுச்  செல்வான் என பேசிக் கொண்டிருந்தனர்.  போட்டி ஆரம்பமாகும் நேரம் நெருங்கியது.  

                மைதானத்தில் போட்டியாளர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். நூறு  மீட்டர் ஓட்டப் பந்தயப்  போட்டி தொடங்கியது.  எல்லோரும் முகுந்தனை எதிர்பார்த்த நிலையில் சுரேஷ் எல்லைக் கோட்டைத் முதலில் தொட்டு முதல் பரிசைப்  பெற்றான்.  முகுந்தன் இரண்டாம் நிலைக்குத்  தள்ளப்பட்டான் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழி உண்மையானது.

41. மையக் கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக 

நல்லதை செய்வோம்

முன்னுரை: 

                   தமிழின் மீது அளவற்ற அன்பு கொண்ட கவிமணி “குழந்தைகள் கவிஞர்”  என்று அழைக்கப்படுகின்றார்.  ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ என்ற பாடல் மூலம் குழந்தைகளால் மிகவும் நேசிக்கப்பட்டவர். இவர் எழுதியுள்ள இப்பாடலின் நயங்களைக்  காண்போம்.

திரண்ட கருத்து:  

                பிறப்பை வைத்து யாருக்கும் இந்த உலகில் பெருமை வருவதில்லை.  உலகில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்றால் நல்ல செயல்களைச் செய்யவேண்டும்.  உலகில் மேல் குலத்தோர் என்பவர் தன் வாழ்வில் நன்மை செய்பவர்களே !  தீமை செய்பவர்கள்  இந்த உலகில் தீண்டத்தகாதவர்கள்.  

மையக்கருத்து :  

               நன்மை செய்தால் அவன் மேன்மை அடைவான் ;  தீமை செய்தால் அவன் ஒதுக்கப்படுவான் . 

சொல் நயம் :  

              சிறந்த சொற்களைக் கொண்டு கவிதையை நயம்பட பாடியுள்ளார் கவிஞர்.  

இப்பாடலில் அடைசொல்லையும் அகராதி சொல்லையும் கவிஞர் பயன்படுத்தியுள்ளார். 

சான்றாக 

அடைச்சொல்  :  அண்டித்தீண்ட 

 அகராதிச் சொல்  :  ஒண்ணாதார்   -  ஒவ்வாதார்   

பொருள்நயம் 

             இவ்வுலகில் மேற்குலத்தோர் ,  தீண்டத்தகாதவர் என்பது பிறப்பினால் வருவது அல்ல.  அவரவர்களின் செயல்களால்  வருகின்றது என்ற பொருளை வலியுறுத்த சிறந்த சொற்களைக் கொண்டு கவிஞர் இக்கவிதையை இயற்றியுள்ளார். 

தொடை நயம் :  

             பாடலில் மோனை,  எதுகை,  இயைபு , முரண் , அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது பொருள் நயம்:  

            சீர்களிலோ , அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். 

சான்று  : 

                     பிறப்பினால்             -       பெருமை 

                    சிறப்பு    -   செய்கை 

                   நன்மை  -  நாடும் 

                  தின்மை  -  தீண்ட 

எதுகை நயம் :  

            பாடலின் அடிதோறும் அல்லது சீர் தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.  

இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது.  

சான்று :  

                     பிப்பினால்   

                    சிப்பு 

           

                    நன்மை 

                    தின்மை  

இயைபு நயம்:  

              ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் அல்லது ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துகள் ஒன்றி வந்தாலும் அது இயைபு எனப்படும். 

இப்பாடலில் அடி இயைபு  பயின்று வந்துள்ளது.  

சான்று:  

                 வாராதப்பா                        மேற்குலத்தார்   

                 வேண்டுமப்பா                ஒண்ணாதார்  

முரண் நயம்:  

          செய்யுளில் சொல், அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். 

 இப்பாடலில் இடம்பெற்றுள்ள முரண்தொடை 

                நன்மை X  தின்மை 

சந்த நயம்: 

     “ சந்தம் தமிழுக்குச் சொந்தம்” இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன்  இசைத்துப்  பாடினால் பாடுவோரும் கேட்போரும் மிகுந்த கவி இன்பத்தைத்  தரும் விதத்தில் சிறப்பான  எதுகை, மோனை,  இயைபு,  முரண் அமைந்து கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். 

 இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்தது. 

 அணிநயம் : 

            இப்பாடலில் உள்ளதை உள்ளபடியே கவிஞர் கூறுவதால் இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. 

