Loading ....

11th Standard - +1Tamil - Tamil -Study Material - REVISION EXAM question paper -April 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY

 


11th Standard - +1Tamil - Tamil -Study Material - REVISION EXAM -April 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY



தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில்11th standard- Revision exam -April 2022  இடம்பெற இருக்கின்ற தேர்விற்கான Model Question Paper with Answer key இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில் 11th standard- Revision exam -April 2022  இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.




 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில்11th standard- Second Revision exam -March 2022  நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.




 

  இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற திருப்புதல் தேர்வில் 11th standard- Revision exam -April 2022  நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 

REDUCED SYLLABUS 

திருப்புதல் தேர்வு -மார்ச் 2022

மாதிரி வினாத்தாள் -1

இயல் : 1 , 2, 3, 4 

வகுப்பு - 11

பொதுத்தமிழ்

நேரம் : 3 மணி                                                                                                                                                      மதிப்பெண் : 90


அறிவுரைகள் :

i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும்.  அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். 

ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 

குறிப்பு   :

  i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்,  சொந்த நடையிலும்   அமைதல் வேண்டும். 

 ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                                      14 x 1 = 14

1.”வான் பொய்த்தது” என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் 

அ) வானம் இடித்தது                                                                        

ஆ) மழை பெய்யவில்லை      

இ) மின்னல் வெட்டியது                                                                   

ஈ)வானம் என்பது பொய்யானது

2.வடகரை நாட்டில் மீனை பிடித்து உண்பதற்காக வந்த பறவை 

அ) நாரை                            

ஆ) ஏதிலிக்குருவி                     

இ) உள்ளான் பறவை                               

ஈ) கழுகு 

3.துன்பப்படுவர் —-----------------

அ) தீக்காயம் பட்டவர்       

ஆ) தீயினால் சுட்டவர்      

இ) பொருளைக் ஆகாதவர்      

ஈ) நாவைக் காவாதவர் 

 4.மனித இனத்தின் ஆதி அடையாளம் 

அ) மொழி                                  

ஆ) இலக்கியம்                     

இ) இலக்கணம்                                         

ஈ) நாடகம் 

5.பொருத்தித் தேர்க 

அ) அடி அகரம் ஐ ஆதல்                        - 1. செங்கதிர் 

ஆ) முன் நின்ற மெய் திரிதல்          - 2. பெருங்கொடை 

இ) ஆதி நீடல்                                                   - 3. பைங்கூழ் 

ஈ) இனமிகல்                                                   - 4. காரிருள்

அ) 3 1 4 2                                     

ஆ) 3 4 1 2                                              

இ) 3 1 2 4                                                     

ஈ) 3 4 2 1

6. ‘வெண்சங்கு’ -  என்பதன் இலக்கணக்குறிப்பு 

அ) வினைத்தொகை          

ஆ) பண்புத்தொகை         

இ) உம்மைத்தொகை                       

ஈ) உவமைத்தொகை 

7.பொருத்தி விடை தேர்க 

அ) தரளம்                      -  1.  மேகம் 

ஆ) வாவி                       -  2. அலை 

இ) தரங்கம்                    -  3. முத்து 

ஈ) கொண்டல்              -  4.  தடாகம்

அ) 3 4 2 1                            

ஆ) 3 4 1 2                                                      

இ) 3 1 2 3                                                    

ஈ) 4 3 2 1 

8. ‘Shell Seeds’ - என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க 

அ) அறுவடை               

ஆ) வேர்முடிச்சுகள்                           

இ) ஒட்டுவிதை                                     

ஈ)  வேதி உரங்கள்

9. “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் ஆசிரியர் 

அ) மல்லார்மே           

ஆ) பாப்லோ நெரூடா               

இ) வால்ட் விட்மன்            

ஈ) ஆற்றூர் ரவிவர்மா 

10. தொல்காப்பியம் சுட்டும் பள்ளு இலக்கிய வகை யாது ? 