 முடிவுரை:  

        “காலம் கவிஞனைக்  கொன்றது; ஆனால்  அவன் கவிதையோ காலத்தை வென்றது” என்பதற்கு இணங்க மிகச் சிறந்த கவி நயங்களால்  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இப்பாடலில் நயங்களை எல்லாம் அமைத்துத்  தமிழன்னைக்குப்  பெருமை சேர்த்துள்ளார். 


மாணாக்கரே ! கேள்வியை நன்கு கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானதாகும்..

42. தமிழாக்கம் தருக

                   இந்தியாவின் ‘பண்பாட்டுத்  தலைநகரம்’  என்று அழைக்கப்படும் தமிழ்நாடு,  அதனுடைய வியப்புக்குரிய கோவில்களிலும்,  கலைநயமிக்க நவமணிகளாலும்  புகழ் பெற்றது.  அந்த மாநிலம் இத்தகைய முதன்மை பெற்று திகழ காரணம் பண்டைய சோழ மன்னர் ஆட்சியில் தஞ்சாவூரில் தோன்றி வளர்ந்த ஓவியக்கலை ஆகும்.  அப்பகுதிக்கு உட்பட்ட தெய்வ உருவங்களை அழகுமிக்க ஓவியங்களாகத் தருவதே பழமைமிக்க கலை வடிவம் ஆகும்.  அந்த ஓவியங்களில் உள்ள தெய்வ உருவங்களில் உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகளாலும்  முத்துக்களாலும்  செயற்கைக்  கற்களாலும் தங்கத்தாலும் கண்கவர் வண்ணங்களில் அழகுபடுத்தப்பட்டன.  நவீனகால தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்களை,  விலங்குகளை,  பூக்களுடைய உருவங்களை ,  பறவைகளை வெளிப்படுத்துவதாகக்  கலை வடிவம் பெற்றுள்ளன.

43. கருத்துப்  படத்தைப்  புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக. 

             சங்க இலக்கியம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் இரண்டு பிரிவுகளாக உள்ளது.. எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை,  குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை அகும் பற்றி பேசுகின்றது.  எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு,  பதிற்றுப்பத்து ,  புறம் பற்றிப்  பேசுகின்றது.  பரிபாடல் அகமும் புறமும் பற்றி கூறுகிறது. 

          பத்துப்பாட்டு நூல்களில் குறிஞ்சிப்பாட்டு,  முல்லைப்பாட்டு,   நெடுநல்வாடை ,  பட்டினப்பாலை ஆகிய நூல்கள் அகம் பற்றி பேசுகின்றது.  பத்துப்பாட்டு நூல்களில் மதுரைக்காஞ்சி,  திருமுருகாற்றுப்படை,  பொருநராற்றுப்படை,  பெரும்பாணாற்றுப்படை,  சிறுபாணாற்றுப்படை,  கூத்தராற்றுப்படை ஆகியவை புறம் பற்றிப்  பேசுகிறது.

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக.                                                                                                                                                          3 x 6 = 18

44.  அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் 

முன்னுரை:

மனித வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு, இதனை நன்குணர்ந்த வள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவின் சிறப்பினை விரிவாக எடுத்துரைக்கிறார். 

அறிவின் சிறப்பு:

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி மட்டுமன்றி பகைவரால் அழிக்க முடியாத மனதினுள் அமைந்த பாதுகாப்பு அரணும் ஆகும்.

அறிவின் இலக்கணம்:

வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் அறிவு பலவகையாகக் காணப்படுகிறது என்பதை, 

மனத்தினை அது செல்லுகின்ற வழியிலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும். 

எச்செய்தியை எவர் ஒருவர் கூறக் கேட்டாலும் அச்செய்தியின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவது அறிவாகும். 

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வது அறிவாகும் என்னும் குறள்களின் மூலம் வள்ளுவர் விளக்குகிறார். 

அறிவின் மேன்மை:

நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வாழ்வது மட்டும் அறிவாகாது என்பதை மக்களுக்கு உணர்த்திட

"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

ஆதிர வருவதோhர் நோய்"

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை என்னும் குறள் வழியாக விளக்குகிறார் வள்ளுவர்.

முடிவுரை:

இவ்வாறு வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு என்பதை வள்ளுவரின் குறள்வழியாக அறிந்தோம்.

அல்லது 

ஆ)  கவிதை எழுத அறிய வேண்டுபவை: 

கவிதை:

  • கவிதை என்பது சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து இயற்ற வேண்டும்

  • எழுதப் போகும் பாவகைக்கு ஏற்ற அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.

  • சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள்:

  • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.

  • அசைகளைக் கொண்டு சீர்களை அமைத்தல் வேண்டும்.

  • சீர்களை முறையாக அமைத்தால் இரண்டு சீர்களுக்கு இடையே அந்தந்தப் பாக்களுக்குரிய தளைகள் தோன்றும். 

  • அந்தந்தப் பாவிற்குரிய முறைகளின்படித் தளைகளை அமைத்தால் கவிதையில் தவறுகள் தோன்றாது.

  • தளைகளை முறைப்படி கோர்த்தோம் என்றால் அடிகள் உருவாகும் அடிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் உருவாகும். 

  • அதிக தொடைநயங்களோடு ஒரு கவிதை இருந்தால் அது சிறந்த கவிதை என்றழைக்கப்படும்.

சிறந்த கவிதை:

  • கவிதைகளுக்குரிய உறுப்புகளை வைத்து கவிதை எழுதினால் கவிதையின் உறுப்புகளாகிய சீர்களில் மாச்சீரையும், விளச்சீரையும் பயன்படுத்தினால் எழுதப்படும் பாடல்களில் தேமா, புளிமா காய்த்துவிடும். 

  • சீர்கள் தவறாக அமைக்கப்பட்டால் பாடல்கள் தவறாக மாறிவிடும்.

  • செடியில் பூத்த பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போலச் சிறப்புடன் எழுதிய பாடல்வரிகளைத் தேடிக் கற்றோர் வருவர்.

           அப்பாடலைப் பாடிய புலவனுக்கும் புகழ் உண்டாகும்.

45. அ) சுவடிகள்  தயாரிக்கப்பட்ட விதம் : 

  •  இளம் பிள்ளைக்கு உபாத்தியார்  ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித்  துளையிட்டு கயிறு கோர்த்து தருவார்.  

  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. 

  • மற்ற பிள்ளைகள் தாங்களேசுவடிகளைச்  செய்து கொள்வார்கள்.

  • பனையேடு ,  சீதாள பத்திரம்  முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.  

  • மேலே சட்டமாகப்  பனை மட்டையின்  காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள்.  

  • மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.  செப்புத் தகட்டாலும்  சட்டம் செய்து கோரப்பார்கள்.  

  • அந்தச்  சட்டங்களின் மேல் வர்ண மையினால் பலவகையான சித்திரங்களை எழுதுவதும் உண்டு.  

  • இவ்விதங்களில்  சுவடிகள் தயாரிக்கப்பட்டன.

எழுத்தாணிகள்:   

  • ஓலையில் எழுதுவதற்குரிய   எழுத்தாணியை ஊசி என்றும் கூறுவர்.  

  • மடக்கெழுத்தாணி , வாரெழுத்தாணி , குண்டு எழுத்தாணி எனப்  பலவகை எழுத்தாணி இருந்துள்ளது.  

  • ஒரு பக்கம் வாருவதற்குக்  கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் உடைய எழுத்தாணிகள் இருந்துள்ளன.  

  • ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கு எழுத்தாணியும் இருந்துள்ளன.  

  • ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக 20 முதல்  30  வரி வரையிலும் எழுதுவதற்குரிய  மெல்லிய எழுத்தாணியும் இருந்துள்ளது.

அல்லது 

 ஆ) பண்டைய காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் : 

  • பண்டைக்காலத்தில் மன்றமென்றும் அம்பலமென்றும் அழைக்கப்படும் மரத்தடியில் உள்ள திண்ணையிலே கற்றல் கற்பித்தல் பணி இயற்கையோடு நடந்தது. 

  • கல்விப்பயிற்சிக்காக வரும் மாணாக்கர்களிடம் ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்து மாணாக்கர்களிடம் வாசிக்கச் சொல்வர் இதனை அகூராப்பியாசம் (எழுத்து அறிவித்தல்) என்பர். 

  • ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.

  • ஆசிரியர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்லும் 'முறை வைப்பு' முறையில் கற்பித்தல் நடைபெற்றது. 

  • 'மையாடல் விழா' மூலம் மாணாக்கருக்கு எழுத்துகளை எழுதும் முறையை ஆசிரியர் கற்றுக் கொடுப்பார். 

  • ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன்மேல் மாணாக்கர் எழுதுவர். இவ்வாறு எழுத்துகளைக் கற்பித்தனர். மாணாக்கரும் எழுத்துகளை வரிசையாகவும், நன்றாகவும் எழுதக் கற்றுக் கொண்டனர். 

  • பழைய காலத்தில் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் வரிகோணாமல் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

  • புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன மூலமாகவும், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்கள் மூலமாகவும் மனனம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது. 

  • எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் வரும் முறையும் இருந்தது. 

  • சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தனர்

  • மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

  • ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள்.

  • கற்றல் கற்பித்தலில் முக்கியமாக விளங்கிய வாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது.

  • அரசவையில் கூட வாதுபுரியும்  அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன.

  • பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

  • "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

            கடனாக் கொளினே மடநனி இகக்கும்"   - (நன்னூல் - 41)

  • ஞாபக சக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள். 

இவ்வாறு மாணவனின் எல்லா திறமைகளையும் வளர்க்கும் விதமாகக் கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

46.  அ) நகரமயமாதலினால் தலைக்குளம் அடைந்த மாற்றங்கள் : 

முன்னுரை: 

            இந்தியாவின் வாழ்வாதாரமாக விளங்கும்  கிராமங்கள் இன்று நகரமயமாவதால் பெரும்  பாதிப்புகளை  அடைகின்றன. அழகான இயற்கை சூழலோடு விளங்கும் கிராமங்கள் தங்கள் அழகினை இழப்பதோடு தங்களது அடையாளங்களையும் இழந்து விடுகின்றன.  அவ்வாறு தனது வடிவழகை நகரமயமாவதன்  மூலம் இழந்த கிராமமே தலைக்குளம். 

 அடையாளத்தை இழந்த தலைக்குளம்: 

                பெரிய கண்மாய், புன்ன மூட்டு அடி, குளம், வற்றாத கிணறு, எங்குப்  பார்த்தாலும் பச்சைபசேல் என்ற வயல்வெளி இப்படி இயற்கையாய் இருந்த  தலைகுளம்  நகரமயமாவதன்  மூலம் தன் பொலிவைக்  கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மொத்தத்தில் இளம் வயதில் தான் கண்ட எந்த ஒரு இயற்கைச் சூழலும் இல்லாமல் கண்மாயை தேடும் நிலைக்கு வீட்டை விற்க வருபவர் தள்ளப்படுகிறார். ஆசைஆசையாய் நான்கு அடுக்கு வீடு, மழைத்தண்ணீர்  உள்ளே விழும் அழகிய வீடு என்று தான்  ஆசைஆசையாய் வாழ்ந்து வீடு மட்டுமல்ல  தான் ஆசைஆசையாய் விளையாடிய தலைக்குளம்  கிராமமும் நகரமயமாவதன் மூலம்   சிதிலமடைந்துள்ளதை  இச்சிறுகதை மூலம் அறியலாம்.

 நகரமயமாவதால் நளினம்  இழந்த  தலைக்குளம்:

            தலைக்குளத்தின் கதைகள்,கன்னியார் கோண ஏலா  பற்றிய கதைகள், ஞானியார் நீரோடை,  வீட்டில்  ஈட்டி மரத்தால் செய்த நிலைகள், ருசி மிகுந்த தண்ணீர், எப்போதும்  தண்ணீர் ஓடும் வாய்க்கால்,  எவ்வளவு  கற்பனையோடு வாழ்ந்தார் அந்த முதியவர். கிராமத்தை விட்டு நூறு  கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் இன்னும் தன் கிராமம் அதே மண் வாசனையுடன் இருக்கும் என்று  நம்பிய  அவர் அந்த நூறு  கிலோ மீட்டர்  பயணத்தையும் மேற்கொண்டு தன் கிராமத்தை அடைந்து தனது வீட்டைப்   பார்த்தவருக்கு  ஏற்பட்டதோ ஏமாற்றம். அதன்பின் தன் மனதில் அடுக்கடுக்காய் கற்பனையோடு தூரத்தில் பார்த்தவருக்கு நகரமயமாதலின் வெளிப்பாடாக எழுப்பப்பட்டிருந்த இரு மாடி கட்டிடம், புன்ன மூட்டு அடி, கன்னியார் கோண ஏலா, அரசகுளம் எல்லாம் இப்போது அழகான குடியிருப்புகளாக மாறி இருந்ததை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