அ) விருந்து               

ஆ) உழத்திப்பாட்டு                            

இ) புலன்                                                             

ஈ) வனப்பு

11. ஈரொற்று மெய்மயக்கம் இடம்பெற்றுள்ள சொல் 

அ) அச்சம்                  

ஆ) காய்ச்சல்                                          

இ) கப்பல்                                                           

ஈ) தேர்தல்

12. பொருத்தமான தொடரைத்  தேர்ந்தெடுக்கவும் 

அ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே -  திருமூலர் 

ஆ) மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்  - கடுவெளிச்சித்தர் 

இ) எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா -  பத்திரகிரியார் 

ஈ) சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் -  பாரதியார்

13.தமிழ் இதழ்களில் தலைப்பு இடுவதை பாரதி எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் 

அ) மகுடமிடல்                                   

ஆ) மகுடம் சூடல்                                         

இ) மகுடம்  சூட்டல்        

ஈ) மகுடம்  

14. சி. சு செல்லப்பா தொடங்கிய இதழின் பெயர் என்ன? 

அ)  கணையாழி                             

ஆ) சுதந்திரதாகம்                                     

இ) ஜீவனாம்சம்                

ஈ) எழுத்து

பகுதி - 2

 

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                                                       3 x 2 = 6

15.  தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு   கூறுகிறது?  

16. “ஏதிலியாய் குருவிகள் எங்கே போயின” - தொடரின் பொருள் யாது? 

17. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையினைக் குறிப்பிடுக

18. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                                                                   2 x 2 = 4

19.. மொழி பற்றி எர்னஸ்ட் காசிரர்  கூறும் கருத்துகள் யாவை ? 

20. “கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது? 

21.. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கது ஏன்?

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                                                                    7 x 2  = 14

22.  தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு  சொற்றொடர் ஆக்குக

கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்து நாடு வந்தனர் .

23. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக 

வலி ,வளி , வழி 

24. ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக 

அ) செங்கயல்                       ஆ) இயைவதாயினும்

25. வல்லின மெய்களைஇட்டும்  நீக்கி எழுதுக

 அ) குமரனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள்.

என் வீட்டற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

ஆ) கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவார் .  

26.  ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக 

அ) அலர்ந்து                       ஆ) நின்றான்

27.தமிழாக்கம் தருக 

அ) Education is  the most powerful weapon which you can use to change the world. 

ஆ) Winners don’t do different things, they do things differently.

28.தா ’ என்னும் வேர்ச் சொல்லை வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம்

வினையாலணையும் பெயர் ஆகிய தொடர்களாக அமைத்து எழுதுக

29. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும்  தொடரமைக்க

 அ) கால்நடை      ஆ) நஞ்சிருக்கும் 

24. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?

 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                                              2 x 4 = 8

31. “சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப்  பொருள் விளக்குக 

32. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்? 

33. விரும்பியதை அடைவது எப்படி? குறள் வழி விளக்கம் தருக.

34.  சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார் 


பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                                             2 x 4 = 8

35. “மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக 

36. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்”  என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள

மொழிப்  பற்றினை எழுதுக 

37. வாளினும் வலிமையானது மொழி என்பதை விளக்குக

38. பழங்குடியினர் இயல்பு மற்றும் அவர்களது வீட்டமைப்பைப் பற்றி எழுதுக. 


பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                                                                           3 x 4 = 12

39. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை 

        பற்றுக பற்று விடற்கு’ - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

                                    அல்லது

வேற்றுமை அணியை விளக்குக.

40 . கீழ்க்காணும் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க 

         உடல் வளர்த்தேன்!                                                                               உயிர் வளர்த்தேன்!!