 தாகம் தீர்க்காத நகரமயமாதல்

          தலைக்குளத்தில் ஒரு முங்கு முங்கினாலே  உடம்பெல்லாம் குளிர்ச்சியால் சிலிர்த்துப் போகும்.  நாடி நரம்புகள் தெறித்துவிடும் அந்த அளவிற்குக்  குளிர்ச்சியாக இருக்கும்.  கோடைக் காலத்தில்கூட வீட்டுக்  கிணற்றில் தண்ணீர் வற்றியது இல்லை இறைக்க இறைக்க பொங்கிவரும் கிணறு.  மகன்களோடு நூறு  கிலோ மீட்டர் தொலைவில்  தங்கியிருந்தவர் தினமும் குடிக்கும் மினரல் வாட்டரை நினைத்து வருந்துவார்.  எவ்வளவு  சுவையாக இருக்கும் தலைக்குளத்தில் உள்ள தண்ணீர் அதை நினைத்து மிகவும் வருத்தம் அடைவார்.  ஆனால், இன்று தலைக்குளம் நகரமயமாகியதால்  குளமும் இல்லை;  கிணற்றில்  நீரும் இல்லை.  தாகம் எடுக்க மூலையில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து ஒரு பாட்டில் பிஸ்லேரி வாட்டர் வாங்கிக் குடிக்கும்  அளவிற்கு நகரமயமாதல் தலைக்குலம் கிராமத்தை மாற்றியிருந்தது..

 முடிவுரை: 

         இயற்கை வளங்கள் மிகுந்து  இருந்த தலைக்குளம்  தன்னுடைய கிராமத்  தன்மையை இழந்து நகரமயமாதல் மூலம் தன்னுடைய  மொத்த அடையாளத்தையும் இழந்த நிற்கின்ற  ஒரு அவல நிலையை இந்தச்  சிறுகதை மிகச் சிறப்பாக எடுத்து கூறுகிறதது.

அல்லது 

ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக்  கட்டுரையாக்குக.

முன்னுரை:

     கண்ணுக்குக் காட்சியையும், சிந்தைக்குக் கருத்தினையும் தருவன நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனியைக் கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. பழந்தமிழ் மக்களின் கலை. அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன. அவ்வகையில் எங்கள் பகுதியில் தெருக்கூத்துக் கலைஞர் ஒருவர் இருப்பதாக அறிந்து, அவரைச் சந்தித்தேன். அச்சந்திப்பின் தொகுப்பே இக்கட்டுரையாக மலர்கிறது. 

பொருளுரை:

     நான் சந்தித்த தெருக்கூத்துக் கலைஞரின் பெயர் மயில்வாகனன். அவர் வாயிலாகத் தெருக்கூத்து, அது ஆடப்படும் முறை, அதனை மீட்டெடுக்கக் காரணமானவர் எனப் பல்வேறு தகவல்களை நான் அறிந்து கொண்டேன். அது குறித்த விவரிப்பைக் கீழே காண்போம். 

  நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர் அது நிகழ்த்தப்பட்;ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது. 

  தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. 'அருச்சுனன் தபசு' என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. 

  தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'கூத்துப்பட்டறை' ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முடிவுரை:

  மேற்கண்ட கருத்துகளை எங்கள் பகுதிவாழ் தெருக்கூத்துக் கலைஞர் திரு.மயில்வாகனன் அவர்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும், வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக நிகழ்கலைகள்  விளங்குவதை நான் உணர இச்சந்திப்பு காரணமாக அமைந்தது.

பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                                   4 + 2 = 6

47 . அ)  ‘ விண்வேறு ‘- எனத் தொடங்கும் ‘இதில் வெற்றி பெற’என்னும்  பாடல் 

                             விண்வேறு;  விண்வெளியில் இயங்கு கின்ற 

                                             வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு ;  

                             மண்வேறு;  மண்ணோடு கலந்தி  ருக்கும் 

                                            மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு; 

                            புண்வேறு;  வீரர்களின் விழுப்புண்  வேறு;  

                                            புகழ்வேறு; செல்வாக்கு  வேறு;  காணும் 

                            கண்வேறு;  கல்விகண்   வேறு;  கற்றார் 

                                            கவிநடையும்  உரைநடையும் வேறு  வேறு. 

    ஆ) “தொடர்பு “  -  என முடியும் திருக்குறள்

                 வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக

                 கேள்போல் பகைவர் தொடர்பு


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095



12th Standard   
SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER - 2  & ANSWER KEY 
PDF DOWNLODE 👇👇👇👇👇👇👇👇


12 ஆம் வகுப்பு
SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER 1 - ANSWER KEY 
PDF DOWNLODE                                            : CLICK HERE
SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER 2 - ANSWER KEY 
PDF DOWNLODE    : click here                            


10 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here

12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - மொழிப்பயிற்சி -
இலக்கணம் PDF DOWNLODE : Click Here




11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here

சீறாப்புராணம் 
BOOK BACK QUESTIONS : Click Here
சீறாப்புராணம் 
SLIP TEST QUESTIN & ANSWER : Click Here

12 ஆம் வகுப்பு

இயல் - 4

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

one word Questions & Answers PDF : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE





மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360

Image by Kieu Truong from Pixabay














 











 

 





 





  


 



 

Post a Comment

Previous Post Next Post