 

இயற்கை உணவு திருவிழா

 நாள்: தை  5 முதல் 11 வரை   நேரம் மாலை 6 -  10 மணி வரை     இடம்: தீவு திடல் 

                                                                                                                  சென்னை 


ஆவாரம் பூ சாறு                                                                                      தூதுவளைச் சாறு                                           

குதிரைவாலி பொங்கல்                                                                                            சாமைப் பாயசம்

வாழைப்பூ வடை                                                                                                                கேழ்வரகு 

தினணப் பணியாரம்                                                                                                     கம்புப் புட்டு

வால்லாரை அப்பளம்                                                                                                    அகத்திப்பூ போண்டா

முடக்கத்தான் தோசை                                                                                                    முள்முருங்கை அடை                                             

       

                                                                                                                                                                         இன்னும் பல......

41. கீழ்க்ணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.                                                                                                                                                                                         

                                  பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-  புவி 

                                                 பேணி வளர்த்திடும் ஈசன்;  

                                மண்ணுக்குள்ளே சில மூடர் -  நல்ல 

                                                 மாதர் அறிவைக்  கெடுத்தார்.  

                               கண்கள் இரண்டினில் ஒன்றைக் -  குத்திக் 

                                                 காட்சி கெடுத்திட லாமோ?  

                               பெண்கள் அறிவை வளர்த்தால் -  வையம் 

                                                  பேதமை  யற்றிடும் காணீர்

                                                                                           - பாரதியார் 

42.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

அ) Philosophy                                         

ஆ) Idols                                                   

இ) Medicine                                    

ஈ) Religion

43. கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரலைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. 

                            “அரியன கேள் புதியன செய்” (திங்கள் கூடுகை) 

நேரம்: 2 : 30 

பிற்பகல்                                                                                                                                    இடம் : அ.மே.நி.பள்ளி


   2 : 30                    - தமிழ் தாய் வாழ்த்து 

   2 : 35                    - வரவேற்புரை  - மாணவர் இலக்கியச் செல்வன் 

   2 : 40                   - தலைமை உரை - திரு. எழிலன், தலைமைஆசிரியர் 

   2 : 50                   - சிறப்புரை - கவிஞர் வாணி “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை” 

   3 : 45                   - நன்றியுரை - மாணவர் ஏஞ்சலின் 

  4 : 00                   - நாட்டுப்பண்

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக.                                                                                                                                                          3 x 6 = 18

44.  அ) அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும் - இக்கூற்றை முப்பால் வழி விளக்குக.

                                                                                                                     அல்லது

ஆ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்    பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

45.அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க

                                                                                                                       அல்லது

ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு  இணைந்தே இருந்தன-  கூற்றினை மெய்ப்பிக்க

46.  அ) பாரதியின் இதழாளர் முகம்  குறித்து நீங்கள் அறிவன யாவை ? 

அல்லது

ஆ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து  நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக

பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                                   4 + 2 = 6

47.  அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக

 அ) “உண்டால் அம்ம” - எனத் தொடங்கும் பாடலை எழுதுக

 ஆ) ‘விடற்கு’ - என முடியும் திருக்குறளை எழுதுக. 









குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095



11 ஆம் வகுப்பு
REVISION EXAM QUESTION PAPER -APRIL 2022
MODEL QUESTION PAPER - 1
PDF DOWNLODE 👇👇👇👇👇👇👇
    


12 ஆம் வகுப்பு
SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER - 1  &  ANSWER KEY 
PDF DOWNLODE                       CLICK HERE
MODEL QUESTION PAPER - 2   &  ANSWER KEY 
PDF DOWNLODE                       CLICK HERE


10 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here

12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - மொழிப்பயிற்சி -
இலக்கணம் PDF DOWNLODE : Click Here




11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here

சீறாப்புராணம் 
BOOK BACK QUESTIONS : Click Here
சீறாப்புராணம் 
SLIP TEST QUESTIN & ANSWER : Click Here

12 ஆம் வகுப்பு

இயல் - 4

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

one word Questions & Answers PDF : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE





மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360

Image by prabha karan from Pixabay 

Post a Comment

Previous Post Next Post